குமரன்

மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்டமான பதில்!

சமூக வலைதளத்தில் மத ரீதியிலான எழுப்பப்பட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமாக பதிலளித்துள்ளார். நடிகர் மாதவன் சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். சுதந்திர தினவிழா, ரக்சா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களை கூறி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மத ரீதியிலாக கேள்வியை எழுப்பியுள்ளார். அவருடைய பூஜை அறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு அந்த கேள்வி இடம் பெற்றது. புகைப்படத்தை உன்னிப்பாக பார்த்து கண்டுபிடித்து, “பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அதுயென்ன கோவிலா? நீங்கள் என்னுடைய ...

Read More »

காஷ்மீர் 370…

பவ­ளங்கள் போல  மின்னும் பனிச்­சி­க­ரங்கள், துலிப் மலர்கள் நிறைந்த ஆசி­யாவின் மிகப்­பெ­ரிய பூந்­தோட்டம் உள்­ளிட்ட பல்­வேறு பூங்­காக்கள், உலக புகழ்­பெற்ற காஷ்மீர் ரோஜாக்கள்,அப்­பிள்கள், வற்­றாத நீல நிற ஏரிகள், பசுமை படர்ந்த  உயர்ந்த மலைகள்,  அதன் இடுக்கில்  பல ஆறு­களும் அரு­வி­களும் பாயும் அழகும் வளமும்  நிறைந்த பள்­ளத்­தாக்­குகள்  என   மொத்த இயற்கை அழ­கையும்  தன்­ன­கத்தே கொண்­டுள்ள   அழ­கிய  பிர­தே­சமே இந்­தி­யாவின் வட­கோ­டியில்  அமைந்­துள்ள காஷ்மீர் ஆகும். 17ஆம் நூற்­றாண்டில் முக­லாய மன்னர் ஜகாங்கீர் காஷ்மீர் பள்­ளத்­தாக்­கிற்கு வந்த போது ‘பூமியில்  சொர்க்கம் என்ற ...

Read More »

இந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து – குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

இந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை. இந்தோனேசியாவின் சுலாவ்சி மாகாணத்தின் கெண்டாரி துறைமுகத்தில் இருந்து மரொவலி மாவட்டத்தில் உள்ள கலேராங் துறைமுகத்திற்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. கொனாவே மாவட்ட பகுதியில் உள்ள போகோரி தீவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கப்பலில் தீ பிடித்தது. தகவலறிந்து மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பற்றியது. தீ வேகமாகப் பரவியதால் ஊழியர்களால் ...

Read More »

ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்!

ஜனா­தி­பதி தேர்தலுக்­கான கட்சி வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்தும்  திரு­விழா கோல­க­ல­மாக இடம் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. பொது­ஜன பெர­முன உத்­தி­யோகபூர்­வ­மாக தனது வேட்­பா­ளரை அறி­வித்­து­விட்­டது. அமைச்சர் சஜீத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­துபோல்  ஐக்­கிய தேசி­யக்­கட்சி பது­ளையில்  நடத்­திய வர­வேற்பு வைப­வமும்  இரு பிர­தான கட்­சி­களின் முடிவை அறி­வித்த நிலையில்  தமிழ்மக்கள் இந்த ­வேட்­பா­ளர்கள் தொடர்பில் என்ன முடிவு எடுக்­கப்­பே­ா கி­றார்கள். தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு இவர்­களில் எந்த வேட்­பா­ளரைக் கைநீட்­டிக்­காட்­டப்­போ­கி­றது என்­பதை அறி­வதில்  மக்கள் ஆர்­வ­மாக இருக்­கி­றார்கள்.  அது­போ­லவே போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களும் கட்­சி­களும் கூட்­ட­மைப்பின் முடி­வுக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதும் சரி­யான கணிப்­பாக இருக்கும். ...

Read More »

யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தினரின்  கடையொன்றில்  இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து இந்த தாக்குதலின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, வல்வெட்டித்துறை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்!

சிறிலங்காவிற்கு  வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட்  இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார். உதிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு தொகுதியினர் மூன்று கட்டங்களாக வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் மீண்டும் சுய விருப்பின் ...

Read More »

திருமணம் எப்போது? -மனம் திறந்த பிரபாஸ்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார். பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படம் சாஹோ. அருண் விஜய், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸ் அளித்த பேட்டி: பாகுபலி படத்துக்கு பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடித்தது ஏன்? பாகுபலிக்கு பிறகு எளிமையான காதல் கதையில் தான் நடிக்க திட்டமிட்டேன். இந்த கதையை கேட்டதும் ஆச்சர்யம் ஆனேன். எல்லோருக்கும் பிடித்ததால் அது படமாகவும் மாறியது. ...

Read More »

அமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப்

கிரீன்லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க எண்ணிய அதிபர் டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன் லேண்ட் என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. 22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது. இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஒற்றுமை பேரணி!

ஹாங்காங்கில் கைதிகள் ஒப்படைப்பு மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் நேற்று பேரணி நடை பெற்றது. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது. இதனால், கைதிகள் பரிமாற்ற ...

Read More »

13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள 13 பேரும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் அவுஸ்திரேலிய காவல் துறையின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 13 பேரும் விமான நிலைய ...

Read More »