குமரன்

என்னை மீண்டும் 90களிலேயே கொண்டு சென்று விட்டுவிடுங்கள் – சுவாதி

என்னை மீண்டும் 90களிலேயே கொண்டு சென்று விட்டுவிடுங்கள் என்று சுப்ரமணியபுரம் சுவாதி வருத்தமாக கூறியிருக்கிறார். ட்விட்டரில் போலி கணக்குகள் அதிகரித்து வருகிறது. நேற்று காமெடியன் செந்தில் ட்விட்டரில் இணைந்துவிட்டார் என கூறி ஒரு அறிக்கை வைரலானது. ஆனால் அது போலியான ட்விட்டர் கணக்கு என்பது பின்னர் தான் தெரியவந்தது. இந்நிலையில் சுப்ரமணியபுரம் படம் மூலம் மிகவும் பிரபலமான சுவாதி தனது பெயரில் இருக்கும் போலி ட்விட்டர் கணக்கு பற்றி புகார் கூறியுள்ளார். இது பற்றி ஸ்வாதி இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது.. “@SwathiReddyOffl” என்ற ட்விட்டர் ஐடி ...

Read More »

அரசியல் உள்நோக்கம் -பி.மாணிக்கவாசகம்

கொரோனா வைரஸ் – கொவிட் 19 என்பது உலகப் பேரிடர். ஏனைய நாடுகளைப் போலவே இலங்கைக்கு அது தேசியப் பேரிடர். மனிதர்களில் தொற்றிப் பரவி, உயிர்களைப் பலி கொள்வதே அதன் ஒரே இலக்கு. கடந்த பத்து தினங்களுக்குள் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர்வரையிலான பொதுமக்களின் உயிர்களைக் குடித்து ஏப்பம் விட்டிருக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் 35 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் தொற்றிப்பரவி இன்னும் முன்னேறிக்கொண்டிருக்கின்றது. இந்தக் கொடிய வைரஸினால் 2 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். அதேவேளை 50 ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா?

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அபிமன்யூ சிங்கின் நீண்ட கால விசா மே 18ம் திகதியுடன் நிறைவடையிருக்கும் நிலையில், விசா காலம் நிறைவடையும் முன்னர் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க ஆங்கிலத் தேர்வின் முடிவுகளை விசா விண்ணப்பத்துடன் ‘அபிமன்யூ’ சமர்பிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள இச்சூழலில், PTE (Pearson ...

Read More »

சிறிலங்கா இராணுவம் பலி!

மின்னேரியா காவல் துறை  பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை – ஹபரணை வீதியில் உள்ள கிரித்தலை பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பத்து பேர் பயணித்த இராணுவ வாகனம் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து, வீதியை விட்டு விலகியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது 8 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ...

Read More »

அநாதரவான பிள்ளைகளை மனித வெடிகுண்டுகளாக மாற்ற திட்டம்!

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டதாக நம்பப்படும்,ப யங்கரவாதி சஹ்ரான் ஹசீமின் கும்பல், புத்தளம் – வனாத்துவில்லுவில் பகுதிகளில், பெற்றோரை இழந்த அநாதரவான பிள்ளைகளுக்கு ஆயுத பயிற்சி அளித்து, அவர்களை மனித வெடிகுண்டுகளாக சமூகமயப்படுத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனான சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதி ரில்வான், வனாத்துவில்லு பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிக்கு சென்று ஆயுதம் மற்றும் கைக்குண்டு பயன்பாடு குறித்து பயிற்சி கொடுத்து, அந்நிய மதத்தவர்களை கொலை செய்ய ...

Read More »

மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது!

சமீபத்தில் பாலிவுட் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்களான இர்பான்கான் மற்றும் ரிஷிகபூர் ஆகிய இருவரும் அடுத்தடுத்த நாட்களில் உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தனர். இதனால் பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இருவரின் இறுதிச்சடங்கில் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்கள் கூட இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவருக்கும் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறியபோது, ‘இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை!

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுவிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். வெசாக் தினமான நாளை கைதிகள் விடுதலையாகவுள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கும் ...

Read More »

தற்போதைய அரசாங்கம் பக்கச் சார்பாக செயற்பட்டு வருகிறது!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் அரசாங்கம் அதன் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. அதற்கான நிவாரணமும் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே மக்களுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களைக் கைவிட வேண்டாம் என்றும் அந்த கட்சி கோரிக்கை விடுத்தது. ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

Read More »

அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ?

ஹரி இயக்கத்தில் உருவாகும் அருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா- ஹரி காம்போவில் உருவான வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘அருவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இதன்மூலம் சூர்யா படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என கூறப்படுகிறது. ...

Read More »

முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் மனித பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இவ்வருடம் எளிமையான முறையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து ஏற்பாட்டுக்குழு நேற்று(05) விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு வருமாறு, முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18.05.2020 அன்று நடைபெறும். கொவிட் 19 பரவல் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள், சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி ...

Read More »