குமரன்

டெல்டா மாறுபாடு பரவும் நிலையிலும் இலங்கை ஜனாதிபதி பொது முடக்கங்களை எதிர்க்கின்றார்

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் கோவிட்-19 மரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுகளையும் மற்றும் சுகாதார அமைப்பின் சீர்குலைவுகளையும் கையாள்வதற்காக பொது முடக்கம் செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள் இடைவிடாது விடுக்கும் வேண்டுகோள்களை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நிராகரித்துள்ளார். ஜூலை 5 அன்று, இராஜபக்ஷ, கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான பல பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியதுடன், ஜூலை 28 அன்று, வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களையும் தங்கள் வேலைத் தளங்களுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். அதி வேகமாக தொற்றும் டெல்டா மாறுபாட்டால் கோவிட்-19 பரவல் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ...

Read More »

கவலை கொண்டார் மலாலா

தலிபான் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது.  பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன் என மலாலா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலை அமைதியான முறையில் ஒப்படைக்கும்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமைதியான வழியில் அதிகார மாற்றம் ஏற்படும் வரை காபூல் நுழைவாயில்கள் காத்திக்க தலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளாது என்று கூறியுள்ளார். இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் ...

Read More »

‘சியான் 60’

சியான் 60’ படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்

ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் ...

Read More »

கதிர், நரேன், நட்டி இணைந்து மிரட்டும் யூகி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் கதிர், நரேன், நட்டி ஆகியோர் இணைந்து புதிய படத்தில் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் ‘யூகி’. இப்படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பன்மொழிகளில் தயாராகும் இப்படம் ...

Read More »

அரிசி மலை இரகசியம்

கிழக்கு மாகாணம்  இயற்கை   வளங்களால் அழகு பெறும் ஒரு மாகாணம். அதில் திருகோணமலை மாவட்டமும் இயற்கையினை மேலும் அழகு பெறச் செய்கிறது. சுற்றுலாத் தளங்களின் ஒரு பகுதியாக புல்மோட்டை அரிசி மலை காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பகுதியே அரிசிமலை பகுதி. பபளபளப்பான அரிசி போன்ற கற்கள் நிறைந்த இலங்கையின் விசித்திரமான கடற்கரை பிரதேசமாக இது விளங்குகிறது. திருகோணமலை நகர் பகுதியில் இருந்து சுமார் 56 கிலோ மீற்றர் தொலைவில் இவ் அரிசி மலை பிரதேசம் காணப்படுவதுடன், புல்மோட்டை ...

Read More »

‘கொரோனாவில் அரசியல் வேண்டாம்’ – சி.வி வலியுறுத்தல்

கொரோனாவைக் காரணம் காட்டி, அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்கால கொரோனா நிலைவரம் தொடர்பில், இன்று (15) அனுப்பி வைத்துள்ள  ஊடக அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தற்போது மிகவும் ஆபத்தான நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தினசரி 100 – 150 வரை உயிரிழப்புக்கள் இலங்கையில் ஏற்படுகின்றது. எனவே இலங்கையிலுள்ள சகல மொழிபேசும், சகல மதஞ் சார்ந்த எல்லோரும் கொரோனாவின் ...

Read More »

அத்தியாவசியப் பொருள்களை சேமித்து ​கொள்க

கொரோனா தொற்றிலிருந்து உயிரை பாதுகாத்துக்கு கொள்வதற்காக, நாளை திங்கட்கிழமை முதல் சுய பயணக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மிக பொறுப்புடன் நடந்துகொள்ளவும். தேவையான அத்தியாவசிய பொருள்களை சேமித்துகொண்டு வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கவும். “கூடியவகையில் சுயக்கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். வீடுகளைவிட்டு வெளியேறாமல் இருப்பது சகலரும் நல்லது” என்றார். அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் தீர்மானம் தொடர்பில் அதிருப்தி தெரிவித்த அவர், கேக் துண்டுகளை சாப்பிட்டுக்கொண்டு குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இது தீர்மானங்களை எடுக்காமல் மக்கள் படும் துன்பங்களை பார்த்து ...

Read More »

சுகாதார வழிகாட்டல்கள் சட்டமாக்கப்படவுள்ளன – இரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

சிட்னி வாழ் தனி நபர்களும் தனிமைப்படுத்தல் விதிகளும்

சிட்னி பெரு நகரில் தனியாக வாழ்பவர்கள் விருந்தாளி ஒருவரை மட்டும் வீட்டிற்கு வர அனுமதிக்க முடியும். ஜூலை 31ஆம் தேதி, சனிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்தக் கட்டுப்பாடு, தனியாக வாழும் ஒருவர் தன்னைப் பார்க்க வருவதற்காக ஒருவர் பெயரைப் பரிந்துரைக்க முடியும். அவர் குடும்ப அங்கத்தவராகவோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். ஆனால், பரிந்துரைத்து அனுமதி பெற்ற பின்னர், அவரை மாற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் முடக்க நிலையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடித்திருப்பதாக NSW மாநில அரசு ...

Read More »