குமரன்

பாரம்பரியக் கடலில் ஒரு பகை எல்லை ?

மீனவர்கள் வருவார்கள்.அப்பொழுது அவர்கள்  அரசியல் எல்லைகளை மதிப்பதில்லை. தமிழகத்துக்கும்  ஈழத்துக்கும் இடையிலான கடல் எனப்படுவது இரு பகுதி மீனவர்களாலும் பகிரப்படும் ஒரு பாரம்பரியக் கடலாகும். அதில் பாரம்பரிய மீன்பிடி முறைகளின் மூலம் மீன் பிடிக்கப்படும் வரை பிரச்சினை பெரியளவில் எழவில்லை. மாறாக சட்டத்துக்கு விரோதமான நவீன மீன்பிடி நுட்பங்களை பயன்படுத்தும் ஒப்பீட்டளவில் அளவால் பெரிய தமிழகப்படகுகள் ஈழத்துக் கடற்பரப்புக்குள் நுழைந்த போதுதான் அது முதலாவதாக வள அபகரிப்பாக மாறுகிறது.இரண்டாவதாக சூழலியல் விவகாரம் ஆகிறது.மூன்றாவதாக சட்டவிரோதமான முறைகளைப் பயன்படுத்துவதால் அது ஒரு சட்டப்பிரச்சினையாக மாறுகிறது.இவை அனைத்தினதும் ...

Read More »

அண்ணாத்த படம் வெளியானது… ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது. பல இடங்களில் ரசிகர்கள் மழை என்றும் பாராமல், உற்சாகமாக வெடி வைத்து கொண்டாடினார்கள். பேனர், தாளம், நடனம் ஆடி படத்தை வரவேற்று இருக்கிறார்கள். ரசிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி ...

Read More »

வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலகுமா?

வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சீனாவும், ரஷியாவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகின்றன. வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. சபை தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரிசோதித்து வந்துள்ளன. இவற்றை தற்காப்பு நடவடிக்கை என்று அந்த நாடு கூறி வந்தாலும்கூட இது உலகளாவிய அச்சுறுத்தல் என்று வளர்ந்த நாடுகள் கருதுகின்றன. வடகொரியா முதன்முதலாக 2006-ம் ஆண்டு அணுக்குண்டு சோதனை நடத்தியபோதுதான் ...

Read More »

அரசாங்கத்துக்கு எதிராக அணி திரண்டனர்

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக துறைமுகங்கள், மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், கொழும்பில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்த அதேவேளை, கல்வியாளர்களை குரோதப்படுத்துவதையும் மாணவர்களை சிரமப்படுத்துவதையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரி பெற்றோர்களும் நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் (03) போராட்டம் நடத்தினர். கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராகவும் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கும் எதிராகவே பல தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவை பிரதான ...

Read More »

இறுதி மூச்சுவரை போராடுவோம்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார். தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதும் பாதுகாப்பு தரப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் தங்களது பாதுகாப்பினை மட்டும் உறுதி செய்து கொண்டனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த கட்டுவாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு ...

Read More »

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு; 702 பேரிடம் விசாரணை

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ஐ.எஸ் உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 702 இலங்கையர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளது. ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த முகமது சம்சுதீன் அண்மையில் இந்திய அரச புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 702 இலங்கையர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக அவரது வட்ஸ்அப் கணக்கில் தகவல் கண்டறியப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குண்டுதாரியான சஹாரான் ஹாஷிமின் புகைப்படங்கள் மற்றும் உரைகளும் ...

Read More »

முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்

ஹைபத்துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மையில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோதலில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகின. தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவரான முல்லா உமரின் மரணத்துக்கு பிறகு 2016-ம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வருபவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா. இவர் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராகவும் உள்ளார். ஆனால் இவர் ஒருபோதும் பொதுவெளியில் தோன்றியது கிடையாது. எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது மர்மமாகவே இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு ...

Read More »

கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஆஸ்திரேலியா செல்ல அனுமதி

வெளிநாடு பயணிகளின் நலன் கருதி, ஆஸ்திரேலியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார மையம் இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து, சிகிச்சை முறை பொருட்கள் நிர்வாகம் (டிஜிஏ), ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாவது:- சர்வதேச அளவில் பயன்பாட்டில் ...

Read More »

ட்விட்டரில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதி அறிமுகம்

ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னணி சமூக வலைதள சேவையான ட்விட்டர் தனது ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு புதிதாக லேப்ஸ் எனும் அம்சத்தினை அறிவித்து இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு ட்விட்டர் உருவாக்கி வரும் புது அம்சங்களை பயனர்கள் முன்கூட்டியே சோதனை செய்து பார்க்க முடியும். யூடியூப் பிரீமியம் சேவையிலும் இதேபோன்று யூடியூப் லேப்ஸ் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. ட்விட்டர் லேப்ஸ் அம்சத்தில் தற்போது பின்டு கன்வெர்சேஷன்ஸ் அம்சம் வழங்கப்படுகிறது. இது ...

Read More »

இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் இப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.   இந்நிலையில், இருளர் ...

Read More »