குமரன்

மெக்சிக்கோவில் மனித புதைகுழிகளில் 166 உடல்கள் மீட்பு!

மெக்சிக்கோவின் வெரெகிரஸ் நகரில் பாரிய மனித புதைகுழியொன்றிற்குள் 166 உடல்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸட் மாதம் 8 ம் திகதி நபர் ஒருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து கடந்த ஒரு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 32 புதைகுழிகளில் உடல்களை மீட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 30 நாள் அகழ்விற்கு பின்னர் 166 உடல்களை மீட்டுள்ளோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மனித உடல்களிற்கு அப்பால் புதைகுழியிலிருந்து ஆடைகள் உட்பட பல பொருட்களை மீட்டுள்ளோம் எனவும் மெக்சிக்கோ அதிகாரி தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட உடல்கள் கடந்த இரண்டு ...

Read More »

இராணுவம், முன்னாள் இராணுவம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல்!

இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக இருந்தும் இது விடயமான தீவிரமான அறிவார்ந்த பணிகளை கண்டுகொள்வது மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. இலங்கையின் சிவில்-இராணுவ தொடர்பில் அண்மைய கால‌ நகர்வுகளில் தோன்றியிருக்கும் சில முக்கிய பண்புகளை கோடிட்டுக் காட்டுவதற்கு இக்கட்டுரை முயல்கிறது. இக்கட்டுரை இறுதியில் பிரேரிப்பது போன்று, சிவில்-இராணுவ தொடர்பு எமக்கு இன்னோர் பக்கத்தை ...

Read More »

நீதிமன்றில் முன்னிலையானார் முன்னாள் நீதியரசர்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ...

Read More »

பாகிஸ்தான் ராணுவத்தை போன்று வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டதில்லை !

வேறு எந்த நாட்டின் ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை போன்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதில்லை என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செடம்பர் 6-ம் திகதியை பாதுகாப்பு தினமாக பாகிஸ்தான் அரசு கடைபிடித்து வருகிறது. பின்னர் இதன் பெயரை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழாவாக கடந்த 2014-ம் ஆண்டு மாற்றியது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழா, ராவல்பிண்டியில் ...

Read More »

ஜப்பானுக்கு உதவியாக ரோந்து விமானங்களை அனுப்பிய ஆஸ்திரேலியா!

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை மீறி நடுக்கடலில் கப்பல் விட்டு கப்பலில் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வடகொரியாவை கண்காணிக்க ஜப்பானுக்கு உதவியாக 3 ரோந்து விமானங்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அனுப்பியுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு அந்நாட்டின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) ...

Read More »

தமிழ் திரைப்பட விளம்பரங்களில் ஆங்கில சொற்கள் இடம்பெறக் கூடாது!

சினிமா விளம்பரங்களில் ஆங்கிலச் சொற்கள் இடம்பெறச் செய்வதை திரைத் துறையினர் தவிர்க்க வேண்டும் என இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளி வர உள்ள ‘அடங்காதே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத் தில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் தங்கர் பச்சான் பேசிய தாவது: சமீப காலமாக நாளிதழ்களிலும், சமூக வலைதளங்களிலும் சினிமா பட விளம்பரங்களைப் பார்க் கிறேன். படத்தின் பெயர் மட்டும் தான் தமிழில் இடம்பெற்றிருக் கிறது. படத்தில் பணிபுரிந்துள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடங்கி மற்ற அனைத்தும் ஆங் ...

Read More »

வடக்கின் அபிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்!

வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை சிறிலங்கா அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின் சிறிலங்காவுக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சனை (Bryce Hutchesson) தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்று (6) முற்பகல் 11.30 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியே போதே இதனை தெரிவித்த அவர், இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வட மாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் ...

Read More »

சு.க.விலுள்ள மீதமானவர்களும் வெளியேறி விடுவார்கள்! -டிலான்

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி சம்மேளத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறாவிட்டால் கட்சியில் இருக்கும் ஏனையவர்களும் வெளியேறிவிடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கு முடியாது. அதனால் கட்சியின் வருடாந்த ...

Read More »

அமெரிக்காவை காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சி!- நியூயார்க் டைம்ஸ்

டிரம்பின் மோசமான நிர்வாகத்தில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மற்றும் வெளியுறவு கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் போன்றவற்றில் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பல பின் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே புகார் கூறி வருகிறார்கள். சொந்த கட்சியிலும் கூட இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார் டைம்ஸ் இதழில் இது ...

Read More »

மிதிவெடி வெடித்ததில் கணவன் மரணம்! மனைவி தற்கொலை முயற்சி!

மாங்குளம் பிரதேசத்தில் கடந்த தினத்தில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடிப்பொருள் வெடித்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார். மிதிவெடி அகற்றும் சர்வதேச நிறுவனமொன்றின் கீழ் பணிபுரிந்த இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் மனைவி விஷம் அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கணவரின் திடீர் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Read More »