அவுஸ்திரேலியாலில் 18 ஆண்டுகளுக்கு முன் தாய் எழுதிய கடிதத்தை முதல்முறையாக படித்த மகன்!

அவுஸ்திரேலியாவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் தாய் உயிரிழந்த நிலையில் தனது மகனுக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை மகன் தற்போது முதல்முறையாக படித்துள்ளார்.

மெல்போர்னை சேர்ந்தவர் எம்மா. இவருக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பென்சர் என்ற மகன் பிறந்தான். எம்மா கர்ப்பமாக இருக்கும் போதே அவருக்கு எலும்பு புற்றுநோய் இருந்தது, இந்நிலையில் ஸ்பென்சரை பெற்றெடுத்த பத்து மாதத்தில் எம்மா நோய் முற்றி உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னர் தனது மகன் ஸ்பென்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எம்மா எழுதியிருந்தார். ஸ்பென்சர் வளர்ந்து பெரியவனானதும் அவனிடம் கடிதத்தை கொடுக்க அவன் தந்தை ஜோனாதன் முடிவு செய்த நிலையில் தற்போது கடிதத்தை கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தை கண்ணீர் மல்க ஸ்பென்சர் படித்தார். அதில், என் அன்பான மகன் ஸ்பென்சருக்கு, எங்களுக்கு கிடைத்த விடயங்களிலேயே நீ தான் சிறப்பானவன்.

உன்னை நான் அதிகம் நேசிக்கிறேன், நீ உன்னை நன்றாக பார்த்து கொள்வதோடு, என் அப்பாவையும் நன்றாக கவனித்து கொள் என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து ஸ்பென்சர் கூறுகையில், அம்மா என்னுடன் இல்லாத நாட்கள் கடினமானதாக இருந்தன, தற்போது தந்தை, மாற்றாந்தாய் மற்றும் என் சகோதர, சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக உள்ளேன் என கூறியுள்ளார்.