திரைமுரசு

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், ...

Read More »

3 வயது மகளுக்கு நடனத்தை கற்றுக் கொடுக்கும் பிரபல நடிகை

தமிழில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை, தனது மகளுக்கு நடனத்தை கற்றுக் கொடுத்து வருகிறார். ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் கேரள நாயகி கதாபாத்திரமாக அறிமுகமாகிய அசின் அந்த படத்தில் ஜெயம் ரவியிடம் பேசும் ‘அய்யடா..’ எனும் வசனம் அப்போது பிரபலமாகியது. தொடர்ந்து கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் என பெரும் ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் அசின் நடித்தார். இதனைத் தொடர்ந்து அப்படியே பாலிவுட்டில் தடம் பதித்த ...

Read More »

கோலிவுட் முதல் பாலிவுட் வரை குவியும் பட வாய்ப்பு..

நடிகை ராஷி கண்ணா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ...

Read More »

கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன்

முன்னணி இயக்குனராகவும் தற்போது நடிகராகவும் இருக்கும் செல்வராகவனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக்காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை ...

Read More »

பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைக்கு ரூ.8 கோடி சம்பளம்?

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் பிரபாஸ், சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டார் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமான நடிகைகளை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் ஜோடி சேர்ந்த பிரபாஸ், ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சனோனுடன் நடித்து வருகிறார். ...

Read More »

ரசிகர்களுக்கு சூர்யா – கார்த்தி நிதியுதவி

கரோனாவால் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் ரசிகர்களுக்கு சூர்யா – கார்த்தி நிதியுதவி வழங்கியுள்ளனர். கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து சூர்யாவின் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்தார்கள். கரோனா முதல் அலையின்போது தொடர்ச்சியாக சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினமும் உணவளித்து வந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தினமும் வெளியாகும். அதேபோல், கரோனா 2-வது அலையிலும் தொடர்ச்சியாக உதவிகள் செய்யத் தொடங்கினார்கள். இது சூர்யாவை மிகவும் நெகிழவைத்தது. தற்போது ரசிகர்களுக்கு நிதியுதவி செய்துள்ளார் சூர்யா. கரோனாவால் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் தனது ரசிகர்களின் பட்டியலைக் கேட்டுப் ...

Read More »

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ராணா

நடிகர் ராணா 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் நடிப்பில் தற்போது விராட பருவம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ராணா வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. விராட பருவம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தெலுங்கானா ...

Read More »

தொடர்ந்து தொகுப்பாளராக முடிவெடுத்த ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் கலக்கும் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்து இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் பின்னர் பிரபாசுக்கு ஜோடியாக சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அப்பாவை போன்றே மகளும் பன்முகத்திறமை கொண்டவராக விளங்குகிறார். நடிப்பு, இசை மற்றும் பாடல்கள் பாடுவது என சினிமாவில் பல துறைகளில் கால்பதித்த ஸ்ருதி ஹாசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொகுப்பாளராக ...

Read More »

வெப் தொடருக்காக சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா

நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. நடிகை சமந்தா, அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக அவர் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் ...

Read More »

திருமணம் ஆகிவிட்டதா… ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். நடிகையும், பாடகியான இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகியிருந்த ‘கிராக்’ திரைப்படத்தில், நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் இருந்த ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ‘திருமணம் செய்து கொண்டீர்களா?’ என ...

Read More »