திரைமுரசு

ரஜினியின் அபூர்வ புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா

நேற்று 70-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்தின் அபூர்வ புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கினார். அவர் வெட்டிய கேக் விசே‌ஷமாக வடிவமைக்கப் பட்டு இருந்தது. அதில் ‘‘இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை’’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கேக்கை வெட்டி குடும்பத் தினர் அனைவருக்கும் ரஜினி வழங்கினார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் ...

Read More »

பிக்பாஸ் பிரபலத்துடன் பாம்பாட்டம் ஆடும் ஜீவன்

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் இரண்டு வேடங்களில் பாம்பாட்டம் ஆட இருக்கிறார். ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘பாம்பாட்டம்’. நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு இரட்டை வேடம். கதாநாயகிகளாக டகால்டி படத்தில் ...

Read More »

சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்?

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வந்தனர். இந்நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது ...

Read More »

நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே – பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது கன்னத்தில் ...

Read More »

சின்னத்திரை ‘சித்ரா‘ தூக்கிட்டுத் தற்கொலை!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(29), சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில்  நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமணத் திகதியை முடிவு செய்யவிருந்தார். இந்நிலையில், தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை ...

Read More »

விஜய் சேதுபதி படத்தில் இருந்து சமந்தா விலகல்?

விஜய் சேதுபதி படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால், நடிகை சமந்தா விலகி உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதனால் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா, சேச்சி என்றெல்லாம் சமந்தா அழைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் தனது முக்கியத்துவம் குறைவதால் சமந்தா இந்த முடிவை ...

Read More »

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி….

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகை ஒருவர் மரணமடைந்திருப்பது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர்(வயது 34), யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு ...

Read More »

துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்

 தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித்குமார், தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறாராம். அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தது. முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் ‘பைக்’கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி படமானது. அப்போது, பைக் சறுக்கி அவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதற்காக அஜித் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சண்டை காட்சியில் 7 நாட்கள் நடித்து வந்தார். அதன் பிறகு சென்னை திரும்பினார். ...

Read More »

சாக்‌ஷி அகர்வாலின் புதிய மாற்றம்

எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்‌ஷி அகர்வால் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்‌ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் ...

Read More »

சூர்யா 40 படத்தின் புதிய தகவல்

சூரரைப்போற்று படத்தை அடுத்து, சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், விமர்சகர்கள், பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டினார்கள். இப்படத்தை அடுத்து ’சூர்யா 40’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’சூர்யா 40’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ...

Read More »