திரைமுரசு

குழந்தைகளுக்கான படத்தில் ஜி.வி.பிரகாஷ்!

விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் குழந்தைகளும் ரசிக்கும்படியாக உருவாகி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படங்கள் சமீபகாலத்தில் குறைந்துவிட்டன. ஜீவி.பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படம் அதை பூர்த்தி செய்யும் என்று படக்குழு கூறுகிறது. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாயிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நாய் ஒன்று முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா ...

Read More »

ரூ.800 கோடியில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்!

மணிரத்தினத்தின்   கனவுப் படமான பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். படத்தில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ...

Read More »

நடிகராக அவதாரம் எடுத்த கார்த்திக் நரேன்!

துருவங்கள் பதினாறு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் நரேன், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்த படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் ‘நராகசூரன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் கார்த்திக் நரேன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். சந்தீப் கிஷன் ...

Read More »

ஸ்ரீதேவியின் மாம் சீன மொழியில்!

ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்’ படத்தின் புதிய சீன   வெளியீட்டு திகதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது 300-வது திரைப்படமான `மாம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். இந்தியா மட்டுமின்றி, போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், ...

Read More »

ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி டனியா மல்லெட் காலமானார்!

1964ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ்பாண்ட் கோல்ட் பிங்கர் படத்தின் நாயகி டனியா மல்லெட் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் – நடிகைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வந்த படம் கோல்ட் பிங்கர். 1964ம் ஆண்டு இந்த படம் வெளியானது. கய்ஹமில்டன் இயக்கினார். இதில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்தார். ஜேம்ஸ் பாண்ட் காதலியாக நடித்தவர் டனியா மல்லெட். இந்த படத்துக்கு பிறகு பெரிய படங்களில் அவர் ...

Read More »

வித்தியாசமான கதாபாத்திரத்தில் விவேக்!

விவேக் வெள்ளை பூக்கள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவர் அளித்துள்ள பேட்டி: டிரைலர் பார்க்கும்போது  காவல் துறை  வேடம் போல தெரிகிறதே? அமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற ...

Read More »

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவனா!

தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா, தற்போது புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கதாநாயகிகள் பெரும்பாலும் தங்கள் உடல்தோற்றம் குண்டானால் அந்த படத்தை வெளியிட மாட்டார்கள். அவர்களிடம் இருந்து பாவனா மாறுபட்டு இருக்கிறார். சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த பாவனா கடந்த 2010ம் ஆண்டு அஜித்துடன் அசல் படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார். அதன்பிறகு மலையாளம், கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா கடந்த ஆண்டு தனது நண்பரும், கன்னட பட தயாரிப்பாளருமான நவீனை காதல் ...

Read More »

‘எனக்குப் போட்டி நான் மட்டுமே’!

தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, எனக்கு நானே போட்டி என்று கூறியிருக்கிறார். அனுஷ்காவின் ரசிகர் ஹேம்சந்த் என்பவரால் முகநூலில் அனுஷ்கா பெயரில் ஒரு பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவரே அந்தப் பக்கத்தை நிர்வகித்து வந்த நிலையில், அனுஷ்கா தனது ஒரு பிறந்தநாளின்போது அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன் பின்பு இந்தப் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைந்தனர். தற்போது இந்த முகநூல் பக்கத்தின் ரசிகர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அனுஷ்காவிடம் ‘சினிமாவில் உங்களுக்குப் போட்டியாக யாரை ...

Read More »

பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்! – பாலக் லால்வானி

குப்பத்து ராஜா படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பாலக் லால்வானி, ரசிகர்கள் பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘குப்பத்து ராஜா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரில் அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர், தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். “இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச ...

Read More »

பள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:- “என்னை சந்திக்கிறவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது, நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம் செய்து கொள்வேன். தமிழில் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தை ...

Read More »