செய்திமுரசு

“தமிழ் துணை இராணுவம்” அமைக்க இரகசியப் பேச்சு!

கடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று திடீரென ஒரே சமயத்தில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களினால் கதிகலங்கி போயுள்ள பாதுகாப்பு உயர் வட்டாரங்கள் இந்த தீவிரவாதத்தை அடக்கும் அவசர நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழ் துணை இராணுவ குழுக்களுக்கு மீண்டும் உயிரூட்ட தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளை அவசரஅவசரமாக ஆரம்பித்து இருக்கின்றன என்று நம்பிக்கையாக அறியவருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது மாற்று தமிழ் போராளிகள் குழுக்களையும் ராசிக் குழு, கருணா குழு, பிள்ளையான் குழு,போன்றவற்றையும் இராணுவத்துணைப் படையாக இலங்கை அரசுத் தரப்பு பயன்படுத்திவந்தது என்பது பரகசியமான ...

Read More »

தற்கொலைக் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா நிதியுதவி!

ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் யுவான் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் நிமல் குமாரிடம் ஒரு கோடி 78 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையைக் கையளித்தார். இந்த நிதியுதவி விசேடமாகக் குண்டுத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும். துயரம் நிறைந்த இந்தத் தருணத்தில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக சீன அரசாங்கம் உறுதியாக நிற்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டை பேணிக்காத்து சமாதானத்தையும் ...

Read More »

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடயங்களை சரியாக அறியாது அல்லது விளங்காமை போன்று பாசாங்கு செய்வதாகவும் சாடியுள்ளது. இதுதொடாபில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக் கழக நிர்வாகத்தின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட இரண்டு மாணவத் தலைவர்களும் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மூன்று கண்ணுடன் சிக்கிய அதிசய பாம்பு!

அவுஸ்திரேலியாவில் மூன்று கண் கொண்ட பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதன் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவுஸ்திரேலியாவின் Humpty Doo பகுதியில் இருக்கும் Arnhem தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் Monty என்ற பெயர் கொண்ட பாம்பை Northern Territory Parks and Wildlife அதிகாரிகள் கண்டுள்ளனர். அந்த பாம்பிற்கு மூன்று கண்கள் இருந்ததாகவும், சுமார் 40 செ.மீற்றர் நீளம் இருந்ததாகவும், இளம் பாம்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது, ஒரு மண்டை ஓடு மற்றும் ஒரு ...

Read More »

ஈஸ்டர் தினத் தாக்குதல்களும் பிளவுபடுத்தலின் அரசியலும்!

ஏன் இலங்கையிலே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன‌? ஏன் இந்தத் தாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலே மேற்கொள்ளப்பட்டன? ஏன் தேவாலயங்களின் மீதும் உல்லாச விடுதிகளின் மீதும் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன? ஏன் இலங்கை இலக்கு வைக்கப்பட்டது? எதற்காக? இவ்வாறான கேள்விகள் ஒவ்வொருவரினது மனதிலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும். நாம் எதிர்கொண்ட போரினதும், முரண்பாடுகளினதும், துருவப்பட்டு போதலினதும் வேதனையான வரலாறு இன்றைய நிலையில் மீண்டும் எங்களை ஒரு நிச்சயமற்ற நிலையினை நோக்கித் தள்ளியிருக்கிறது. இந்த நிலையானது எமது வரலாற்றில் ஒரு துன்பகரமான திருப்பமாகவும் கூட அமையலாம். கடந்த காலத்தில் இடம்பெற்ற ...

Read More »

மீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கியது வடகொரியா !

வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. வடகொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்தது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. இது அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி!

மனுஸ்தீவிலுள்ள இரண்டு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மேற்கொண்டு அந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலறையில் கொண்டுபோய் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலைகொண்டுள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoul இதனை தெரிவித்துள்ளார். மனுஸ் தீவிலுள்ள அகதிகள் அங்கு தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருப்பதால் மிகவும் விரக்தியடைந்துள்ளார்கள் என்றும் அவர்கள் தங்களுக்கான வழிகளை இதுபோன்ற சம்பவங்களின் ஊடாக நாடுவதற்கே விரும்புகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எந்தக்குற்றமும் செய்யாத அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்காக ...

Read More »

சீனாவின் நிலைப்பாடு மாற்றத்திற்கு காரணமாய் அமைந்த இலங்கைக் குண்டுத்தாக்குதல்கள்!

பாக்கிஸ்தானின் ஜாய்ஷ் – இ – மொஹம்மட் இயக்கத்தின் தலைவர் மசூத் அஸ்கர் பாக்கிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகளின் உரைகல்லாகவும், இந்தியா மீதான மறைமுகமான போரொன்றின் முகவராகவும் கடந்த ஒரு தசாப்த காலமாக விளங்கிவந்தார். ஆனால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் தடைகள் கமிட்டி அவரை ஒரு உலகப்பயங்கரவாதி என்று நாமகரணம் சூட்டுவத்றகு முடிவெடுத்த போது, அதற்குச் சீனா இணங்கியதையடுத்து கடந்த புதன்கிழமை இவையனைத்தும் முடிவிற்கு வந்தன. மசூத் அஸ்கரை உலகப் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கு ஐ.நாவில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுவந்த முயற்சிகளுக்கு சீனா ...

Read More »

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல் துறையால்  சுற்றிவளைக்கப்பட்டபோது.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ...

Read More »

குண்டை வெடிக்க வைத்து விட்டு உயிர் தப்பிய சஹ்ரான்! – அரச புலனாய்வாளர்கள்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் காசிம் மரணத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அரச புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தினத்தில் சங்கிரிலால் ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலை ஜஹ்ரானே மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புலனாய்வு பிரிவினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஜஹ்ரானும் இன்னொரு தற்கொலை குண்டுதாரியும் ஹோட்டலிற்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் ஆனால் ஜஹ்ரான் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளனர். ஜஹ்ரான்  குண்டொன்றை பொருத்தியிருக்கலாம் அல்லது தொலைவிலிருந்து அதனை வெடிக்க ...

Read More »