இலங்கைக்குள் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா மருந்து!

இலங்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொரோனாவைரஸ் மருந்தினை பெறமுடியும் என இலங்கை எதிர்பார்க்கின்றது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பைசர் மற்றும் அஸ்டிராஜெனேகா நிறுவனங்களின் மருந்துகளை பெற முயல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மருந்துகளை கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளன என குறிப்பிட்டுள்ள அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனம்,மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அஸ்டிரா ஜெனேகாவின் நிறுவனமொன்று இந்தியாவில் உள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் இதன் காரணமாக இலங்கையால் மருந்தினை பெறுவதற்காக தொடர்புகொள்ள முடிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.