அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொள்ளப்போவதாக எச்சரிக்கை ஏன்?

அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொளளப்போவதாக அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கூகுள்; முகநூல் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வழங்கும் செய்திகள் உட்பட உள்ளடக்கங்களிற்காக ஊடக நிறுவனங்களிற்கு ரோயல்டி செலுத்தவேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்தி;ற்கு எதிர்ப்பு தெரிவித்தே கூகுள்; இந்த எச்சரிக்கையை வெளியி;ட்டுள்ளது.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத சட்டமொன்றை அவுஸ்திரேலியா அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை என கூகுள் அவுஸ்திரேலியாவின் முகாமைத்துவ இயக்குநர் மெல்சில்வா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா இந்த சட்டத்தினை நிறைவேற்றினால் அவுஸ்திரேலியாவில் கூகுள் தேடும் பொறியை நிறுத்தவேண்டிய நிலையேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கூகுள் அச்சுறுத்துகின்றது மிரட்டுகின்றது என தெரிவி;த்துள்ள செனெட்டர் ரெக்ஸ் பட்ரிக்ஸ் சீர்திருத்த நடவடிக்கைகளிற்காக அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவை வலிந்து மோதலிற்கு இழுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை உலக நாடுகள் பின்பற்றப்போகின்றன நீங்கள் உலகின் அத்தனை நாடுகளிலும் இருந்து விலகிக்கொள்ளப்போகின்றீர்களா என அவர் கூகுள் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவுஸ்திரேலியா அச்சுறுத்தல்களிற்கு பணியாது என பிரதமர் ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த வருடம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவது குறித்து தனது அரசாங்கம உறுதியாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா ஏன் இந்த சட்டத்தை கொண்டுவருகின்றது. கூகுள் என்பது சிறிய சந்தை போட்டி கூட இல்லாத அத்தியாவசிய பயன்பாடாக அவுஸ்திரேலியாவில் காணப்படுகின்றது என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவிக்கின்றது.

செய்திகளைவாசிக்க விரும்பும் மக்கள் மூலம் கூகுள் தனது வாடிக்கையாளர்களை பெறுகின்றது என தெரிவிக்கும் அரசாங்கம் ஊடக நிறுவனங்களிற்கு அவற்றின் செய்திகளிற்காக கூகுள் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.