கொட்டுமுரசு

தனிச் சிங்கள பௌத்தர்களைக் கொண்ட செயலணி என்ன செய்யும்?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னதாக, இரண்டு ஜனாதிபதி செயலணிகளை உருவாக்குதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறார். முதலாவது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கமான, பண்பான, சட்டத்தை மதிக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி. இரண்டாவது, கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர், பௌத்த பீடங்களின் உயர்மட்டக் குழுவை மாதம் தோறும் சந்தித்து வருகிறார் அவ்வாறான இரணடாவது சந்திப்பு அண்மையில் நடந்த போது, கிழக்கில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ...

Read More »

இராணுவ ஆட்சிக்கு அரண் அமைக்கும் செயலணிகள்!

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணவென அமைக்கப்பட்டுள்ள செயலணி, தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி அனைத்து வலையமைப்புகளையும் உள்வாங்க உருவாக்கப்பட்டுள்ள செயலணி என்பவற்றில் படைத்துறையினரையும், சிங்கள பௌத்தர்களையும் மட்டும் இடம்பெறச் செய்வதன் பின்னணி என்ன? எஞ்சியுள்ள தமிழர் நிலங்களை சூறையாடுவதும், தமிழர் உரிமைக்குரலை நசுக்குவதும்தான் காரணம் என்பதை தமிழர் தலைமைகள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றன? இலங்கை அரசாட்சியில் எங்கும் எதிலும் ராணுவம் என்ற நிலை மேலோங்கி வருகிறது. எதற்கெடுத்தாலும் ராணுவத்தினரையே நியமனம் செய்கின்ற புதிய ஒழுங்குமுறை உருவாக்கப்பட்டுள்ளது. சரியாக நான்கு மாதங்களுக்கு முன்னரும், ...

Read More »

ஜோர்ஜ் புளொய்டின் கொலையும் கலவரங்களும் அமெரிக்காவில் ஆழமாக வேர்விட்ட இனவெறியின் வெளிப்பாடு

மிகவும் மிருகத்தனமான முறையில் 46 வயதான ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து நாடு பூராகவும் பரவியிருக்கும் கட்டுக்கடங்காத கலவரங்களும் ‘உலகின் மிகப் பழமை வாய்ந்த ஜனநாயகம்’ என்று தன்னைக் கூறிக்கொள்கின்றதும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்கா பூராகவும் மனித உரிமைகளின் மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்கின்ற நாடான அமெரிக்காவில் இனவெறி எந்தளவு தூரத்திற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. அமெரிக்க நடிகர் ஜக் ஹீலியும், புலனாய்வுப் பத்திரிகையாளர் டியோன் சியேஸியும் மே 30 நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ...

Read More »

ஜனநாயக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு

ஜனநாயக சோஷலிசக் குடியரசு என்ற நாட்டின் ஜனநாயகத் தன்மையைக் கொண்ட பெயருக்கும், அதன் ஜனநாயகப் பாரம்பரிய பெருமைக்கும் ஊறு விளைவிக்காத வகையில் ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. நாடாளுமன்றக் கலைப்புக்கான வர்த்தமானி அறிவிப்பையும், ஜுன் 20 ஆம் திகதி தேர்தலுக்கான அறிவிப்பையும் அடிப்படை உரிமை மீறல் என்ற வகையில் சவாலுக்கு உட்படுத்திய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஒரு சாராரும் இல்லை இல்லை இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த ...

Read More »

இரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளின் ஒரு கதை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக 2019 நவம்பர் 18 பதவியேற்றுக்கொண்ட கோதாபய ராஜபக்ச இப்போது பதவியில் 6 மாதங்களை நிறைவுசெய்திருக்கிறார். குறுகிய ஆனால் பரபரப்பூட்டும் நிகழ்வுகள் நிறைந்த இந்த பதவிக்காலத்தில் அவர் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார் ; தொடர்ந்து முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியாக கோதாபயவின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வது இந்த கட்டுரையில் எனது நோக்கமல்ல.பதிலாக, அவரின் ஆட்சியின் கீழான இந்த சில மாதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவியின் இயல்பு ; மிகவும் அசாதாரணமான பாணியில் எவ்வாறு மாறுதலுக்குள்ளாகியிருக்கிறது என்பதில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். ...

