குமரன்

தமிழ் மக்களுக்கு உரிமைகளை கொடுக்காமல் இழுத்தடிப்பது இனியும் சாத்தியமற்றது என்கிறார் சம்பந்தன்!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளும் மிக நீண்டகால போராட்டத்தின் விளைவாக இன்று தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் முக்கியமான கட்டத்தில் உள்ளோம். எனவே அதற்கான அழுத்தங்களை கொடுக்கும் பலமான தமிழர் அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் எனவும் இனிமேலும் தமிழ் மக்களுக்கு உரிமைகளை கொடுக்காமல் இழுத்தடிப்பது சாத்தியமற்றது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள், இம்முறை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்து கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனைக் கூறினார். ...

Read More »

தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்?

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக்  கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான் நம்புவதாகத்  தெரிகிறது. உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டம் சுயேட்சைக் குழு தனக்கு 3 ஆசனங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது. கிளிநொச்சியில் சந்திரகுமாரின் ஆதரவாளர்களும் அங்கே ஒரு மாற்றம் ஏற்படும் என்று முகநூலில் எழுதுகிறார்கள். ஐந்கரநேசனும் தான் வெல்ல முடியும் என்று நம்புகிறார். ஒரு கூர்மையான அவதானி  பகிடியாகச்  சொன்னார் ...

Read More »

இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது

இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:- பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் ...

Read More »

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.  இந்த நிலையில் அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  கண் விழித்த பின் ...

Read More »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மூலப்பிரதி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனால் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டடு விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்திருந்தார்.

Read More »

கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்!!

“தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் இன்றைய நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது போர்க்குற்றம் என்ற சர்வதேச பொறியிலிருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அப்போதைய அரசாங்கத்துக்கு உதவியது போன்ற உதவிகளை எதிர்காலத்தில் தானும் அதனிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். கூட்டணியின் கருத்துப் ...

Read More »

உடல்நல மோசமடைந்ததால் பிரியா ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்!

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தமிழ் அகதி குடும்பம்: உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவி ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடியேற்றத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உடல்நல மோசமடைந்ததால் பிரியா ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் குழந்தைகளும் அவரது கணவரும் பிரியாவிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த ...

Read More »

பாடல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த ஐஏஎஸ் அதிகாரி

பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் சினிமாவில் திறமைகளை காண்பித்து வரும் நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பாடல் மூலம் கவனம் பெற்றிருக்கிறார். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் சினிமாவில் நுழைந்து பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் சிங் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது ‘தில் தோட் கே’ என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த பாடல் வீடியோ வெளியாகி நான்கு நாட்களில் 25 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ஒரு ஐஏஎஸ் அதிகாரி ...

Read More »

சுமந்திரனுக்கு விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு ஏன்?

சுமந்திரன் முன்பு 10 Field Bikes சகிதம் வலம் வந்தவர் இப்போது 20 Bikes இல் விஷேட அதிரடிப்படை காவல் வழங்க அவர்களுக்கு நடுவில் திரிகின்றார். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது கூட்டமைப்பினருக்கே தமது நடவடிக்கைகளில் பலத்த சந்தேகங்கள் காணப்படுகின்றன. எங்கே பொது மக்கள் தம்மை கேள்வி கேட்பார்களோ அல்லது எள்ளி நகையாடுவார்களோ அல்லது தமக்கு எதிராக சிறிய வன்முறைகளை பிரயோகிப்பார்களோ என்ற பயத்திலேயே இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு உதவிகளை பெற்றிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது” என தமிழ் மக்கள் ...

Read More »

பார்த்தவுடன் கட்டிப் பிடித்துவிட்டேன்……….

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், பார்த்தவுடன் கட்டிப் பிடித்துவிட்டேன் என்று பேட்டியளித்துள்ளார். பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் டேனி. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கியுள்ளார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் ...

Read More »