சீனாவின் கரம் மேலோங்கினால் இந்தியாவுக்கு கடுமையானதாக அமையும்!

தென்­பு­லத்தில் சீனாவின் கரம் ஓங்கும் போது வட­பு­லத்தில் காணப்­படக்கூடிய இந்­திய – சீன எல்­லையில் கடும் பதற்றம் ஏற்­படும். எனவே தான் இலங்­கையின் அர­சியல் நிலைப்­பாடு இந்­தி­யா­வுக்கு முக்­கி­ய­மா­கின்­றது. அதற்­காக குறுக்­கீ­டுகள் தொடர்­பான குற்­றச்­சாட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. மறு­புறம் கடந்த ஆட்­சியில் இடம்­பெற்­ற­தைப்­போன்று இலங்­கையில் மீண்டும் சீனாவின் கரம் மேலோங்­கு­மாக இருந்தால் அதன் தாக்கம் இந்­தி­யா­வுக்கு கடு­மை­யாக இருக்கும் என இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் தமி­ழக துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹுமான் தெரி­வித்தார்.

இலங்கை என்­பது இந்­தி­யர்­க­ளுக்கு குறிப்­பாக தமி­ழ­கத்­துக்கு மிகவும் நெருக்­க­மான நாடாகும். அவ்­வ­கை­யான நெருக்­க­மான உணர்­வுடன் தான் இலங்கை மக்­களை இந்­தி­யர்கள் கரு­து­கின்­றனர். எனவே தான் இலங்கை வாழ் மக்­களை சந்­தித்து பேசு­கின்றபோது வெளி­நா­டொன்­றுக்குச் சென்ற உணர்வு எமக்கு ஏற்­ப­டு­வ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

தனிப்­பட்ட விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள இந்­திய யூனியன் முஸ்லிம் லீக் தமி­ழக துணை தலைவர் எம்.அப்துல் ரஹுமான் வீர­கே­சரி பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தென்­புல மக்­களின் எதிர்ப்­புகள் 

இந்­திய தேசத்தில் ஒவ்­வொரு பகு­தி­க­ளிலும் வாழும் மக்­க­ளுக்கு பார­திய ஜனதா கட்­சியின் ஆட்சி மீது பல்­வேறு வகை­யான நிலைப்­பா­டுகள் உள்­ளன. இந்­தி­யாவின் வட புலத்தில் பிர­தமர் நரேந்­திர மோடியின் ஆட்சி முறைமை குறித்து ஒரு சிறந்த எதிர்­பார்ப்பு உள்­ளது. ஆனால் அதற்கு எதிர்­மா­றான நிலைப்­பாடே இந்­தி­யாவின் தென் புலத்தில் வாழும் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது.

நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, வெளி­நாட்டு உற­வுகள், விவ­சா­யத்­து­றையை முன்­னேற்­று­வ­தற்­கான வழி­மு­றைகள் இவற்றில் காட்டக் கூடிய ஆர்­வத்தை தாண்டி மத  ரீதி­யி­லான செயற்­பா­டு­களில் ஆழ­மாக செயற்­ப­டு­கின்­ற­மையே தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் மீதான தென் புலத்தின் எதிர்ப்­புக்­க­ளுக்கு கார­ண­மா­கின்­றது.

அதே போன்று வட புலத்தில் பெரு­வா­ரி­யாக வாழக் கூடிய இந்து மக்­கள் ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு பண்­பாடு, ஒரே வடி­வி­லான வணக்க வழி­பாட்டு முறை என்ற இலக்கை நோக்கி போவ­தாக பார­திய ஜனதா கட்சி குறிப்­பிட்­ட­மை­யி­னா­லேயே வட­புல மக்கள் வர­வேற்­கின்­றனர் .

இதில் தவ­றேதும் கிடை­யாது. ஆனால் இந்­தி­யா­வி­னு­டைய தனி சிறப்­பாக நாம் கரு­தக்­கூ­டிய பன்­முகத் தன்மை, சகல மதத்­தையும் மதித்து செயற்­படக் கூடிய மத சார்­பற்ற நிலை என்­பன கேள்­விக்­கு­றி­யாக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் இந்த தனிச்­சி­றப்பை இந்­தி­யா­வி­னு­டைய தென் புல மக்கள் அதி­க­மாக விரும்­பு­கின்­றனர். எனவே தான் பிர­தமர் நரேந்­திர மோடியின் நட­வ­டிக்­கைகள் விரும்­பத்­த­காத விட­யங்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன.