Read More »

கொரோனா நியூசிலாந்தின் அனுபவம்

நியூசிலாந்து கொரோனாத் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றது. தெளிவு, வேகம், வெளிப்படைத்தன்மை போன்றவைகளை உள்ளடக்கிய தேசபரிபாலனத்தின் அணுகுமுறையே அதற்கு முக்கிய காரணமாகும். ஐந்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தேசத்தில் லொக்டவுன் கட்டுப்பாடு ஏழுவாரம் நீடித்தது. அஃது உலகிலேயே கடுமையான லொக்டவுன் எனச் சொல்லப்படுகின்றது. கொரோனாத் தொற்றை எதிர்கொள்வதில் தேசபரிபாலனத்தின் மாண்புகளை நியூசிலாந்து வெளிப்படுத்தியிருக்கின்றது. தெளிவான அரசியல் தலைமை, உறுதியான நிர்வாகக் கட்டமைப்பு, சமத்துவமான சுகாதாரச்சேவை, துறைசார்வல்லுனர் குழாம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த செயற்படு பாங்கு, அதனை மெருகேற்றியிருக்கின்றது. “சரியானதைச் செய்யவேண்டும். அஃது அறம் வழிப்பட்டதாக இருக்கவேண்டும்” ...

Read More »

யாழ் நூலக எரிப்பு : அரங்கேற்றப்பட்ட இனவாதம் – 39 வருடம் நிறைவு

யாழ் நூலக எரிப்பென்பது சாதாரணமான ஒரு வன்முறையல்ல. அது வேண்டும் என்று அரங்கேற்றப்பட்ட ஓர் இனவாத அரசியல் நாடகம். திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரும் தாக்குதல். தீர்மானம் மிக்கதோர் இன அழிப்பு நடவடிக்கை. தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல் ஆகிய அம்சங்களை அழித்தொழித்ததோர் இன வன்முறை. அதுவும் ஓர் அரச வன்முறை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியடைந்தையடுத்து, வேறு வழியின்றி தனிநாட்டைக் கோருவதைவிட வேறு வழியில்லை என்ற அரசியல் ரீதியான வெறுப்பின் விளிம்பில், தமிழ்த் ...

Read More »

யாழ்,நூலகம் எரிக்கப்பட்ட 39 ம் ஆண்டின் நினைவுகள்

தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ்.நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 39 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு ...

Read More »

பேரபாயத்தை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள்

1958ஆம் ஆண்டின் முற்பகுதியில், அம்பாறைக்கு அருகிலுள்ள குளமொன்றின் அணைக்கட்டில், ‘புல்டோசர்’ இயந்திரமொன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார், சிங்கள இனத்தைச் சேர்ந்த சாரதி ஒருவர். புல்டோசரில் கற்றூண் ஒன்று சிக்குப்படுகின்றது. அப்போது, அங்கு பணியிலிருந்த தமிழ் மேற்பார்வையாளர், அக்கற்றூணைக் குளத்துக்குள் போடும்படி, கூறுகிறார். சிலநாள்களின் பின்னர், அந்தக் கற்றூண், அம்பாறையில் உள்ள கல்லோயா அபிவிருத்திச் சபையின் அலுவலகத்துக்கு முன்னால், மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. காரணம், அந்தக் கற்றூணில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்ட சாசனம் காணப்பட்டது. அதில், குளத்துநீரை நீர்ப்பாசனத்துக்காகப் பங்கிடுவது தொடர்பான விதிகள் குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லோயாப் பிரதேசம், சிங்கள ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ‘தமிழ்க்குரல்’ சண்முகம் சபேசன் காலமானார்!

அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனை தளமாகக்கொண்டிருந்து இயங்கிய தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர் வாழ்வுக்கழகம், மற்றும் 3 CR வானொலி தமிழ்க்குரல் ஒலிப்பரப்புச்சேவை முதலானவற்றில் நீண்டகாலமாக ஈடுபட்டுழைத்திருக்கும் சண்முகம் சபேசன் இன்று ( 29 -05 – 2020 ) ஆம் திகதி அதிகாலை மெல்னில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது. அவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்தபின்னர் எனக்கு அறிமுகமாகி, நான் உறவாடி மகிழ்ந்தவர்களில் கலை, இலக்கியம், கல்வி, ஊடகம் முதலான துறைகளிலும் மற்றும் சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட பலரைப்பற்றி தொடர்ச்சியாக ...

Read More »