குமரன்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு யாழ் பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டியுள்ளார். யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு 3.30 மணிக்கு சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார். இதன் பின்னர் இன்று காலை ஏழு மணிக்கு நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. துணைவேந்தர் இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தார் . இதில் மாணவர்களும் கலந்துகொண்டனர்.  

Read More »

அஸ்வின் பதிலால் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் அஸ்வின் பேச்சால், சிவகார்த்திகேயன் மிகவும் நெகிழ்ந்துவிட்டார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானது வேறு எதுவுமில்லை எனலாம். சமையல் நிகழ்ச்சியுடன் இணைத்து காமெடி என்று இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பு வித்தியாசமானது. தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசனில் பிரபலமானவர் அஸ்வின். இன்றைய (ஜனவரி 10) நிகழ்ச்சி பொங்கல் கொண்டாட்டமாக இருந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ...

Read More »

நியூசிலாந்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா

நியூசிலாந்தில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் கடந்த மூன்று நாட்களாக புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது: “ நியூசிலாந்தில் கடந்த மூன்று நாட்களாக புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள நாட்டில் எவருக்கும் கரோனா தொற்று கண்டுப்பிடிக்கப்படவில்லை. வெளி நாட்டிலிருந்து வந்தவர்களுக்குத்தான் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் கண்டறிப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More »

சீனாவின் கரோனா தடுப்பு மருந்துக்கு ஜோடார்ன் அனுமதி

சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்துக்கு ஜோர்டான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஜோர்டானின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் நிர்வாகம் தரப்பில், “அவசர நிலையைக் கருத்தில் கொண்டு சீனாவின் சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்தை வாங்க அனுமதி வழங்கப்படுகிறது. பைசர் கரோனா தடுப்பு மருந்துக்குப் பிறகு நாங்கள் அனுமதிக்கும் இரண்டாவது கரோனா தடுப்பு மருந்து இதுவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டானில் கரோனா பரவலில் இரண்டாம் கட்ட நிலை தொடர்வதால் அங்கு கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான ...

Read More »

வாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன?

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ் அப் புதியநிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த சேவையை தொடர்ந்துபயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளன. இதனிடையே, தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர நிர்பந்திப்பதால், வாட்ஸ் அப்பை விட்டு வெளியேற வேண்டும் என்ற கருத்தும் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு, டெலிகிராம், சிக்னல் ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும்

யாழ்பல்கலைகழக நிர்வாகம் தனது தவறை திருத்தி யாழ்பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காகவும் நினைவுத்தூபி மீண்டும் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை வடக்கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் வர்த்தக சங்கங்கள் போக்குவரத்து சங்கங்கள் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலிகள் போல பல்கலைகழக நிர்வாகமும் துணைவேந்தரும் செயற்பட்டிருப்பது ஆழந்;த விசனத்தை ...

Read More »

தமிழ்-முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்!

அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தொடர்பில் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தால் ...

Read More »

உருமாறிய கொரோனாவை தடுக்கும் பைசர் தடுப்பூசி- ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் தடுப்பூசி உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. சீனாவின் வுகானில் தோன்றி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன. அந்த வைரசின் அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதற்குள் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ்கள் பரவுவது கண்டறியப்பட்டது. இதில் இங்கிலாந்து வைரஸ் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யுமா? என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து ...

Read More »

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு “பொன்னியன் செல்வன்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஐதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட செட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத் விரைந்துள்ளனர். ...

Read More »

அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்த ஈனச்செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. அவர்களின் உத்தரவுக்கு அமைவாக, பல்கலைக்கழக நுழைவாசற் கதவுகளைப் பூட்டி விளக்குகளை அணைத்துவிட்டுத் திருட்டுத்தனமாகப் பல்கலைக்கழக நிர்வாகமே செய்து முடித்திருக்கிறது. இதற்கு, சட்டவிரோத தூபி என்பதால் அழுத்தங்கள் காரணமாகவே அகற்ற வேண்டி ஏற்பட்டது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா அவர்கள் விளக்கம் அழித்துள்ளார். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ...

Read More »