திரைமுரசு

எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த்

தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு  வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் எதிரப்பு தெரிவித்ததை அடுத்து  இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா  நிறுவனம் ...

Read More »

சத்யராஜ் நடித்திருப்பதால் `பாகுபலி 2′ படத்திற்கு கர்நாடகாவில் தடை?

பாகுபலி 2′ படத்திற்கு தடைக்கோரி கர்நாடகாவில் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். `பாகுபலி 2′ படம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதால் அப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஸ்வாரஸ்ய தகவல் வந்து  கொண்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான `பாகுபலி 2′ இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 28-ஆம்  தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதில் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.  அது என்னவென்றால், கர்நாடகாவில் படத்தை ரிலீஸ் செய்ய தடை கேட்டு கர்நாடக ஆதரவு அமைப்புகள் போராட்டம் நடத்தி  ...

Read More »

ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு

ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘மகளிர் மட்டும்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் தொடங்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களையும் ...

Read More »

தனுஷ் தயாரிக்கும் மலையாள படம்

மலையாளத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக தயாரிக்க உள்ளார். விஜய், அஜீத், சூர்யாவுக்கு மலையாளத்திலும், தனி ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் மம்முட்டி, திலீப் நடித்த ‘கம்மத் அண்ட் கம்மத்’ என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ் ஆகவே வருகிறார். தற்போது தனுஷ் மலையாளத்தில் படம் தயாரிக்கிறார். தனுசின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாளப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகரான டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இதை டோமினிக் அருண் ...

Read More »

உனக்கு ஏன் இந்த வேலை? கார்த்தியை கேட்ட வெள்ளைக்கார நண்பர்கள்

நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, எனது வெள்ளைக்கார நண்பர்கள் கூட ’உனக்கு ஏன் இந்த வேலை’ என்றுதான் கேட்டார்கள் என நடிகர் கார்த்தி கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ள படம், ‘காற்றுவெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டில் பேசிய கார்த்தி, ’நான் மணிரத்னம் சாரிடம் ஜூனியர் மோஸ்ட் உதவி இயக்குநராக இருந்து ஹீரோவாகிவிட்டேன். எனக்கு இது ஒரு கனவு படம் என்றால் அது பொய்யாக இருக்கும். ஏனென்றால் எனக்கு இப்படி ஒரு ...

Read More »

நடுரோட்டில் உருண்டு புரண்ட நயன்தாரா!

டோரா’ படத்திற்காக ஒரு காட்சியில் நயன்தாரா நடுரோட்டில் உருண்டு புரண்டதாக இயக்குநர் தாஸ் ராமசாமி கூறியுள்ளார். அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம். தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘டோரா’. இது நாயகியை சுற்றி சுழலும் கதை. நயன்தாராவுடன்  தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். “நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான காட்சிகளை அப்படியே நடித்துக்  கொடுப்பதில் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் நயன்தாரா எளிமையாக நடந்து கொள்வார். ஒவ்வொரு  காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் ...

Read More »

தனுஷ் மீது உரிமை கோரும் வழக்கு: மருத்துவர்கள் அறிக்கையில் புதிய தகவல்

தனுஷ் உடலில் இருந்து சில அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்ட‌ன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க ...

Read More »

ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நான்கு கெட்டப்பில் நடிக்கிறேன்!

ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நான்கு கெட்டப்பில் நடிப்பதாக இருந்த ரகசியத்தை சிம்பு வெளியிட்டுள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்ருது வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது அனைவருக்கு தெரிந்ததே. தற்போது நான்காவதாக ஒரு கெட்டப்பிலும் இதில சிம்பு நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிம்புவே கூறியுள்ளார். அவர் சொல்லும்போது, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் டீசரை பார்த்துவிட்டு, நீங்களாக கற்பனை செய்து இந்த கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒரு வித்தியாசமான ...

Read More »

கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: கார்த்திக் நரேன்

கூகுளை பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ 75 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் 75-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. “கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தை நான் தயாரிக்கிறேன்” என்றார். கார்த்திக் நரேன் பேசும்போது… “என்னுடைய பூர்வீகம் ஊட்டி. கோவையில் வசிக்கிறோம். நடுத்தர குடும்பம். சினிமா ஆசையில் சென்னை வந்தேன். ...

Read More »

நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்

முன்னாள் உலகி அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் உள்ள பிரபல லீலாவதி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணராஜ் ராயை காண அவரது மகளான ஐஸ்வர்யாராய் துபாயில் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து மும்பை விரைந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷேக் பச்சன்,  நியூயார்க்கில் தனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு மும்பை திரும்பினர். மேலும் கிருஷ்ணராஜ் ராய் உடல்நிலையை மருத்துவமனைக்கு ...

Read More »