குமரன்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகிறது

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்கும் முடிவில் இங்கிலாந்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவிதமான விளையாட்டு போட்டிளும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு வர நீண்ட காலமாகும் என அஞ்சப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த மாதம் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றிருந்தது. ஆனால் கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக பயிற்சி ஆட்டத்தை பாதிலேயே நிறுத்திக் கொண்டு சொந்த நாடு ...

Read More »

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு பைக்கில் வந்த அஜித்

விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக் மூலம் ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் அஜித். எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். படத்தில் ஹீமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்குக்கு முன் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்றது. ஐதராபாத்தில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அஜித் சென்னை செல்வதற்கு விமான டிக்கெட்டுகள் தயாராக இருந்துள்ளது. ஆனால், தனது உதவியாளரிடம் கூறி விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக் மூலம் ஐதரபாத்தில் இருந்து ...

Read More »

இசை நிகழ்ச்சி மூலம் ரூ.980 கோடி கொரோனா நிவாரண நிதி திரட்டிய பாப் பாடகி

பிரபல பாப் பாடகி லேடி காகா, கொரோனா நிவாரணத்துக்காக ஆன்லைனில் இசை நிகழ்ச்சி நடத்தி ரூ.980 கோடி நிதி திரட்டியுள்ளார். கொரோனா வைரஸ் உலகையே அலற வைத்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளன. இதனால் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ நடிகர்-நடிகைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தி கொரோனா ...

Read More »

மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன், வீட்டில் இருக்கும் துணிகளை கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-  கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகம் முழுவதுமே மாஸ்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டள்ளது. நமது பிரதமர் கூறியதை போன்று நமக்கு தேவையான மாஸ்கை நம் வீட்டிலேயே ...

Read More »

278 உயிர்கள் பலியெடுக்கப்பட்ட கறுப்புநாள் இன்றாகும் ..!

அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது.  ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன. யாருமே நினையாத, எதிர்பாராத சம்பவம் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த நாள் அதுவாகும். பயங்கரவாதி முஹமட் சஹ்ரான் குழுவினரால் மிருகத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு நாளில் தான் நடத்தப்பட்டன. இன்றுடன் வருடமொன்று நிறைவடைகின்ற போதும், பயங்கரவாதி சஹ்ரானால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் ...

Read More »

சிரேஷ்ட ஊடகவியலாளர் நெடுஞ்செழியன் காலமானார்!

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நல்லதம்பி நெடுஞ்செழியன் (65) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் தலவாக்கலையை பிறப்பிடமாகக் கொண்ட அவர் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார் . தனது ஊடக பயணத்தை தினபதி மற்றும் சிந்தாமணியின் ஊடாக ஆரம்பித்த அவர் பின்னர் சக்தி ஊடக நிறுவனத்தின் செய்தி ஆசிரியராக ஒரு தசாப்த காலத்துக்கு மேல் பணியாற்றினார் பின்பு எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வீரகேசரி வாரவெளியீட்டுப் பிரிவின் மலையக பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். அதன் பின்னர் ...

Read More »

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்தும் திகதியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில் தற்போது இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை குறித்து சுகாதார பணிப்பாளர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்திய பேச்சுவர்த்தையில் ...

Read More »

கொழும்பில் 1010 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினமும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது. முன்னதாக, நேற்று (20) காலையில் 24 நோயாளர்களும், பிற்பகலில் 8 தொற்றாளர்களும் மாலையில் ஒரு தொற்றாளரும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு உள்ளான 98 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், இலங்கையில் ...

Read More »

கிம்மின் உடல் நிலை கவலைக்கிடம்?

ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது என்று யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் நேற்று (20) அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் அறிக்கையில், கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் இடைவிடாது தொடரப்பட்ட ஊரடங்கானது இன்று (நேற்று) யாழிலும் விலக்கப்பட்டது. இக்கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு சுகாதாரத் துறையினர், வைத்தியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வழங்கிக் கொண்டிருக்கும் தியாகங்களும், சேவைகளும் ஊரடங்கு தளர்வினால் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகளுடன் தொடர்புபடாத பல கடைத் தொகுதிகள் ...

Read More »

கணவரின் புகைப்படங்களை நீக்கியது ஏன்?

நடிகை சுவாதி தனது கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம் பெற்ற “கண்கள் இரண்டால்.. உன் கண்கள் இரண்டால்… என்னை கட்டி இழுத்தாய்” பாடல் காட்சியில் அவர் நிஜமாகவே கட்டி இழுத்ததாக ரசிகர்கள் கொண்டாடினார்கள். தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை ஆகிய படங்களிலும் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் வசித்த சுவாதி 2018-ல் ...

Read More »