குமரன்

கூகுள் நிறுவனம் +ஆஸ்திரேலிய அரசு – முற்றும் மோதல்! காரணம் என்ன?

செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி வழங்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம் சட்டத்தை கைவிடாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துள்ளது. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்துள்ளதால் மோதல் முற்றியுள்ளது ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள் இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணைய தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் ...

Read More »

நில அபகரிப்பு தொடர்பில் நம்பகத்தன்மையான ஆவணப்படுத்தலும் ஆய்வும் மிக அவசியம்

நில அபகரிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் மக்களின் நில அபகரிப்புக்கு எதிரான பல்வேறு வடிவங்களிலுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மையான நவீன தொழில்நுட்ப முறைகளில் அமைந்த ஆவணப்படுத்தல் பொறிமுறையும் ஆய்வும் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தி இருக்கிறார். தமிழ் கட்சிகளுக்கு இடையிலான காணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றம் திருநெல்வேலி இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோது விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். “சர்வதேச தராதரங்களுக்கு அமைவான ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளை ...

Read More »

முதன்முறையாக சூர்யாவுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 40-வது படமான இதை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யா 40 படத்திற்கு ...

Read More »

இலங்கையில் கொரோனாவுக்கு 9 சிறைக் கைதிகள் இதுவரை பலி

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் வீழ்சியடைந்து வருகின்ற நிலையிலும் , புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது. காலி சிறைச்சாலை கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் இன்றைய தினம் புதிதாக 10 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களுள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர். மற்றையவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளபவர். இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 5 ...

Read More »

மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க ஒன்றுக்கூடிய தமிழ்த் தலைமைகள்!

தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ...

Read More »

அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொள்ளப்போவதாக எச்சரிக்கை ஏன்?

அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொளளப்போவதாக அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கூகுள்; முகநூல் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வழங்கும் செய்திகள் உட்பட உள்ளடக்கங்களிற்காக ஊடக நிறுவனங்களிற்கு ரோயல்டி செலுத்தவேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்தி;ற்கு எதிர்ப்பு தெரிவித்தே கூகுள்; இந்த எச்சரிக்கையை வெளியி;ட்டுள்ளது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத சட்டமொன்றை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை என கூகுள் அவுஸ்திரேலியாவின் முகாமைத்துவ இயக்குநர் மெல்சில்வா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா இந்த சட்டத்தினை நிறைவேற்றினால் அவுஸ்திரேலியாவில் கூகுள் தேடும் ...

Read More »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு

பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்” என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.

Read More »

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியம்!

பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்வேளை மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கர் குற்றவியல் நீதி அமைப்பு தொடர்பில் இலங்கை தீர்வு காணவேண்டிய விடயங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கான மரியாதைகள் ஆகியவை பரஸ்பரவ வலுவூட்டும் நோக்கங்களாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான எமது நடவடிக்கைளின் போது அப்பாவி மக்கள் பாதிக்கப்டாமலிருப்பது பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான எங்கள் முயற்சிகளில் ஒரு முக்கிய அங்கமாகயிருக்கவேண்டும். தனியுரிமைக்கான உரிமைகள் சிந்தனை சுதந்திரம், குற்றமற்றவர் ...

Read More »

கிழக்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல்

திருகோணமலைக்கு அருகில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் லைபீரியா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த கப்பலுக்கு உதவுவதற்காக இரண்டு கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

சுகாதார அமைச்சருக்கு கொவிட் தொற்று உறுதி!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடி என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், மேற்கொள்ளப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் அவர் சுயதனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »