கொட்டுமுரசு

பெய்ரூட் வெடிவிபத்து: கற்பிதங்கள், உண்மைகள் மற்றும் பாடங்கள்

தொலைதூரத்திலிருந்து கேட்ட ஒரு பேரொலியிலிருந்துதான் எல்லாமே தொடங்கியது. லெபனானைச் சேர்ந்த பலரையும் போல எனது முதல் உள்ளுணர்வால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தேன். மருந்துக் கடையிலிருந்து வெளிவந்த நான் மேகங்களுக்கிடையில் உன்னிப்பாகக் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு இஸ்ரேலிய விமானத்தைப் பார்க்கப்போகிறேன் என்றே உறுதியாக நம்பினேன். இஸ்ரேலிய ஜெட் விமானங்களின் சத்தம் எனக்கு அத்துபடி. அச்சுறுத்தும் சத்தத்துடன் வரும் அந்த விமானங்களின் ஒலி காதைக் கிழிக்கும் வகையில் அதிகரித்துப் பின்னர் சன்னமாகி மறைந்துவிடும். ஒவ்வொரு வருடமும் லெபனான் வான் எல்லையில் 1,000 தடவைக்கும் அதிகமாக அத்துமீறி நுழையும் ...

Read More »

அவளுக்கு ஒரு வாக்கு ; நிராகரிக்கப்பட்டது ஏன்?

1931-2020 வரையிலான இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது என்பதனையே கடந்த 5 ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்துக்கான தேர்தலும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வலுப்பெற்று வரும் நிலையில் பெண்கள் உள்ளதையும் இழந்த கதையாகவே பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் புதிய பாராளுமன்றத்திற்கு எட்டு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட ...

Read More »

மக்களுடன் இணைந்து நின்று பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவேன்

நாட்டிலுள்ள இன ரீதியான அடக்குமுறையினால் கடந்த காலம் தொட்டு வடகிழக்கில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை தமிழ் மக்கள் மீது கடந்தகால தமிழ்மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை என்பதை அம்பாறை தமிழ்மக்களின் வாக்குகள் கட்டியம் கூறி நிற்கின்றன. நிச்சயமாக கூட்டமைப்பு வடகிழக்கில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது, கடந்த தேர்தல்களில் கிடைக்கப்பெற்ற ஆசனங்களை விட 2020, தேர்தலில் பெற்ற ஆசனங்கள் கணிசமாக குறைந்திருக்கின்றது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அந்த அடிப்படையில் முற்று முழுதாக நாங்கள் மக்களிடமிருந்து தூக்கியெறியப்பட்டோம் என்று சொல்ல முடியாது. நாங்கள் மக்கள் மத்தியில் ...

Read More »

திரிசங்கு நிலையில் சுமந்திரன்

சரியான முடிவெடுப்பது முக்கியமல்ல, அதனை சரியான நேரத்திலும் எடுக்க வேண்டும். அதுபோல சரியான முடிவை சரியான நேரத்தில் மாத்திரம் எடுத்தால் மட்டும் போதாது, சரியான முறையிலும் எடுக்க வேண்டும். இது, பொதுத் தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமைக்கு மிகவும் பொருத்தமானது. பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக தோன்றிய சர்ச்சைகள் மாத்திரமன்றி, தமிழ் அரசுக் கட்சியின் தலைமை தொடர்பாக தோன்றியிருக்கின்ற குழப்பங்களுக்கும் கூட, இது பொருத்தமுடையது தான். அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிட்டு வாக்குகளை ...

Read More »

ஆட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச  பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசில் தமிழ்,முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் கடந்த புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் நடந்தேறிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமனம் மற்றும் அதன் பின்னரான அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் மூலம் நிதர்சனமாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின் 25 பேரைக் கொண்ட அமைச்சரவையில் ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் 39 பேரைக்கொண்ட இராஜாங்க அமைச்சர்களில் இரு தமிழர்களுக்கும் ...

Read More »

திருகோணமலை தளத்தில் சித்திரவதைகள் இடம்பெறவில்லையாம்!

திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சைட் என்ற இடம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது சித்திரவதைகளுக்கு அந்த பகுதியை பயன்படுத்தவில்லை என அந்த முகாமின் தளபதி சுமித் ரணசிங்க தெரிவித்துள்ளார் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சட் பகுதியை நல்லாட்சி அரசாங்கத்தில் கோத்தா முகாம் என அழைத்தனர் என சுமித் ரணசிங்க அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் 700 விடுதலைப்புலிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என நல்லாட்சி அரசாங்கத்தில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ...

Read More »

எமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும்

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ...

Read More »

தேசியப் பட்டியல் பதவி யாருக்கு? வீட்டுக்குள் வெடித்தது பூகம்பம்!

பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு ஆரம்பமானபோதே, தேசியப்பட்டியல் குறித்த சர்ச்சை கூட்டமைப்புக்குள் ஆரம்பமாகிவிட்டது. அம்பிகாவா?, கே.வி.தவராஜாவா?, திருமலை குகதாசனா? என ஆரம்பமான அந்த சர்ச்சை இப்போது சசிகலாவா? கலையரசனா? மாவையா என்ற கேள்விக்குறியுடன் தொடர்கின்றது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் கேள்விக்குப் பதில் காணவேண்டும் என்பதால் அடுத்த மூன்று நாட்களும் வீட்டுக்குள் பூகம்பம்தான்! கடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்தது. ஆனால், இந்த முறை ஒன்றுதான் கிடைக்கும் என்பது முன்னரே ஊகிக்கப்பட்டிருந்தமையால் போட்டி கடுமையாக இருந்தது. தேசியப் பட்டியல் மூலமாக வருவதற்கு ...

Read More »

திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்

தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால் அவர்களுக்கு வடக்கு கிழக்கிலுள்ள அவர்களுடைய நண்பர்களும் இணைந்தால்தான் முடியும். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்தேசிய வாக்குத்  தளத்தை உடைத்து அதிலிருந்து ஒரு தொகுதி வாக்குகளை மறைமுகமாக தாமரை மொட்டுக்குப் பெற்றுக் கொடுத்த வடக்கு-கிழக்கு மைய கட்சிகளும் இணைந்து தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குகின்றன.அப்படி என்றால் தமிழ் மக்களின் ...

Read More »

கடந்த 10 ஆண்டுககடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்ளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்

கேரளாவில் நேற்று இரவு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துகள் குறித்த ஒரு அலசலை காண்போம். வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர். விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து ...

Read More »