திரைமுரசு

தனுசுக்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை சென்றது. ரஜினி படத்துக்காக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தற்போது ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் ...

Read More »

சீனாவில் வெளியாகும் சமந்தா படம்!

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படத்தை சீனாவிலும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படமே ‘ஓ பேபி’. இப்படம் தென் கொரிய திரைப்படமான மிஸ் கிராணியின் தழுவல் ஆகும். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 70 வயது மதிக்கத்தக்க பாட்டி, குடும்பத்தினரின் அன்பு கிடைக்காமல் தனிமையில் வாடுகிறார். ஒரு நாள் போட்டோ ஸ்டூடியோவுக்கு செல்லும் பாட்டி, கேமரா பிளாஷ் அடித்ததும் மந்திர சக்தி மூலம் ...

Read More »

சிரஞ்ஜீவிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்!

தெலுங்கு திரையுலகில் முதன்முறையாக கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராய், சிரஞ்ஜீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் அவர் தமிழில் பொன்னியின் செல்வனைத் தழுவி மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கில் சிரஞ்ஜீவிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் ...

Read More »

மீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா!

ராட்சசி’ படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து ‘மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை ...

Read More »

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற குஷ்பு!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வரும் குஷ்பு, மீண்டும் சினிமாவில் நடிக்குமாறு ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுள்ளார். தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. சின்னத்தம்பி, அண்ணாமலை, பாண்டியன், சிங்காரவேலன் என வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி ஆனார். இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட இவர், அடுத்து அரசியலிலும் களம் இறங்கினார். தற்போது காங்கிரசின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று டுவிட்டரில் பகிர்ந்த ஒரு பதிவில் மீண்டும் படங்களில் நடிக்கலாமா, வேண்டாமா என்று ரசிகர்களிடம் ...

Read More »

ஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

காற்றின் மொழி படத்தை தொடர்ந்து, ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராட்சசி’ படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் ...

Read More »

ஸ்ரீதேவி மரணம் கணவர் போனி கபூர் என்ன சொல்கிறார்?

ஸ்ரீதேவி மரணம் குறித்து ஓராண்டுக்குப் பிறகு இப்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுபற்றி அவரது கணவர் போனி கபூர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவி தன் உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தார். அங்கு பிப்ரவரி 14-ம் திகதி அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்ததாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ...

Read More »

ரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்!

ரஜினிகாந்த் சினிமாவை பற்றி அறியாமல் உச்சத்துக்கு வந்தவர் என சுகாசினி தெரிவித்துள்ளார். மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் வசந்த், நடிகர்கள் பார்த்திபன், ரகுமான், நடிகை சுகாசினி, இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா உள்பட பலர் கல்ந்துகொண்டனர். இந்த விழாவில் சுகாசினி பேசுகையில், “கமல், ரஜினி நடித்த மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் தான் நடந்தது. அப்போது ரஜினி அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பில் இருந்து கலாகேந்த்ராவின் காரில் தான் வருவார். படப்பிடிப்பு இடைவெளியில் ...

Read More »

விஜய்க்கு மறு மணம்!

அஜித்குமாரின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குநர்  அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி. ‘பொய் சொல்லப்போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு விஜய் தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தார். அவருக்கு 2-வது திருமணம் ...

Read More »

அஜித் படத்தில் ஆங்கில பாடல்!

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன. அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் ...

Read More »