காஷ்மீர்

காஷ்மீர் விவ­கா­ரத்தில் காஷ்­மீ­ருக்­கான தனி சிறப்பு அந்­தஸ்தை மத்­திய அரசு நீக்­கி­யி­ருக்­கி­றது. காஷ்­மீ­ருக்­கான சிறப்­பு­ரி­மைகள் தொடர்­பான அர­சியல் சாசனம் நீக்­கப்­பட்­ட­மையே இந்­திய அர­சியல் சாச­னத்­துக்கு முர­ணா­னது என்­பதே எமது நிலைப்­பா­டா­கவும் காணப்­ப­டு­கின்­றது. இந்­திய அர­சியல் சாச­னத்தில் 370 என்ற பிரிவு உரு­வாக்­கப்­பட்டபோது  காஷ்­மீ­ருக்­கு­ரிய தனி அந்­தஸ்தை அந்த மக்கள் விரும்­பு­கிற காலம் வரை நீடிக்கும். அந்த மக்கள் விரும்­பா­விடின் மாற்­று­வ­தற்­கான சந்­தர்ப்பம் தாரா­ள­மாக உள்­ளது. இதுவே இந்­திய அர­சியல் சாச­னத்தில் 370 பிரிவின் உறு­திப்­பா­டா­கவும் அமைந்­துள்­ளது.

சிறப்பு அந்­தஸ்தை நீக்­கு­வ­தற்கு முன்னர் ஜம்முகாஷ்மீர் மக்­களின் ஆணையை மத்­திய அரசு பெற்­றி­ருக்க வேண்டும். அவ்­வாறு காஷ்மீர் மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெறாது சிறப்பு அந்­தஸ்து நீக்­கப்­பட்­டதன் ஊடாக இந்­திய அர­சியல் சாசன சட்டம் மீறப்­பட்­டுள்­ளது. எனவேதான் எமது எதிர்ப்பை வலு­வாக தெரி­வித்து வரு­கின்றோம்.

பன்­முக தன்­மைக்கு சவா­லாகும் ஒற்­றைப்­போக்கு இந்­தி­யாவில் பல்­வேறு மாநி­லங்கள் பல்­வேறு மத கலா­சா­ரங்­களைக் கொண்­டுள்­ளன. இந்த மாநி­லங்கள் தனித்­தனி  மொழி சிறப்பு மிக்­க­வை­யாகும். ஒவ்­வொரு மாநி­லத்­துக்கும் சுயாட்சி முறை காணப்­ப­டு­கி­றது. எனவே தான் மத்­தியில் கூட்­டாட்சி, மாநி­லத்தில் சுயாட்சி என்று கூறு­கின்றோம். மத்­தியில் இருக்கும் போது அனை­வ­ரு­டனும் ஒன்­றி­ணைந்து ஆட்சி செய்ய வேண்டும். மாநி­லங்­களில் ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய மொழி, மத, கலா­சாரம் போன்ற விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஆட்­சியே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

சுயாட்­சியைக் கொண்­டி­ருக்கக் கூடிய தனித்­தனி மாநி­லங்­க­ளுக்­கான உரி­மை­களை எல்லாம் அழித்­து­விட்டு மத்­தியில் இருந்து அனைத்து மாநி­லங்­க­ளையும் ஆட்சி செய்­து­விட வேண்டும் என்ற ஒற்றை நோக்கு பார்­வை­யுடன் பிர­தமர் நரேந்­திர மோடி செயற்­பட முயற்­சிக்­கின்­றமை இந்­தி­யா­வி­னு­டைய தனிச்­சி­றப்பு பார்­வைக்கு நேர் எதி­ரா­ன­தாகும். எனவே இதுவரை காலம் காணப்­பட்ட இந்­தி­யா­வி­னு­டைய தனிச்­சி­றப்பு தற்­போ­தைய ஆட்­சியின் கீழ் குழி தோண்டி புதைக்­கப்­பட்டு விடுமோ என்ற அச்சம் எம் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது.

