குமரன்

தமிழர் திருநாள் -2021 அவுஸ்ரேலியா

எம் தமிழர்களின் மிகமுக்கியமான விழாவான தைப்பொங்கலின் சிறப்புக்களை எம் இளையதலைமுறைக்கு எடுத்துக்காட்டவும், இந்த நாட்டு தமிழ் உறவுகளின் கலாச்சார, கலைச் செழிப்பைக் காட்டும் இனிய பல கலை நிகழ்வுகளையும், எமது பாரம்பரிய விளையாட்டுக்களையும் கண்டுகளிக்கவும் இந்தவிழாக்களுக்கு, தமிழ் கலாச்சார உடையில் வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.  

Read More »

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை அடுத்து மாநாடு, பத்து தல ஆகிய படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதையடுத்து சுதாகொங்கரா இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுதாகொங்கரா இதற்கு முன் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ...

Read More »

டிரம்பினை பதவியிலிருந்து நீக்க முடியுமா ? அரசியலில் இருந்து முற்றாக தடை செய்ய முடியுமா?

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மீண்டும் அரசியல் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இரண்டு தடவைகள் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியாக டிரம்ப் மாறியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டினார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க செனெட்டில் டொனால்ட் டிரம்ப் குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி விசாரணையை எதிர்கொள்கின்றார் அரசியல் குற்றப்பிரேரணை என்றால் என்ன? விசாரணைகளை நடத்துவதற்கதாக அமெரிக்க காங்கிரசில் குற்;றச்சாட்டுகளை கொண்டுவருவதே அரசியல் குற்றப்பிரேரணை என அழைக்கப்படுகின்றது. இது குற்றவியல் நடவடிக்கையில்லை அரசியல் நடவடிக்கை என்பதுமுக்கியமானது. தேசத்துரோகம்,இலஞ்சஊழல் அல்லது ...

Read More »

இலங்கைக்குள் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா மருந்து!

இலங்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொரோனாவைரஸ் மருந்தினை பெறமுடியும் என இலங்கை எதிர்பார்க்கின்றது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பைசர் மற்றும் அஸ்டிராஜெனேகா நிறுவனங்களின் மருந்துகளை பெற முயல்வதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மருந்துகளை கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளன என குறிப்பிட்டுள்ள அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனம்,மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். அஸ்டிரா ஜெனேகாவின் நிறுவனமொன்று இந்தியாவில் உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் இதன் காரணமாக இலங்கையால் மருந்தினை பெறுவதற்காக தொடர்புகொள்ள முடிகின்றது எனவும் ...

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றி கொலை செய்ய திட்டமிட்டனர்!

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றி கொலை செய்ய திட்டமிட்டனர் என அமெரிக்க சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நீதித்துறை சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். அமெரிக்க செனெட்டிற்குள் துணைஜனாதிபதியின் மேசைமீது ஏறிநின்ற கலகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள ஜக்கொப் சான்சிலே என்பவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். அந்த நபரின் வாக்குமூலம் உட்பட ஏனைய ஆதாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கைப்பற்றி அவர்களை கொலை செய்வதே வன்முறையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் ...

Read More »

நினைவுகூர்வது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்!

போரில் இறந்தவர்களைத் தூபிகள் அமைத்து அல்லது நிகழ்வுகள் நடத்தி நினைவுகூர்வது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அந்த உரிமைக்கு அனுமதி மறுப்பதற்கும், அதைத் தட்டிப் பறிப்பதற்கும் எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அடிப்படைஉ ரிமையை ம று ப் ப து பெரும் மனித உரிமை மீறலாகும்.இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இறுதிப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்மேற்கண்டவாறு கூறினார். ...

Read More »

தேசிய கீதத்தில் ஒற்றை வார்த்தையை மாற்றிய அவுஸ்திரேலியா! கிடைத்துள்ள கலவையான வரவேற்பு

பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதன்படி நாட்டின் பழங்குடி மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஆஸ்திரேலியா தனது தேசிய கீதத்தில் ஒரு வா ர்த்தையை மாற்றியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், “Advance Australia Fair” தேசிய கீதத்தின் இரண்டாவது வரியான “For we are young and free” என்பதை “For we are one and free” என்று மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த மாற்றம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. அவுஸ்திரேலியாவை “பூமியில் மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார நாடு” ...

Read More »

நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது

நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிசாளர் ப.மயூரனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு, 20 உறுப்பினர்களில் 13 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சியியைச் சேர்ந்த மூன்று ஊறுப்பினர்கள் நடுநிலை வகித்ததுடன், ரெலோவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேபோன்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க, இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். அத்தோடு, ஈழ மக்கள் ...

Read More »

நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதில் இருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை ...

Read More »

படிப்படியாக பறிபோகும் தமிழர் உரிமைகள்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு தோற்றமே கிடைக்கும். அதிபர் பதவியேற்ற புதிதில் இந்தியாவுக்கு விஜயம் ...

Read More »