திரைமுரசு

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஓவியா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஓவியா, சமீபத்தில் நடந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் உருவானது. அதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான பதிவை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவை பலர் கண்டித்தனர். நடிகை காயத்ரி ரகுராமும் “வாயை மூடு. உன்னை அவமதிப்பதற்கு எதுவும் இல்லை. இது தி.மு.கவின் திசை திருப்பும் வேலைதான். ஓவியாவை வேலைக்கு அமர்த்தி இதை ...

Read More »

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா – 17 தமிழ் படங்கள் திரையிட தேர்வு

8 நாட்கள் நடைபெறும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 53 நாடுகளை சேர்ந்த 91 படங்கள் திரையிடப்படுகிறது. 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்கியது. இந்த விழாவில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, ஐ.சி.ஏ.எப். பொது செயலாளர் தங்கராஜ், பிலிம் சேம்பரை சேர்ந்த காட்டகர பிரசாத், ரவி கோட்டாரகரா, நடிகைகள் சுகாசினி, சுகன்யா, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநரும் நடிகருமான மனோபாலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளைச் ...

Read More »

கயல் ஆனந்தியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

கமலி பிரம் நடுகாவேரி படத்தை தொடர்ந்து கயல் ஆனந்தி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். ‘ஏமாலி’, ‘லிசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார். இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் ...

Read More »

எனக்கு அந்தளவுக்கு அறிவு இல்லை – அர்ஜுன்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என புகழ் பெற்ற நடிகர் அர்ஜுன், எனக்கு அந்தளவுக்கு அறிவு இல்லை என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் அர்ஜுன். இவருடைய தங்கை மகன் துருவ சார்ஜா நடிப்பில் உருவாக்கி இருக்கும் செம திமிரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் அர்ஜுனிடம் தேசபக்தி உள்ள நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அர்ஜுன், சினிமாவில் ஒருநாள் முதல்வர் ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் அது போல் செய்ய ...

Read More »

சிவகார்த்திகேயனுக்காக பாடல் பாடிய ஏ.ஆர்.ரகுமான்

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று அயலான் படத்தின் ‘வேற லெவல் சகோ’ என்கிற பாடலை படக்குழு வெளியிட உள்ளனர். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், அப்பாடல் குறித்த ...

Read More »

4-வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்துக்கு இசையமைக்க உள்ளாராம். இயக்குனர் ஷங்கருடன் துணை, இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இப்படத்தை தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனிடையே தான் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டார் வசந்தபாலன். அப்படத்தை ...

Read More »

சித்ராவின் முதல் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

மறைந்த நடிகை சித்ராவின் முதல் படமான கால்ஸ் திரைப்படத்தின்  வெளியீட்டு திகதி  அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் விஜே சித்ரா. சமீபத்தில் இவர் தற்கொலை செய்து கொண்டது இன்றும் அவரது ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் மறைந்த சித்ரா நடித்த முதல் திரைப்படம் “கால்ஸ்”. இந்த படத்தில் சித்ரா கால் சென்டரில் வேலை செய்யும் கனவுகள் நிறைந்த தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்பட ...

Read More »

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடித்துள்ள காடன், ஜகஜால கில்லாடி ஆகிய படங்களின் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தற்போது எப்.ஐ.ஆர். எனும் படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ...

Read More »

நடிகை அனிதாவுக்கு குழந்தை பிறந்தது

தமிழில் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை அனிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2013-ல் ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அனிதா ...

Read More »

திருமணத்துக்கு பின் அதிக பட வாய்ப்புகள் வருகிறது – நடிகை ஆனந்தி

சமீபத்தில் திருமணமான நடிகை ஆனந்தி, திருமணத்துக்கு பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார். கயல், விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்று தொடர்ந்து அழுத்தமான கதைகளில் நடித்து வரும் ஆனந்தி தற்போது ராஜசேகர் துரைசாமி இயக்கிய “கமலி பிரம் நடுக்காவேரி” படத்தில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் ஆதரவாக இருக்கிறார். நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான் அவர் ஆசை. திருமணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் வராது என்பார்கள். ...

Read More »