செய்திமுரசு

சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு  இன்று (20) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது, சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை  தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார். அதனை, எதிர்கட்சி சார்பில் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்த நிலையில், மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து, மஹிந்த யாப்பா அபேவர்தன, சாபாநாயகர் ஆசனத்துக்கு சென்று புதிய சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அத்துடள், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, சத்திய ...

Read More »

அகதிகளின் உரிமைகளை மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு………!

ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு சமர்பித்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா.வின் அனைத்துலக காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், மீளாய்வுக்காக அறிக்கை சமர்பித்துள்ள ஆமென்ஸ்டி அமைப்பு, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களும் அகதிகளும் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்காக ஆளாவதாக கவலைக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களை குறிப்பாக படகு வழியாக தஞ்சமடைந்தவர்களை ...

Read More »

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை -வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க கிம் ஜாங் உன் உத்தரவு?

வடகொரியாவில் உணவு பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், வளர்ப்பு நாய்களை ஒப்படைக்கும்படி அதிபர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. உணவு பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உணவுபற்றாக்குறை குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக ...

Read More »

19ஐ நீக்கி, 20ஐ உருவாக்க அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Read More »

அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள்!

அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள், வடக்கு கிழக்கு தாயக மக்கள் உரிமைக்காக பல தியாகங்களையும் உயிரழிவுகளையும் சந்தித்த இனம் என்பதை சகல அரசியல் தலைவர்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடகிழக்கு தமிழ்மக்களின் அரசியலை தென்பகுதி சிங்கள மக்களின் அரசியலுடன் ஒப்பிடுவது மூடத்தனம். ...

Read More »

அவளுக்கு ஒரு வாக்கு ; நிராகரிக்கப்பட்டது ஏன்?

1931-2020 வரையிலான இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது என்பதனையே கடந்த 5 ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்துக்கான தேர்தலும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வலுப்பெற்று வரும் நிலையில் பெண்கள் உள்ளதையும் இழந்த கதையாகவே பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் புதிய பாராளுமன்றத்திற்கு எட்டு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட ...

Read More »

செவ்வாய் கிரகத்தை நோக்கிய பாதைக்கு ஹோப் விண்கலம் திருப்பி விடப்பட்டது

டெல்டா திரஸ்டர் என்ஜின் முதல் முறையாக இயக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தை நோக்கிய சரியான பாதைக்கு அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் திருப்பி விடப்பட்டது. இது குறித்து முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டு வரும் ‘ஹோப்’ விண்கலம் 1,500 கிலோ எடை உள்ளது. இதில் 3 சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து விண்வெளியில் 1,800 வாட் மின்சாரத்தை தயாரிக்க முடியும். இந்த விண்கலத்தால் தொடர்ந்து 2 ...

Read More »

32 நாடாளுளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்

கடந்த அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 32 உறுப்பினர்ளுக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 5 வருட காலங்கள் பூர்த்தி செய்யாதவர்களே இவ்வாறு ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ஓய்வூதியம் பெற தகுதி பெற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்து 5 வருடங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க வேண்டிய கட்டாயமாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் வாக்குகள் மற்றும் தேசிய பட்டியலில் புதிய உறுப்பினர்களாக பலர் தெரிவாகிய நிலையில், அவர்கள் 4 வருடங்களும் 8 மாதங்களுமே நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளனர். எனவே கடந்த நாடாளுமன்றத்தை முதல் முறையாக பிரதிநிதித்துவப்படுத்திய ...

Read More »

சுரேன்ராகவனின் தேசியப்பட்டியல் ஆசனம் கண்டனத்திற்குரியது!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசியப்பட்டியலுக்கு நியமித்தவரை புறக்கணித்துவிட்டு சுரேன்ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமை குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை சுதந்திரகட்சி பரிந்துரை செய்திருந்தது அதில் பேராசிரியர் ரோகன லக்ஸ்மன் பியதாசவின் பெயர் முதலாவது என அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் எங்களுடைய பரிந்துரையை புறக்கணித்து துரதிஸ்டவசமாக பொதுஜனபெரமுன சுரேன் ராகவனின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் இது குறித்து எங்களிடம் கேட்டிருக்கவேண்டும் அல்லது அறிவித்திருக்கவேண்டும் அவர்கள் அதனை செய்யவில்லை என தெரிவித்துள்ள ...

Read More »

வடக்கின் ஆளுநராக மேஜர் ஜெனரல்……..!

வடமாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளார். இராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழலில் , ஜனாதிபதி கோத்தாபயவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல்(ஓய்வு) பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக  சிறிலங்கா ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.

Read More »