திரைமுரசு

பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கும் அசோக் செல்வன்

 ஓ மை கடவுளே” எனும் பிளாக்பஸ்டர் படத்திற்கு பின் நடிகர் அசோக் செல்வன் பெண் இயக்குனரின் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக  நிஹாரிகா நடிக்கிறார். இவர் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான  “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்க உள்ளார். இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இது ...

Read More »

மாதவன் இயக்கத்தில் நடித்த சூர்யா, ஷாருக்கான்

மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் சூர்யாவும், ஷாருக்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்க, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இந்த ...

Read More »

யாதும் ஊரே யாவரும் கேளிர்

அஜித் பட நடிகை ஒருவர் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார் கனிகா. சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற முக்கியமான படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் வெளியான வரலாறு தான் தமிழில் ...

Read More »

சூர்யா செய்த சமையல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, லாக்டவுனில் வீட்டில் சமையல் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பலரும் தங்கள் ...

Read More »

நேரலையில் கமலுடன் கலந்துரையாவுள்ள ஏ.ஆர்.ரகுமான்

கமல்ஹாசனுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளம் வாயிலாக நேரலையில் கலந்துரையாட உள்ளார். கமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் ஜூன் 11-ந் திகதி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்,  ...

Read More »

அமிதாப் பச்சனுக்காக காத்திருக்கும் பார்த்திபன்

பாலிவுட் உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அமிதாப்பச்சன் சம்மதத்துக்காக காத்து இருப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்து உள்ளார். புதிய பாதை படம் மூலம் இயக்குனரான பார்த்திபன் தொடர்ந்து பல படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கடந்த வருடம் அவர் மட்டுமே நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பட விழாக்களில் திரையிட்டும் பாராட்டுகள் பெற்றது.  இந்த நிலையில் தனது ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பார்த்திபன் தயாராகி வருகிறார். இந்த படம் 1999-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. பார்த்திபனே ...

Read More »

பெண் நக்சலைட் வேடத்தில் பிரியாமணி

விராட பருவம் 1992 எனும் சரித்திர படத்தில் பெண் நக்சலைட்டாக நடித்துள்ள நடிகை பிரியாமணியின் தோற்றம் அடங்கிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு ...

Read More »

சாந்தனுவின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

சாந்தனு இயக்கி நடித்த ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ எனும் குறும்படத்தை பார்த்து விஜய் பாராட்டி உள்ளார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு வேலைகள் இன்றி வீட்டிலேயே இருக்கும் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் மொபைல் போனில் எடுத்த குறும்படங்களையும், வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ‘கொஞ்சம் கொரோனா நிறைய காதல்’ எனும் குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்ற இக்குறும்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். அந்தவகையில் இந்த ...

Read More »

காக்க காக்க 2-ம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் தயார் – ஜோதிகா

காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் தயார் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே விளம்பரப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது, ரசிகர் ஒருவர் ஜோதிகாவிடம் காக்க காக்க 2-ம் பாகம் உருவானால் சூர்யாவுடன் நடிப்பீர்களா? என கேட்டார். இதற்கு பதிலளித்த ஜோதிகா, ...

Read More »

கரோனா தனிமைக் காலம் நிறைவு: போனி கபூர் உற்சாகம்

கரோனா அச்சுறுத்தலால் 14 நாட்கள் தனிமையில் இருந்ததாகவும், தற்போது அது முடிவடைந்ததாகவும் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவர். போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜான்வி கபூர் மட்டும் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் தனது மகளுடன் வீட்டிலிருந்தார் போனி கபூர். அப்போது அவருடன் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ...

Read More »