குமரன்

ஆஸ்திரேலியா மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்!

ஆஸ்திரேலியா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான மந்திரிசபையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டங்கள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்கான வாய்ப்பை சபாநாயகரின் அனுமதியுடன் ஊடகங்களுக்கு பெற்றத்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிவில் அமைப்புக்களின் பிரநிதிகள் சிலரை அண்மையில் சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தெரிவுக்குழுவின் குறுக்கு விசாரணைகளை கேட்டல், அவற்றுக்கு வழங்கப்படும் பதில்களை முழுமையாக சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதன் ஊடாக ...

Read More »

மோதலில் இருந்து மீண்ட சமந்தா!

சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘ஓ பேபி’ படத்தில் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த சண்டை சமரசமாக முடிந்திருக்கிறது. ஓ பேபி என்ற தெலுங்கு படத்தில் சமந்தா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் சமந்தா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார். கொரியன் படம் ஒன்றின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. நந்தினி ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் படமான சில காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ், சமந்தா சமந்தப்பட்ட சில காட்சிகளை மீண்டும் எடுக்கும் படி கூறியதாகவும் இதனால் டைரக்டர் நந்தினிக்கும் தயாரிப்பாளருக்கும் ...

Read More »

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 29 பேர் விளக்கமறியலில்!

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 41 பேரில், 8 சிறுவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனுடன் அதிலிருந்த 4 பெண்கள், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  எனினும் எஞ்சிய 29 ஆண்களையும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஹர்சன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ...

Read More »

இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோய்!

இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோயாகும். இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது எளிதான விடயமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே தயவுசெய்து நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் குறித்து அரசியல்வாதிகள் கருத்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுபலசேனா இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முழு மூச்சுடன் செயற்படுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் அமைப்பிடமிருந்து இலங்கை தௌஹீத் அமைப்புகளுக்கு பெரும்பாலும் கட்டளைகள் கிடைக்கப்பபெற்றுள்ளது. கோவை ஐயூப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையில் மிக ...

Read More »

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல்தர வர்த்தகர்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாத போதும் நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளேன் என்று முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பினை அடுத்து ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில்  கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டுக்காக எட்டு வருடங்கள் சேவையாற்றிருந்தேன். தற்போதும் நாட்டுக்காக சேவையாற்றுவதற்கு தயாராகவே உள்ளேன். இன, மத, மொழி, கட்சி பேதமின்றி ...

Read More »

தற்கொலை தாக்குதல்! -தொலைபேசிகள் ஆராயப்படுகிறது!

உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் 86 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களின் கைத்­தொ­லை­பே­சி­களும் தற்­பொ­ழுது ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சிரேஷ்ட  காவல் துறை  அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். இவர்­க­ளுக்கும் தடை­செய்­யப்­பட்ட தெளஹீத்  ஜமாஅத் அமைப்­புக்கும் மற்றும் அர­சி­யல்­வா­திகள், கோடீஸ்­வ­ரர்கள் ஆகி­யோ­ருக்கும் இடை­யி­லான தொடர்­புகள் குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்றது. நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய, இது­தொ­டர்­பான விசா­ர­ணைகள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பல்­வேறு தொலைத்­தொ­டர்பு நிலை­யங்­களில் இருந்து இது­கு­றித்த விப­ரங்கள்  திரட்­டப்­பட்­டுள்­ளன என்றும் கூறினார். இதே­வேளை, பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் 8 சிம்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து, அவ­ரது ...

Read More »

இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

சவுதாம்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 12 ரன்னில் வீழ்த்தியது. சவுதம்டனில் நடைபெற்ற மற்றொரு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்தும் மோதியது. காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 43 ரன்னும், ஷான் மார்ஷ் 30 ...

Read More »

வடகொரியா ஏவுகணை பரிசோதனை! எனக்கு இடையூறு இல்லை!

வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.  இதனால் என்னுடைய நிர்வாகத்தில் ...

Read More »

ராங்கியாக களமிறங்கும் திரிஷா!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன. இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் திரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான ...

Read More »

மீண்டும் திரையில் ஜோடியான ஆர்யா – சாயிஷா!

திரை ஜோடியான ஆர்யா – சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜத்தில் ஜோடியான பின்னர், சக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் இணைந்து நடிக்கின்றனர். `கஜினிகாந்த்’, `காப்பான்’ படங்களில் இணைந்து நடித்த ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவீட்டாரது சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். நிஜத்தில் ஜோடியான இவர்கள் தற்போது, மீண்டும் திரையில் இணைந்து நடிக்கின்றனர். `டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கவிருக்கும் `டெடி’ என்ற படத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது ...

Read More »