கொட்டுமுரசு

நிராகரிப்பும் நிர்க்கதியும்!

மக்கள் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்து கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வதே ஜனநாயகம். சாதாரண நிலையில் நிலைநாட்டப்பட்டுள்ள இந்த உரித்து, தேர்தல் காலத்தில் இன்னும் அதிக வலிமையைக் கொண்டிருக்கின்றது. தேர்தல் காலத்தில் அதற்கு முன்னுரிமை அளித்து கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான தேவை அங்கு நிலவுகின்றது. எனவே, அதற்கு இடமளித்துச் செயற்படுவதே தேர்தல் காலத்தின் உண்மையான ஜனநாயக நடவடிக்கையாகும். ஆனால், நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்ற இலங்கையில் அந்த ஜனநாயகப் பண்பு குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக நாட்டின் முக்கிய தேர்தலாகக் கருதப்படுகின்ற ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய அவுஸ்திரேலிய பெண்ணின் ஒரு மனிதாபிமான முயற்சி!

எஸ்பிஎஸ் நியுஸ் தமிழில்- ரஜீபன் அவர் வழமைக்குமாறான பயணிகள் கனமான முதுகுப்பொதிகளுடன் அங்குமிங்கும் நடமாடித்திரிவதை பார்த்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பின் சங்கிரிலா ஹோட்டலின் டேபிள் ஒன் விடுதிக்குஅருகில்  அவர்கள் அவரை தள்ளிவிட்டு சென்றனர். நான் அவர்கள் பயங்கரவாதிகள் என  ஒருபோதும் நினைவிக்கவில்லை அவர்கள் முரட்டுத்தனமானவர்களாக காணப்பட்டனர் என தெரிவிக்கின்றார் ஹனேகே மனோகரன் பின்னர் வெளியான சிசிடிவி காட்சிகள் ஹனேகே மனோகரனிற்கு அருகில் தற்கொலை குண்டுதாரியொருவர் காணப்படுவதை காண்பித்துள்ளன. பெருமளவானவர்கள் காணப்பட்ட உணவகத்தை அவர்கள் உன்னிப்பாக நோக்கினார்கள் அங்கு அனேகமாக வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே ...

Read More »

ஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்!

போர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது ; போர் அரசுக்கு சொந்தமானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல ; போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களில் எந்த கட்சியும் பயன்படுத்தமுடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்தவாரம் செயதியாளர் மகாநாட்டில் கூறியிருந்தார். ஆனால், அவரது அறிவுறுத்தலை அரசியல் கட்சிகள் மதித்துச் செயற்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. போரின் முடிவுக்கு பின்னர் மாத்திரமல்ல, முன்னரும் கூட போர் சகல தேர்தல்களிலும் முக்கியமான பிரசாரப்பொருளாக தாராளமாக அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இராணுவ ...

Read More »

ஜி ஜின்பிங்: இன்னொரு மாவோ!

மா சே துங்குக்குப் பிறகு சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக சீனாவில் உருவெடுத்துள்ளார் ஜி ஜின்பிங். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீன மக்கள் குடியரசின் அதிபர், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர், கட்சியின் தனிப்பெரும் தலைவர் என்று ஒரே சமயத்தில் பல உயர் பதவிகளை வகிக்கிறார். மாவோவின் சிந்தனைகள் எப்படி கட்சியின் சித்தாந்தங்களிலும் நாட்டின் சட்டங்களிலும் தாக்கம் செலுத்தினவோ அப்படி இன்றைய சீனாவில் ஜி ஜின்பிங்கின் சிந்தனைகளும் தாக்கம் செலுத்துகின்றன. 1953-ல் பிறந்த ஜி ஜின்பிங்கின் தந்தை ஜி ஜாங்க்ஸன், ...

Read More »

இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?

பிரஹ்மா  செல்லானி ( புதுடில்லி கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையத்தின் பேராசிரியர்) தமிழில் ரஜீபன் ஆசியாவின்  மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம்..இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சகுடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கறியப்பட்ட விடயம். ஒரு வருடத்திற்கு முன்னர் விரைவில் பதவி விலகவுள்ள ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட அரசமைப்பு சதி முயற்சியிலிருந்து இலங்கையின் ஜனநாயகம் தப்பியது. இம்முறை கோத்தாபய ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இலங்கையின் ...

Read More »

ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ?

பேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன? ஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்க ...

Read More »

உருகும் பனிமலைகள்… கொதிக்கும் பெருங்கடல்கள்!

உலக வெப்பமயமாதல் பற்றியும், பருவநிலை மாறுதல்கள் பற்றியும் சர்வதேச அளவில் கூடிக் கூடிப் பேசிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வு மட்டுமல்ல, பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உடனடித் தேவை. கரிப்புகை வெளியீட்டையும் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால், பெருங்கடல்களின் நீர்மட்டம் 2100-க்குள் மேலும் 40 செமீ உயரும். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டினால் 80 செமீ வரை நீர்மட்டம் அதிகரிக்கும். 1900-களிலிருந்து கடல் நீர்மட்டம் சராசரியாக16 செமீ உயர்ந்துள்ளது. பனி உறைந்து காணப்படும் ...

Read More »

பிரபஞ்சன்: காலம் கலை கலைஞன்!

பிரபஞ்சனின் வாசிப்பும் எழுத்தும் இறுதிவரை சற்றும் சோராதது. நூல்களை அறிமுகப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு தமிழ்ச் சூழலில் மிகவும் முக்கியமானது. மக்கள் டி.வி.யில் பணிபுரிந்த காலத்திலும் தினசரி காலை ஒளிபரப்பில் புத்தகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு விழாக்களுக்கு அதிகம் அழைக்கப்பட்டவரும் அவராகவே இருக்கக்கூடும். பக்க மற்றும் நேர வரையறைக்கேற்ப, சுருக்கமாகவும் விஸ்தாரமாகவும் புத்தகத்தை அவரால் அறிமுகப்படுத்த முடிந்தது. அர்ப்பணிப்புமிக்க இந்த நெடும் பயணத்தில், அவர் எண்ணற்ற நூல்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியபடி இருந்தார். இச்செயல்பாடு, மெல்ல மெல்ல புதிய தலைமுறைப் படைப்பாளிகளிடம் அவர் மீதான ஓர் ...

Read More »

ஸ்டாக்ஹோம் பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டை!

அணு ஆயுத திட்டங்களை கைவிடுவது தொடர்பாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் வடகொரிய அரசுகளின் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள வடகொரியா, இது தொடர்பான நடவடிக்கையை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளது. இருதரப்பும் இருவேறு கருத்துகளை வெளியிட்டிருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் ...

Read More »

இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்!

2009 மே 21 ம் திகதி ராஜீவ்நாகநந்தன் தனது தாய் சரோஜினியை இறுதி தடவையாக தொடர்புகொண்டார். நாகநாதன் 2008 ம் ஆண்டு செப்டம்பர் 17 ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்டார். இலங்கை கடற்படையினர் கப்பம் பெறுவதற்காக கடத்திய 11 இளைஞர்களில் இவரும் ஒருவர். இதனை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கண்டுபிடித்தனர். பிரிட்டன் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்காக ராஜீவ் செல்லவுள்ளதை கொண்டாடுவதற்காக சென்றுகொண்டிருந்த ராஜீவும் அவரது நான்கு நண்பர்களும் கடத்தப்பட்டனர். மே 21 ம் திகதி அவர் தாயுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பே இறுதி தொலைபேசி ...

Read More »