குமரன்

சிறிலங்கா தம்பதியை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை கோரிய சிறிலங்கா தம்பதியினர் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எரங்க ரணசிங்க ஆராச்சிகே என்ற சிறிலங்காவைச் சேர்ந்தவரின் குடும்பமே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தம்பதியினர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் குறித்த தம்பதியினர் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக பாரியளவில் நிதி செலவிட்டுள்ளதாகவும், இருப்பினும் அவை எவ்வித பலனையும் கொடுக்கவில்லையெனவும் கூறப்படுகிறது..

Read More »

டுவிட்டரில் கசிந்த கூகுள் பிக்சல் 2, பிக்சல் XL 2 புகைப்படங்கள்

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்கள் நாளை நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கினறன. இந்நிலையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் எவான் பிளாஸ் எனும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார். எவான் பிளாஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ...

Read More »

அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி மறைவு

அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி. பாடகர், பாடலாசிரியர், பல வாத்திய இசைக்கலைஞர் என பன்முகத்திறமை கொண்ட டாம் பெட்டி, ஹார்ட்பிரேக்கர்ஸ் இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பாடல்களை வழங்கி உள்ளார். தனியாகவும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய இசை, ராக் அண்ட் ரோல், ஹார்ட்லேண்ட் ராக், ஸ்டோனர் ராக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இசை இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலம். அவரது பாடல் பதிவுகள் ...

Read More »

ரோகித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 296 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா (790 புள்ளிகள்) 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கப்டன் விராட்கோலி (877 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 296 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா (790 ...

Read More »

மெல்பேர்ன் அணிக்கு வெற்றி!

சிட்னி ANZ அரங்கில் NRL premiership இறுதிச்சுற்று நேற்று இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் Melbourne Storm அணி North Queensland Cowboys அணியினை வென்றுள்ளது. 34-6 என்ற கணக்கில் வென்று வெற்றிக் கனியை எட்டிப்பிடித்து கோப்பையை தனதாக்கிக் கொண்டுள்ளது.

Read More »

சார்ஜ் செய்யும் போது பாதியாக பிளந்து கொண்ட ஐபோன் 8 பிளஸ்

அப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்த போது வெடித்து, பாதியாக பிளந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஐபோன் 8 சீரிஸ் பாதியாக பிளந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8 பிளஸ் ஸ்மாப்ட்போன் பக்கவாட்டுகளில் பிளந்து கொண்டிருப்பது தெளிவாக காட்சியளிக்கிறது. தாய்வானை சேர்ந்த வாடிக்கையாளர், வாங்கி ஐந்தே நாட்களான தனது ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனினை சார்ஜ் செய்த போது ...

Read More »

ரஜினி படத்தலைப்பில் நடிக்கும் பிரசாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசாந்த் அடுத்ததாக ரஜினியின் படத்தலைப்பில் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். 2011-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த பிரசாந்த், நடிப்பில் `புலன் விசாரணை’ என்ற படம் கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் `சாகசம்’ என்ற படமும் வெளியானது. இந்நிலையில், பிரசாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `ஜானி காடர்’ படத்தின் ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 3 டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் மாதம் 17-ம் திகதி இந்தியா வந்தது. ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. இந்நிலையில் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஷிகர் தவான் ...

Read More »

மனுஸ் தீவு தடுப்புமுகாமிலிருந்து ஈழ தமிழர் ஒருவர் தற்கொலை!

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், ஈழ தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலையில் 32 வயதுடைய ஈழ தமிழரான ஆண் ஒருவர், மருத்துவமனையில் மரணமானார் என்று பபுவா நியூகினியா காவல்துறை தலைவர் டொமினிக் ககாஸ், உறுதிப்படுத்தியுள்ளார். இவர் லொரென்கு மருத்துவமனையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று அகதிகள் நடவடிக்கை கூட்டணியைச் சேர்ந்த இயன் ரின்ரோல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் சமையல் கூடம் அருகே இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனுஸ் ...

Read More »

அவுஸ்ரேலியா: புற்றுநோய் இருப்பதாக கதைவிட்ட வலைப்பதிவருக்கு அபராதம்

உடல்நலம் குறித்து இணையத்தில் பதிவிடும், அவுஸ்ரேலிய வலைப்பதிவர் பெல் கிப்சனுக்கு, தனக்கு புற்றுநோய் உள்ளதாக தவறான தகவல்களை அளித்து, வாசகர்களை ஏமாற்றியதற்காக 3,22,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 25 வயதாகும் பெல் கிப்சன், இயற்கை மருத்துவத்தின் மூலம், புற்றுநோயில் இருந்து குணமடைந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவில் மிகவும் பிரபலமானார். வெற்றிகரமாக ஒரு செயலியையும், உணவுப் பழக்கம் குறித்த புத்தகத்தையும் வெளியிட்ட அவர், பின்பு தனது நோய் குறித்து பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். கடந்த மார்ச் மாதம், நுகர்வோர் சட்டத்தில் 5 விதிமீறல்களை அவர் செய்துள்ளதாக ...

Read More »