திரைமுரசு

சமந்தாவை முந்திய பூஜா ஹெக்டே

முன்னணி நடிகையான சமந்தாவை நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் முந்தி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்கும் பனிப்போர் நடந்தது.  சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திடீரென தனது சமூக வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் தனது சமூக வலைத்தள கணக்கை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பூஜா விளக்கம் அளித்தார்.  ஆனால் இந்த விளக்கத்தை ...

Read More »

முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளிய விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளியிருக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களைத்தான் சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.  இன்ஸ்டாகிராம் தளத்தை அதிகமான புகைப்படங்களைப் பகிரும் தளமாகவே பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். சில தனிப்பட்ட புகைப்படங்களையும் அத்தளத்தில்தான் முன்னணி நடிகைகள் அதிகம் பகிர்வார்கள்.  தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு தமிழ், தெலுங்கு, மலையாள, ...

Read More »

திடீர் மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் ...

Read More »

தந்தையைப்போல் இசையமைத்து அசத்திய ஏ.ஆர்.ரகுமான் மகள்

சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா பட பாடலுக்கு தனது மகள் இசையமைக்கும் காணொளியை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் திகதி தற்கொலை செய்து கொண்டது, இந்திய திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் கடைசி படமான தில் பெச்சாரா வருகிற ஜூலை 24-ந் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில்வெளிவர உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக டைட்டில் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதனால் பிரபலங்களும், ரசிகர்களும் சுஷாந்த் சிங்கிற்கு ...

Read More »

கவலைகளில் இருந்து மீள இதைச் செய்யுங்கள் – இலியானா யோசனை

தமிழ்,தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை இலியானா, கவலைகளில் இருந்து மீள யோசனை கூறியுள்ளார். தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் கூறியதாவது: “எனக்கு சில நேரங்களில் மனதில் தாங்க முடியாத அளவு வருத்தங்களும் கவலைகளும் ஏற்படும். அந்த நேரத்தில் நான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் போதும் எல்லாமே மாயமாக மறைந்து விடும். எனவே எல்லோரும் இந்த யுக்தியை கையாண்டு கவலைகளில் இருந்து மீளுங்கள். உடற்பயிற்சிகள் செய்யும்போது லட்சியத்தை ...

Read More »

போக்கிரிகளை தண்டிக்க வேண்டும் – பிரசன்னா ஆவேசம்

போக்கிரிகளை தண்டிக்க வேண்டும் என்று நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார். கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைதளத்தில், எவரும்‌ எவருடைய நம்பிக்கையையும்‌ ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய்‌ பேசப்படும்‌ மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரையேன்‌ கேட்பதில்லை இவரையேன்‌ கேட்பதில்லை என்கிற வாதமும்‌ பயன்‌ தராது. அவரவர்‌ நம்பிக்கை ...

Read More »

விஜய் படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் – அக்‌ஷரா கவுடா

விஜய் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தற்போதும் வருந்துவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார். உயர்திரு 420 படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. அதன் பிறகு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் ஆரம்பம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் அதர்வாவின் இரும்புக் குதிரை, ஜெயம் ரவியின் போகன், ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற, சந்தீப் கிஷானின் மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக அக்‌ஷரா சமீபத்திய ...

Read More »

கிரிக்கெட் பார்த்ததே இல்லை… முரளிதரனாக நடிக்க சம்மதித்தது ஏன்?

நடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தமிழில் உருவாகும் இந்த படத்தை, தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தெலுங்கு நடிகர் ராணா ...

Read More »

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்

கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமாக ஐஸ்வர்யாராக்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் ...

Read More »

அமிதாப், அபிஷேக்குக்கு கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் விரைவில் குணமடைய திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியளவில் பல்வேறு மொழி படங்களில் நடித்து அசத்திய அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், பாலிவுட் முதல் கோலிவுட் வரை ...

Read More »