செய்திமுரசு

வறுமையால் பெற்ற பிள்ளைகளை பௌத்த தேரரிடம் ஒப்படைந்த தந்தை!

வவுனியாவில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளை குடும்ப வறுமை காரணமாக பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில் குடும்பத்தலைவியான தாயார் காவல் துறை நிலையத்தில் தனது இரண்டு பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டபோது பௌத்த தேரரிடமிருந்து இரு பிள்ளைகளையும் அழைத்துவருமாறு தாய், தந்தை இருவருக்கும் காவல் துறையால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் வவுனியாவில் வசித்து வரும் குடும்பம் ஒன்று வறுமை காரணமாக தமது ...

Read More »

பலாலி விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம்!

விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் (JAF) என்று பெயரிடப்படவுள்ளதாக சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தி.மு.கவின் துணைத் தலைவர் கனிமொழி, நேற்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவுக்கான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் இலங்கை அக்கறை கொண்டிருப்பதாகவும் இதன் போது ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் பங்கேற்ற  பிரதமர் செயலக அதிகாரி சுதர்சன குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2011ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் ...

Read More »

காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும்!

காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் முசாபராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- காஷ்மீர் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இது குறித்து ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்து பல்கலைக்கழகமும் விவாதித்து வருகின்றன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. அந்த மாநிலத்தை 2 ஆக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் ...

Read More »

துலக்கம் இல்லாதிருக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்!

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) ஜனாதிபதி தேர்தலை டிசெம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கும் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நியமனப்பத்திரங்களை கோருவதற்கும்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. தேர்தல் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில் முன்னிலையில் விளங்குபவர் குறித்து இதுவரையில் எந்தவிதமான தெளிவும் இல்லாத நிலையொன்று இருப்பது கவனிக்கத்தக்கது. குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் நாட்டில் சகல வற்றையும் நேர்த்தி செய்யக் கூடிய சிறந்த வேட்பாளர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் கருதப்படுகின்ற கோதாபய ராஜபக்ஷ உட்பட எந்தவொரு ...

Read More »

ஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாமின் சாதனையை ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ...

Read More »

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 7,600 கோடி அபராதம்!

வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம் ரூ. 7,600 கோடி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுக்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் எங்கெல்லாம் தங்கள் கிளைகளை வைத்திருக்கின்றனவோ, அங்கெல்லாம் அந்தந்த நாட்டின் விதிகளுக்கேற்ப வரிகளை செலுத்தவேண்டும். சில நாடுகளில் வரி குறைவாக இருக்கும். சில நாடுகளில் அதிகமாக இருக்கும். அப்படி அதிகப்படியான வரியை தவிர்க்க பெருநிறுவனங்கள் பல்வேறு வரி தவிர்ப்பு முறைகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கும் கூகுள் நிறுவனம் ...

Read More »

ஆஸ்திரேலிய அணியை மீண்டும் சுமித் வழிநடத்துவார் – மார்க் டெய்லர்

ஆஸ்திரேலிய அணியை மீண்டும் சுமித் வழிநடத்துவார் என்று முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கேப்டன் பதவியை இழந்ததோடு ஓராண்டு தடையை அனுபவித்தார். தடை காலம் முடிந்து கடந்த மார்ச் மாதம் அணிக்கு திரும்பினார். மேலும் ஓராண்டு காலம் அவருக்கு எந்த போட்டிகளிலும் கேப்டன் பதவி வழங்கப்படாது என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. இதன்படிபார்த்தால் ...

Read More »

இளவரசியின் பாதத்தில் முத்தமிடும் படி பணித்த மெய்ப்பாதுகாவலர்கள்!

தொழிலாளியொருவரை மோசமாக தாக்கி அவமானப்படுத்துமாறு தனது மெய்ப்பாதுகாப்பாளர்களிற்கு உத்தரவிட்டார்   என்ற குற்றச்சாட்டிற்குள்ளான சவுதிஅரேபிய இளவரசி ஹசா பின்ட் சல்மான் அல் சவுடடிற்கு   பிரான்ஸ் நீதிமன்றம் பத்துமாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்காகவே நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. 2016 செப்டம்பரில் பாரிஸில்   உள்ள ஆடம்பர தொடர்மாடியில் நான் பணிபுரிந்துகொண்டிருந்த வேளை சவுதி இளவரசி தன்னை நான் படம்பிடித்து விட்டதாக தெரிவித்து தனது மெய்ப்பாதுகாவலர்களை என்னை தாக்குமாறு உத்தரவிட்டார் என அஸ்ரவ் எய்ட் என்பவர் தாக்கல் செய்திருந்த  மனுவை விசாரணை செய்த ...

Read More »

சீனாவின் கரம் மேலோங்கினால் இந்தியாவுக்கு கடுமையானதாக அமையும்!

தென்­பு­லத்தில் சீனாவின் கரம் ஓங்கும் போது வட­பு­லத்தில் காணப்­படக்கூடிய இந்­திய – சீன எல்­லையில் கடும் பதற்றம் ஏற்­படும். எனவே தான் இலங்­கையின் அர­சியல் நிலைப்­பாடு இந்­தி­யா­வுக்கு முக்­கி­ய­மா­கின்­றது. அதற்­காக குறுக்­கீ­டுகள் தொடர்­பான குற்­றச்­சாட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. மறு­புறம் கடந்த ஆட்­சியில் இடம்­பெற்­ற­தைப்­போன்று இலங்­கையில் மீண்டும் சீனாவின் கரம் மேலோங்­கு­மாக இருந்தால் அதன் தாக்கம் இந்­தி­யா­வுக்கு கடு­மை­யாக இருக்கும் என இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் தமி­ழக துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹுமான் தெரி­வித்தார். இலங்கை என்­பது இந்­தி­யர்­க­ளுக்கு குறிப்­பாக தமி­ழ­கத்­துக்கு மிகவும் நெருக்­க­மான நாடாகும். ...

Read More »

ரணிலை சந்தித்த கனிமொழி உள்ளிட்ட இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தி.மு.க துணைத்தலைவர் கனிமொழி உட்பட இந்தியாவின் சில முக்கிய அரசில் தலைவர்கள் பிரதமரை இன்று காலை அலரி மாளிகையில்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.   இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் ,  இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் ...

Read More »