சின்னத்திரை ‘சித்ரா‘ தூக்கிட்டுத் தற்கொலை!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(29), சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில்  நடித்து வந்தவர் சித்ரா.

இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமணத் திகதியை முடிவு செய்யவிருந்தார்.

இந்நிலையில், தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.