வெளி­நா­டு­க­ளு­ட­னான உற­வுகள் 

வெளி­நா­டு­க­ளினால் கேட்கக் கூடிய தேவை­க­ளுக்கு ஏற்ப அந்­தந்த நாடு­க­ளுக்கு வழி­காட்­டல்­களை வழங்­கி­விட்டு இந்­தி­யாவில் தனக்­கேற்­ற­வாறு பார­திய ஜனதா கட்சி ஆட்­சியே முன்­னெ­டுக்­கின்­றது. எனவேதான் சமஷ்டி ஆட்சி முறைமை விட்டு விலகி ஒற்றை ஆட்­சியை நோக்கி பய­ணிக்­கின்­றதா என்ற ஐயப்­பாடு ஏற்­ப­டு­கின்­றது. இந்­தி­யாவின் வெளி­நாட்டுக் கொள்­கை­களில் பார­திய ஜனதா கட்­சி­யி­னு­டைய அர­சாங்கம் தெளி­வான கொள்­கை­யுடன் உள்­ளதா என்ற சந்­தே­கமும் காணப்­ப­டு­கி­றது. ஏனென்றால் சொந்த நாட்டில் எந்த கொள்­கையைக் கொண்­டி­ருக்­கி­றார்­களோ அதன் பிர­தி­ப­லிப்­பா­கவே வெளி­நாட்டு கொள்­கை­களும் அமையும்.

மாநில சுயாட்­சியை மதித்து நடக்க வேண்­டி­ய­தி­லி­ருந்து விலகி இந்­தி­யா­வி­னு­டைய பன்­முகத் தன்­மையை அழித்து ஏனைய நாடு­க­ளுக்கு சுயாட்சி முறை­களில் போதிப்­பது எந்­த­ளவு ஏற்­பு­டை­யது. இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான நட்­பு­றவு என்­பது அர­சியல், இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லா­ன­தா­கவும், காலா கால­மாக தொன்­டு­தொட்டு வந்த உற­வா­க­வுமே அமைந்­துள்­ளது.

இதனை மேலும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் அமை­யப்­பெற்ற இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான கப்பல் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னூ­டாக இரு நாட்டு மக்­க­ளுமே அந்­நி­யோன்­ய­மாக பழகக் கூடிய வாய்ப்­புக்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் ரஷ்­யாவின் விருப்­பத்­துக்கும் வேண்­டு­கோ­ளுக்கும் அமை­வாக இந்­தி­யா­வி­லி­ருந்து ரஷ்­யா­விற்கு கப்பல் சேவை ஆரம்­பிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இலங்கை அர­சி­யலில் இந்­திய குறுக்­கீடு  

இலங்­கையின் அர­சியல் விவ­கா­ரங்­களில் இந்­தி­யாவின் தாக்கம் என்­ப­தெல்லாம் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய விட­யங்­க­ளா­கவோ அல்­லது நிரூ­பிக்க கூடி­ய­வை­யா­கவோ இல்லை. அண்­டைய நாடு பல­மா­ன­தாக காணும் பட்­சத்தில் இவ்­வாறு பழி­சு­மத்­து­வது சாதா­ரண விட­ய­மாகும். ஒரு நாட்­டி­னது அர­சியல் மற்றும் தேர்தல் சூழ்­நி­லைகள் அதற்கு அப்­பா­லா­ன­தொன்­றாகும். எனவே கடந்த ஆட்­சி­மாற்ற தேர்­தலில் இந்­தி­யாவின் குறுக்­கீடு காணப்­பட்­ட­தாக கூறு­வ­தெல்லாம் ஏற்­றுக்­கொள்ளக்கூடி­ய­தாக இல்லை.

கடந்த ஆட்சி முறையை நன்கு பரி­சீ­லித்து வாக்­க­ளித்­ததன் பிர­தி­பலிப்­பா­கவே இது காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு பார்­வை­யி­னையே இந்­திய மக்கள் இலங்கை மீது கொண்­டுள்­ளனர்.

