திரைமுரசு

எனக்கு மாப்பிள்ளையாவது எளிதல்ல!

சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விகளுக்கு பதில் அளித்த காஜல் அகர்வால், தனக்கு மாப்பிள்ளையாவது எளிதல்ல என கூறினார். காஜல் அகர்வால் 34 வயதிலும் இன்னும் கதாநாயகியாகவே முன்னணி ஹீரோக் களுக்கு ஜோடிபோட்டு வருகிறார். அதற்கேற்ப தனது உடற்கட்டை ஸ்லிம் தோற்றத்தில் பராமரிக்கிறார். காஜல் அகர்வாலின் தங்கைக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. எனவே காஜலிடம் அடிக்கடி ‘உங்க கல்யாணம் எப்போது?’ என்ற கேள்வியும் சேர்ந்தே கேட்கப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு காஜல் பதில் அளித்தார். திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா ...

Read More »

சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை!- ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமாவில் நடிக்க நிறம் முக்கியம் இல்லை, திறமை இருந்தால் போதும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ இருக்கிற கருப்பு நிறத்துக்கு நடிகையாக விரும்பலாமா? என்று பலரும் கேலி பேசினர். இது மனதை காயப்படுத்தியது. ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காமல் ...

Read More »

மீண்டும் வரலாற்று படத்தில் பிரபாஸ்!

சுமார் 600 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் ராமாயணம் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வந்தது. இதில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். மலையாளத்திலும் ராமாயணத்தை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராமாயணம் ...

Read More »

மீண்டும் இணையும் சூர்யா-ஆர்யா?

காப்பான் படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபல இயக்குனரின் படத்தில் சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ’காப்பான்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், சூர்யாவும் ஆர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரமின் மகனான துருவை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய ’வர்மா’ படம் டிராப் ...

Read More »

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

மான்ஸ்டர் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். விஷ்ணு விஷால் நடித்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா அய்யாவு. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர். மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. தற்போது ‘ஜெர்சி’ தமிழ் ரீமேக் மற்றும் ‘எப்.ஐ.ஆர்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். இதனை தொடர்ந்து செல்லாவின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இதில் நாயகியாக நடிக்க ...

Read More »

13 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் அதிதிராவ்!

தமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த அதிதிராவ் 13 ஆண்டுகளுக்கு பின் மலையாள படத்தில் நடிக்க உள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ப்ரஜாபதி’. மம்மூட்டி ஹீரோவாக நடித்த இந்த படத்தில், ஹீரோயினாக அதிதி ராவ் அறிமுகமானார்.  2006-ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீசானது. அதன்பிறகு, ‘காற்று வெளியிடை’, ‘பத்மாவத்’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சம்மோஹனம்’ என ஏராளமான தமிழ், இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். இந்த நிலையில், 13 ஆண்டுகள் கழித்து மறுபடியும் மலையாள படம் ஒன்றில் ...

Read More »

பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

ஆந்திர மாநில சிறுமியை பணியில் அமர்த்தி சித்ரவதை செய்ததாக நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில சிறுமி ஒருவர் தி.நகர் பகுதியில் உள்ள நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை செய்த போது சித்ரவதை செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே சிறுமி மீது பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பானுப்ரியாவின் வீட்டில் இருந்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ...

Read More »

அனிதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு வந்த சிக்கல்!

ஜூலி நடிப்பில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை திரைப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டவர் திருச்சியை சேர்ந்த மாணவி அனிதா. இவரது வாழ்க்கையை அனிதா எம்பிபிஎஸ் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் வி.ராஜகணபதி ஈடுபட்டார். பிக்பாஸ் ஜூலி கதாநாயகியாகவும், அஜய்குமார் என்பவர் இயக்குனராகவும் அறிவிக்கப்பட்டு முதல் பார்வையும் வெளியானது. தற்போது இப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. “மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் வி.ராஜகணபதி மற்றும் எஸ்.பாலாஜி தயாரிக்கும் திரைப்படம் ‘டாக்டர். ...

Read More »

ராஜமவுலியின் அறிவுரையை ஏற்ற அலியா பட்!

பிரபல பாலிவுட் நடிகையான அலியா பட், தற்போது ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கி வரும் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் அறிவுரையை ஏற்றிருக்கிறார். உடலை பிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நடிகைகளிடம் அதிகரித்திருக்கிறது. சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ரேயா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நடிகைகள் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த பட்டியலில் நடிகை அலியாபட் இணைந்திருக்கிறார். பாகுபலி படத்தையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் சரித்திர படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். ...

Read More »

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி?

விஜய்யின் அடுத்த படத்தில், அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கிவரும் ‘பிகில்’ படத்தில் தன் பணிகளை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்துக்காகத் தயாராகி வருகிறார் விஜய். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரம் படப்பிடிப்பு என்பதால், நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கால்ஷீட் தேதிகள் பிரச்சினையால் யார் நாயகி என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே இந்தப் ...

Read More »