செய்திமுரசு

மே 18: வடக்கின் அனைத்துப் பாடசாலைகளிலும் துக்கநாள்!

தமிழின இனப்படுகொலை நாளான மே பதினெட்டாம் நாளன்று வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் துக்க தினத்தை அனுடிக்குமாறு வட மாகாண கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அனைத்து பாடசாலைகளிலும் அன்றைய தினம் வடமாகாணத்தின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் அன்றைய தினம் காலை பதினொரு மணியளவில் அனைத்து மாணவர்களையும் எழுந்து அகவணக்கம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கல்வியமைச்சின் செயலகத்திலிருந்து அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் ...

Read More »

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு விசேட பேருந்­து­கள்!

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பேருந்­து­கள் செல்­ல­வுள்­ளன. பேருந்­து­கள் புறப்­ப­டும் இடம், செல்­லும் பாதை தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­­னால் நேற்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் அனைத்­துப் பேருந்­து­க­ளும் காலை 7.30 மணி­ய­ள­வில் முள்­ளி­வாய்க்­கா­லுக் குப் புறப்­ப­டும். காரை­ந­க­ரில் இருந்து ஒரு பேருந்து சுழி­பு­ரம் ஊடாக சங்­கானை, சண்­டி­லிப்­பாய், மானிப்­பாய் வழியே முள்­ளி­வாய்க்­கால் செல்­லும். கட்­டக்­காட்­டில் இருந்து (வட­ம­ராட்சி கிழக்கு) மரு­தங்­கேணி ஊடாக ஒரு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் செல்­லும். அச்­சு­வேலி பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து பேருந்து புறப்­பட்டு கோப்­பாய் கைதடி வீதி வழியே முள்­ளி­வாய்க்­கால் ...

Read More »

அவுஸ்திரேலியாலில் 18 ஆண்டுகளுக்கு முன் தாய் எழுதிய கடிதத்தை முதல்முறையாக படித்த மகன்!

அவுஸ்திரேலியாவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் தாய் உயிரிழந்த நிலையில் தனது மகனுக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை மகன் தற்போது முதல்முறையாக படித்துள்ளார். மெல்போர்னை சேர்ந்தவர் எம்மா. இவருக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பென்சர் என்ற மகன் பிறந்தான். எம்மா கர்ப்பமாக இருக்கும் போதே அவருக்கு எலும்பு புற்றுநோய் இருந்தது, இந்நிலையில் ஸ்பென்சரை பெற்றெடுத்த பத்து மாதத்தில் எம்மா நோய் முற்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் தனது மகன் ஸ்பென்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எம்மா எழுதியிருந்தார். ஸ்பென்சர் வளர்ந்து பெரியவனானதும் அவனிடம் கடிதத்தை ...

Read More »

58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது முகநூல் நிறுவனம்!

பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 58 கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ...

Read More »

என்னுடைய தலையீட்டால் கீத் உயிர் தப்பினார்! – சபாநாயகர் கரு ஜயசூரிய

தன்னுடைய தலையீட்டினால், கடத்தப்பட்ட ஊடகவியலாளர் கீத் நோயர்  காப்பாற்றப்பட்டதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கீத் நோயர்  கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் அளிக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடமும்  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில், விரைவில் சபாநாயகரிடம் வாக்குமூலம் பெறப்படும் எனவும், இந்த கடத்தல் தொடர்பில் கரு ஜயசூரிய எவ்வாறு அறிந்துகொண்டார் என்பது உள்ளிட்ட பல தகவல்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு ...

Read More »

இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுள் 280 பேரின் விபரங்கள் வெளியீடு!

இலங்கையில் இடம்பெற்ற  இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 280 பேர்  காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணமற்போனவர்களில் குறைந்தது 25 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், இவர்கள் 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி  அல்லது அதற்கு அண்மைய நாட்களில் இவர்களின் குடும்பங்களுடன் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் இறுதியாக காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளது. காணாமல் போனவர்களுக்கான இலங்கையின் அலுவலகமானது 2009இல் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிநாட்களில் ...

Read More »

அவுஸ்திரேலியே வீரரின் சாதனை!

அவுஸ்திரேலியே வீரர் ஒருவர் உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை குறைந்த நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார். ஸ்டிவ் பிலைன் (steve plain) என்ற மலையேறும் வீரர் இந்த சாதனை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை, அவர் 117 நாட்களில் அடைந்துள்ளார். போலந்து நாட்டு வீரர் 126 நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததே இதுவரை சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஈபிடிபி உறுப்பினருடன் சிரேஷ்ர ஊடகவியலாளர் வித்தியாதரன் கூட்டு!

ஈபிடிபி உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான சி. தவராசா மற்றும் சிரேஷ்ர ஊடகவியலாளரும், காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ந.வித்தியாதரன் ஆகியோரை இணைப்பாளர்களாகக் கொண்டு யாழில் ‘முன்னோக்கி நகர்வோம்” எனும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (15) முற்பகல்-10 மணி முதல் யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் பின் வீதியில் நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள், குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் விதவைகளின் நிலைபேறான ...

Read More »

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்!

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் ...

Read More »

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அதனைத்தடுத்து நிறுத்துமாறும் வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்ககைதிகளை வவுனியா சிறைச்சாலையில் வைத்திருக்குமாறு கோரியே இன்று காலை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியா மாவட்ட கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளும் இன்று காலை உணவைப் பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்பு ...

Read More »