குமரன்

வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு!

வவுனியாவில் பலத்த பாதுகாப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப்படையினர் காவல் துறையுடன் இணைந்து வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டதுடன்  320 காவல் துறையினர்  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வவுனியாவில் இன்று பலத்த பாதுகாப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதுடன் வன்னி பிராந்திய பிரதிப் காவல் துறை மா அதிபர் தம்மிக்க பிரியந்த, சிரேஸ்ர காவல் துறை  அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா வவுனியா தலைமை காவல் துறை  நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆகியோரின் தலைமையின் கீழ் விஷேட அதிரடிப்படையினர் காவல் துறையுடன் இணைந்து வீதி பாதுகாப்பு ...

Read More »

கட்டுநாயக்க விமான நிலைய பணிகள் இன்றுடன் நிறுத்தம்!

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகள் விமானங்கள் வருகைத்தருவது இன்று அதிகாலை 4 மணிமுதல் எதிர்வரும் 25 ஆம் திகதி நள்ளிரவு வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தருவது இடைநிறுத்தப்படுவதற்கு முன்னதாக நான்கு விமானங்கள் நாட்டை வந்தடைந்தன தம்பதிவ யாத்திரைக்கு சென்றவர்கள் உள்ளிட்ட இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் அந்த விமானங்களில் நாட்டை வந்தடைந்தனர். சென்னை, புதுடில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து குறித்த விமானங்கள் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சிலம்பம் சுற்றி அசத்திய ஜோதிகா!

பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சென்னையில் நடந்த ஒரு விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் சிலம்பம் சுற்றி அசத்தி இருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான வாலி படம் மூலம் அறிமுகமான ஜோதிகா அதன்பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோயின் ஆனார். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்காமல் இருந்தவர், கடந்த 2015 முதல் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலை கட்டி ...

Read More »

வெளியில் நடமாடுவதை குறையுங்கள்!

யாழில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என அரச வைத்திய அதிகாரி சங்க பிரதிநிதிகள் கூட்டாக கோரியுள்ளனர் யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தனர். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பலாலியில் வந்திறங்கிய 60 பேரை தேடுகிறோம். இதுவரையில் யாழ்ப்பாணத்தில் எந்த நோயாளியும் இனம் காணப்படவில்லை. பலாலி விமான நிலையம் மூலம் எமது ...

Read More »

சிறிலங்காவில் கொரோனா வைரஸிற்கு இலக்கான ஒரு வயது குழந்தை!

சிறிலங்காவில்  அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களில் ஒரு வயதும் 5 மாதங்களுமான குழந்தையும் உள்ளடங்குவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்த குழந்தையின் தாய்க்குத் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் தந்தைக்கும் கொரோனா தொற்றியுள்ளதா என சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் இத்தாலியில் இருந்து வருகைத்தந்தவர்களாகும். வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்காவில்  அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரவு வரையில் 43ஆக அதிகரித்துள்ளது. ...

Read More »

பரசிட்டமோல், கோழி சூப், எலுமிச்சைச் சாறு கொரோனாவிலிருந்து மீண்ட வைத்தியர்!

பிரிட்டனில் தெற்கு லண்டனிலுள்ள கென்னிங்டனைச் சேர்ந்தவர் டாக்டர் கிளார் ஜெராடா. 60 வயதான இவர் பொது மருத்துவர்களின் ராயல் கல்லூரியின் (ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டிஷனர்ஸ்) முன்னாள் தலைவர் ஆவார். இவர் நியூயார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்று லண்டனுக்குத் திரும்பியபோது கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய்த் தொற்றின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் சில நாள்கள் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் டாக்டர் கிளார். கடுமையான காய்ச்சல், நடுக்கம், தொண்டயில் புண், தலைச்சுற்றல், மூட்டுகளில் வலி, தலைக் குத்தல், தொடர்ந்து இருந்த இருமல் ...

Read More »

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கை அறிமுகப்படுத்தும் அதிரடி ஆயுர்வேத மூலிகை மருந்து!

கொரோனா வைரஸ் பற்றிய கையேடொன்றை வழங்க ஆயுர்வேத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது சீதாராமா என்ற 2 மருந்து மூலிகை உருண்டை அல்லது 4 உருண்டைகளை பயன்படுத்துவது பொருத்தமானது என ஆயர்வேத மருந்தக கூட்டத்தாபனத்தின் தலைவர் திருமதி. சாகல அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த மருந்துகளுக்கு மேலதிகமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மல்லி, இஞ்சி உட்பட பஸ்பங்கு எனப்படும் சிங்கள ஆயர்வேத ஐந்து வகை ஒளடதம் மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தொண்டையில் வலி, தும்மல், ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கு பயன்படுத்தும் சிகிச்சை ...

Read More »

போலி ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம்!

கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாகத் தெரிவித்து இணையத்தளங்களில் வெளியாகும் ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள் தொடர்பிலான தகவல்களை நம்ப வேண்டாம் என, ஆயுர்வேத திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது . அங்கீகரிக்கப்படாத மருத்துவக் குறிப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக சிலர் பரப்பிவருவதாக, ஆயுர்வேத ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார் போலி மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார். தற்போது பரவும் Covid19 எனப்படும் கொரேனா வைரஸுக்கான சிகிச்சை வழங்க ஆயுர்வேத வைத்தியர்கள் என்ற போர்வையில், பலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆயுர்வேதப் பொருட்களை ...

Read More »

உலக முழுவதும் கரோனா வைரஸால் 179,000 பாதிப்பு!

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 179,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, “ உலகம் முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 11,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கோவிட் காய்ச்சலுக்கு 1, 79,00 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செவ்வாய்க்கிழமை உலகம் முழுவதும் 475 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் உலக முழுவதும் கோவிட் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ...

Read More »

பிரசாந்துக்கு ஜோடியாகும் சமந்தா

நடிகை சமந்தா அடுத்ததாக நடிக்க உள்ள திகில் படத்தில், அவருக்கு ஜோடியாக பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் அடுத்ததாக திகில் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். நயன்தாராவின் ‘மாயா’, டாப்சியின் ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது இந்தியில் வெளியாகி சூப்பர் ...

Read More »