திரைமுரசு

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இரு கிரிக்கெட் வீரர்கள்!

இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார்கள். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இயக்குனர் அஜய் ஞானமுத்து  இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் சந்தனாம் நடிப்பில் உருவாகி வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறும்போது, ‘நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, வடதோராவில் உள்ள எனது வீட்டுக்கு வந்து ...

Read More »

நடிகையை பரிந்துரை செய்த சந்தானம்!

கண்ணன் இயக்கும் புதிய படத்தில், தனக்கு ஜோடியாக நடிக்க ஏ-1 பட நடிகையை நடிகர் சந்தானம் பரிந்துரை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ ‘ஏ 1’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதேபோல், சந்தானம் நடித்துள்ள `சர்வர் சுந்தரம்’, `ஓடி ஓடி உழைக்கணும்’, `மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. தற்போது ...

Read More »

கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்!

கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகைகளையும், கிரிக்கெட் வீரர்களையும் இணைத்து காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது நடிகை அஷ்ரிதா ஷெட்டியும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஷ்ரிதா ஷெட்டி தமிழில் சித்தார்த் ஜோடியாக உதயம் என்.எச்.4, அருள்நிதியுடன் ...

Read More »

ஹாலிவுட் நடிகைக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்!

’மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆப் ஈவில்’ என்ற ஹாலிவுட் படத்திற்காக நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு ஐஸ்வர்யா ராய் குரல் கொடுத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் ’இருவர்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சின்ன இடைவெளிக்கு பின் நடித்திருக்கும் படம் ’மேல்விசாண்ட் மிஸ்ட்ரி ஆப் ஈவில்’. இந்த படத்தை படக்குழு இந்திய மொழிகளில் ...

Read More »

தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது: சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா ஐந்து விஷமிகளிடம் சிக்கித் தவிக்கிறது என்று ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. பிரதான கதாபாத்திரத்தில் ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு என விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், வெறும் 17 திரையரங்குகள் மட்டுமே கிடைத்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ரவீந்திரன் சந்திரசேகரன், ‘மிக மிக அவசரம்’ வெளியீடு தொடர்பான தன் ...

Read More »

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் ஷோபனா!

தமிழ், மலையாள சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்த ஷோபனா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ், மலையாள சினிமாவில் மிக சிறந்த நடிகைகள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தவர் ஷோபனா. இயல்பிலேயே நடனம் கற்றவர் என்பதால் தனது முகபாவத்தில், கண்கள் அசைவில் கூட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அப்படிப்பட்டவர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு ஒதுங்கி, தனது நாட்டிய பள்ளியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார் ஷோபனா. இவர் நடிக்கும் ...

Read More »

லட்சுமி மேனனுக்கு திருமணம்?

கும்கி, சுந்தர பாண்டியன், கொம்பன், றெக்க படங்களில் நடித்த லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இந்த படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை தந்தது. அடுத்ததாக சசிகுமாருககு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் தமிழக ரசிகர்களிடம் மனதில் இடம்பிடித்தார். அதன் பின் கார்த்திக்கு ஜோடியாக ‘கொம்பன்’ படத்தில் நடித்தார். கடைசியாக ‘றெக்க’ படத்தில் ...

Read More »

எனது நடிப்பை பலரும் பாராட்ட காரணம் இதுதான்- சாய் பல்லவி

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தனது நடிப்பை பலரும் பாராட்டுவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். சாய் பல்லவி நடிப்பில் மே மாதம் என்.ஜி.கே படம் வெளியானது. தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து சாய் பல்லவி அளித்த பேட்டி வருமாறு:- ‘‘கேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். நான் சகஜமாகவும் யதார்த்தமாகவும் நடிப்பதாக பலர் பாராட்டுவதற்கு இதுதான் காரணம். நடிகையாக எனக்கு ...

Read More »

பிபிசி வெளியிட்ட தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலில் ஒரே இந்தியப் படம்!

பிபிசி வெளியிட்ட 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியப் படம் இடம்பெற்றுள்ளது.  அது சத்யஜித்ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’ ஆகும். பிபிசி 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலை வெளியிட்டது. இதற்காக 43 நாடுகளில் இருந்து 209 இயக்குநர்களின் படங்கள் முதல்கட்டமாகத் தேர்வாகின. அவற்றில் இருந்து தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 19 மொழிகள் மற்றும் 24 நாடுகளில் இருந்து 64 இயக்குநர்களின் 100 படங்கள் உள்ளன. இதில் முதலிடத்தை ஜப்பான் ...

Read More »

சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்தசெருப்பு!

கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. ...

Read More »