திரைமுரசு

விஜய்க்காக மீண்டும்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் `மெர்சல்’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் விஜய்க்காக மற்றொன்றையும் செய்யவிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. முதல்முறையாக விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிக்கின்றனர். சமீபத்தில் மெர்சல் படத்தில் தனது காட்சிகளை முடித்த நடிகர் விஜய் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு ...

Read More »

விறுவிறுப்பாக நடைபெறும் `இமைக்கா நொடிகள்’ டப்பிங்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா – நயன்தாரா – ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் `இமைக்கா நொடிகள்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகி வரும் படம் `இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் சாதுவான கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ...

Read More »

பிரியங்காவை மனம் திறந்து பாராட்டிய சோனாக்ஷி சின்கா

இந்தி நடிகை பிரியங்கா சுய நலமாக இல்லாமல், பொது நலத்துடன் செயல்படுகிறார் என்று சோனாக்ஷி சின்கா மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்தி திரை உலகில் ஒரு பிரபல நடிகையை மற்றொரு பிரபல நடிகை பாராட்டுவது மிகவும் அரிது. ஆனால், சமீபகாலமாக ஒரு நடிகையை மற்றொருவர் பாராட்டும் நிலை உருவாகி இருக்கிறது. பிரியங்கா சோப்ராவை உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டுக்கு நல்எண்ண தூதுவராக ஐ.நா சபை நியமித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உதவும் பணியில் பிரியங்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது பற்றி கூறியுள்ள ...

Read More »

பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்: கங்கனா ரணாவத்

பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும், அவர்களது சுதந்திரத்தில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார். இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது வாழ்க்கை அனுபவம் பற்றி கூறுகிறார்… “தற்போது ‘சிம்ரன்’ என்ற இந்தி படத்தில் அதே பெயரில் நடிக்கிறேன். பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். யாரும் நமது வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்பது இந்த படத்தின் நாயகி குணம். உண்மையில் எனது குணமும் இது தான். சின்ன வயதில் திருடி இருக்கிறேன். என்னுடைய தாத்தாவிடம் நான் ...

Read More »

விஷாலை கிண்டலடித்த சேரன்!

துப்பறிவாளன் படத்தின் டிக்கெட் விலையில் ரூபாய் 1 வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்ததற்கு இயக்குனர் சேரன் கிண்டலடித்துள்ளார். விஷால் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் வெளியானதையொட்டி, திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் ...

Read More »

எம்.ஜி.ஆர். வேடம் போட்டு அசத்திய ஆர்.பாண்டியராஜன்

இயக்குனரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். போல் வேடம் போட்டு அனைவரையும் கவர்ந்திருக்கிறார். ‘கன்னிராசி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.பாண்டியராஜன். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே, ‘ஆண்பாவம்’ படத்தை இயக்கி அதில் நடிகராகவும் அறிமுகமானார். இதில் இடம் பெற்ற ‘காதல் கசக்குதய்யா’ பாடல் தற்போதுள்ள இளைஞர்களுக்கும் கூட பிடித்த பாடலாக இருந்து வருகிறது. கதாநாயகன், குணச்சித்திர வேடம், காமெடியன், வில்லன் என தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் பாண்டியராஜன். இவர் நடிப்புக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ...

Read More »

திருமணம் பற்றி கேள்வி கேட்பதா? : ஸ்ரேயா

முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, 30 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று கேட்டதற்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 60 வயது நடிகர் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தால் யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் ஒரு நடிகை குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால், எப்போது திருமணம் என்ற கேள்வியை அவரிடம் கேட்பது வாடிக்கை. 30 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஸ்ரேயாவிடம் ...

Read More »

அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் நடிகர் விஜய். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல் வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். நடிகர் கமல் ஹாசன் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நடிகர் ...

Read More »

மன்மத நாயகனுடன் மீண்டும் இணையும் ஜோதிகா!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக மன்மத நாயகனுடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜோதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி ரிலிசூக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா. ‘காற்று வெளியிடை’ ...

Read More »

பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை: ஜோதிகா

தற்போது பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று ஜோதிகா வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார். பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. சூர்யா தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘மகளிர் மட்டும்’ படம் குறித்து ஜோதிகா கூறியிருப்பதாவது: சாலை பயணத்தின் போது மருமகள் ஒருவர் தன்னுடைய மாமியாரையும், அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பது தான் கதை. இக்கதை எப்படியொரு ஆணிடமிருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக ...

Read More »