செய்திமுரசு

கோத்தா தனி சிங்கள வாக்குகளை குறிவைத்து செயற்பாட்டார்!

சிறிலங்கா  ஜனாதிபதி கோத்தாபயவின் கருத்து இலங்கைக்கே ஆபத்தாக அமையும் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றிக்காகத்தான் இத்தகைய கருத்தைத் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது தனி சிங்கள வாக்குகளை குறிவைத்து செயற்பாட்டார். பௌத்த சிங்கள இனவாதத்தையே கக்கினார். அத்தகைய வாக்குகளைப் பெற்றே வெற்றியும் பெற்றார். வெற்றி பெற்ற பின்னரும் இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கின்றது அதற்கு தீர்வு ...

Read More »

பெரியாருக்கெல்லாம் பெரியார் இவர்…!

அது 1892-ம் ஆண்டு வெயில் கக்க துவங்கிய ஏப்ரல் மாதம். சென்னை விக்டோரிய டவுன் ஹாலில் சென்னை மஹாஜன சபையின் கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது பரந்து விரிந்திரிந்த சென்னை மாகாணத்தின் அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். மக்களின் பிரச்னைகளை வந்திருந்த பிரதிநிதிகளிடம் கேட்டு, விவாதித்து முக்கியமானவற்றை பிரிட்டிஷ் அரசிற்கு கோரிக்கையாக அனுப்புவது தான் அந்த கூட்டத்தின் நோக்கம். அந்த கூட்டம் நடந்த கூடம் முழுவதும் மேட்டுக்குடி மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அந்த கூட்டத்திற்கு நீலகிரியிலிருந்து நல்ல அடர் கருப்பு நிறத்தில் நடுவாந்திர உயரத்தில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக போராட்டம்!

கொரோனா பதற்றத்திற்கு இடையில், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுவிக்கக்கோரி அந்த ஹோட்டலுக்கு வெளியே போராட்டம் நடைபெற்றுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்த இப்போராட்டத்தில் 120 பேருக்கு மேல் பங்கேற்றுள்ளனர். மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 70 அகதிகள் இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டலை தடுப்பிற்கான மாற்று இடமாக ஆஸ்திரேலிய அரசு பயன்படுத்தி வரும் நிலையில், போதுமான மருத்துவ சிகிச்சையும் அகதிகளுக்கு வழங்கப்படவில்லை ...

Read More »

மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது?

கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார். குழம்பிப்போன ஆசிரியர், மறுநாள் மாணவரின் வீட்டைத் தேடிப்போனார். அம்மாணவர், மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார். அவர்களிடம் கணினியோ, திறன்பேசியோ கிடையாது. குறித்த மாணவரிடம் பேச முயல்கிறார்ளூ மாணவர் ...

Read More »

எதேச்சதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கிறது! – ஹரிசன்

ஆட்சியைகைப்பற்றி இந்த குறுகிய காலத்திற்குள் மக்களுக்கு தற்போது போன்று நெருக்கடியை ஏற்படுத்திய அரசாங்கமொன்றை இதுவரையில் அறிந்ததில்லை. ஜனநாயக ஆட்சியை புதைத்து விட்டு , எதேச்ச அதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹெரின்சன், அரசாங்கம் சடங்களுக்கு மேல் ஏறிநின்றாவது தேர்தலை நடத்தவே முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் ;இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அட்சியை கைப்பற்றியதிலிருந்து இந்த குறுகிய காலத்திற்குள் நாட்டு மக்களுக்கு இது போன்ற நெருக்கடியை ...

Read More »

கொழும்பு நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலி

கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். தனியார் ஒருவரால் இன்று பகல் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அங்கு அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

Read More »

2 வயதில் கடத்தப்பட்டவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் இணைந்தார்!

சீனாவில் 2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி. இவர்களின் மகன் மாவோ யின். கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்திகதி மாவோ ஜென்ஜிங் தனது 2 வயது மகன் மாவோ யின்னை வீட்டில் இருந்து மழலையர் பள்ளிக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் மாவோ யின் தனக்கு தாகமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து, மாவோ ஜென்ஜிங் அவனை ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் எப்படியானவர்கள் நுழைய முடியும்?

கொரோனா எதிரொலி காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையால், ஆஸ்திரேலியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்கள் மட்டுமின்றி பயணத்தடையினால் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட பயணத்தடையால், தற்காலிக விசா பெற்ற பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்பான்சர் பணி விசாக்கள் மூலம் இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு Fletcher என்பவரின் குடும்பம் சென்ற நிலையில், பள்ளித் தேர்வுகளை முடிப்பதற்காக அவரது 16வயது மூத்த மகன் டெயிலர் இங்கிலாந்திலேயே தங்கியிருந்திருக்கிறார். பின்னர், ஆஸ்திரேலியாவில் உள்ள பெற்றோருடன் ...

Read More »

அஞ்சலி செலுத்த முடியாத அவலநிலை

அச்சுறுத்தல்கள் அடக்குமுறைக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடந்து முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே இந்த நெருக்குதல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ள ராஜபக்ஸக்கள் சிறுபான்மை இன மக்களாகிய தமிழ் மக்கள் மீது கொண்டிருக்கின்ற அரசியல் ரீதியான அணுகுமுறையின் அப்பட்டமான வெளிப்பாடாக இந்த நெருக்குதல்கள் அமைந்திருக்கின்றன. அதனைத் தெளிவாகக் காண முடிகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது அந்த மண்ணில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களை நினைந்துருகி அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்ற ஒரு நிகழ்வு. வருடந்தோறும் நடைபெறுவது. நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெறுவது. ...

Read More »

முதுகெலும்பு இருந்தால் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இருந்து விலகுங்கள்

சிறிலங்கா  அரசாங்கத்தின் போர் வெற்றி மேடையில் இருந்த ஜனாதிபதி, பிரதமர் உட்பட படைப்பிரதானிகள் மீதே போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோத்தாபய அரசிற்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா.பொதுச் சபையில் இருந்து விலகுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் போர் வெற்றி விழா உரை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்குக் ...

Read More »