மேலும் இலங்­கையின் கடந்த ஆட்சி சீனா­வுடன் மிக நெருங்­கிய உற­வு­களை கொண்­டி­ருந்­தது. நட்பு ரீதி­யி­லான உறவு என்­றாலும் கூட எல்­லைக்­கோட்டின் அடிப்­ப­டையில் இந்­தி­யா­விற்கும்  சீனா­விற்கும் இன்று வரை கசப்­பு­ணர்வு தொடர்­கின்­றது. இந்­தி­யா­வுடன் சீனா போர்­தொ­டுத்­த­போது இலங்­கை­யையும் ஒரு தள­மாக்க சீனா முயற்­சித்த போதிலும் அது வெற்­றி­ய­ளிக்க வில்லை.

ஆனால் வர்த்­தக ரீதி­யாக தற்­போது சீனா இலங்கை அர­சாங்­கத்­துடன் மிக நெருக்­க­மான உற­வு­களை கொண்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்­தி­யா­விற்கு எதி­ரா­ன­தொரு போர் மீண்டும் ஏற்­படும் பட்­சத்தில் இலங்­கை­யையும் ஒரு தள­மாக பயன்­ப­டுத்தும் உள்­நோக்­குடன் இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றதோ என்ற சந்­தேகம் எற்­க­னவே உரு­வா­கி­யது என்­பது உண்­மைதான். ஆட்­சியில் இருப்­ப­வர்­களைக்கொண்டு இந்த விடயம் நிதா­னிக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கையின் தற்­போ­தைய ஆட்­சியை கவ­னத்தில் கொள்ளும் போது கடந்த ஆட்சி மீது இந்­தியா கொண்­டுள்ள சந்­தேகம் தற்­போ­தில்லை. இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான உறவு மேலும் வலு­வ­டைந்து தொடர வேண்­டு­மாயின் இந்த சந்­தே­க­மற்ற நிலை நீடிக்க வேண்டும்.

இலங்கை மற்றும் இந்­தி­யாவில் இடம்­பெறக் கூடிய ஆட்சி முறை மக்­களின் நலன்­களை மையப்­ப­டுத்­தி­ய­தாக அமைய வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அந்த வகையில் ராஜ­ப­க் ஷ­வி­னு­டைய ஆட்சிக் காலத்தில் தமிழ் பேசும் மக்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளி­னார்கள் என்­பதை நினைத்து பார்க்­கின்ற போது, இனி­யொரு முறை அந்த ஆட்சி வந்­து­விடக்கூடாது. அவ்­வாறு வந்தால் இந்த நாடு தாங்­குமா? மக்கள் ஜன­நா­யக உணர்­வு­க­ளோடு வாழ்­வார்­களா? இரு நாட்டு மக்­க­ளுக்கும் இடையில் சுமுக­மான நிலை ஏற்­ப­டுமா? என்­ப­தெல்லாம் கேள்­வி­க­ளா­கவே காணப்­ப­டுன்­கி­றன.

மறு­புறம் ராஜ­ப­க் ஷவின் ஆட்சியின் ஊடாக சீனாவின் கரம் இலங்கையில் மீண்டும் ஓங்கிவிடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. இந்நிலை ஏற்பட்டால் இந்தியா – சீனா என்ற உறவில் ஒரு பதற்றம் உருவாகும். தென்புலத்தின் கரையை விட வடபுலத்தில் அருணாச்சலம் போன்ற மலைப்பிரதேசத்தில் காணப்பட கூடிய இந்திய – சீன எல்லையில் தாக்கம் செலுத்தும். அதே போன்று தென்புலத்தில் இலங்கையிடமிருந்து சீனா பெற்றுக்கொள்ளும் சலுகைகள் வடபுல எல்லையில் கடுமையாக தாக்கம் செலுத்தும்.

எனவே தான் ராஜபக் ஷவின் ஆட்சியின் மீள் வருகை இலங்கை – இந்திய உறவை கடுமையாக பாதித்துவிடும். அதே போன்று இந்தியா தொடர்பான சீனாவின் நிலைப்பாடு மோசமாக செல்வதற்கும் காரணமாக அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை.

(லியோ நிரோஷ தர்ஷன்)