செய்திமுரசு

கிழக்கு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல்

திருகோணமலைக்கு அருகில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் லைபீரியா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்து ஏற்றி வந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த கப்பலுக்கு உதவுவதற்காக இரண்டு கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

சுகாதார அமைச்சருக்கு கொவிட் தொற்று உறுதி!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடி என்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், மேற்கொள்ளப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் அவர் சுயதனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

சகல கைதிகளும் சமமானவர்கள் அல்ல: வர்க்கபேதம், இனத்துவம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்

நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்தபோது சந்தித்த கனகசபை தேவதாசன் 64 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்தக் காலப்பகுதியில்; பத்து வருடங்களுக்கு மேல் அவர் சிறைச்சாலையில் கழித்து விட்டார். 2021 ஜனவரி 6ஆம் திகதி தேவதாசன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தமது வழக்கில் துரிதப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் பேசப் போவதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து ஜனவரி 16ஆம் திகதி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். தாம் மூன்று வார காலம் தற்காலிகமாக உண்ணாவிரதப் ...

Read More »

படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி

லிபியாவில் படகு கவிழ்ந்த விபத்துகுள்ளானதில் கடலில் மூழ்கி 43 அகதிகள் பலியாயினர். 10 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ‌ஷவையா உள்ளது. இந்த நகரில் இருந்து ஒரு படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சில மணி நேரம் பயணித்த நிலையில் திடீரென்னு படகின் என்ஜின் பழுதாகி நின்றது. இதனால் நிலை தடுமாறிய அந்த படகு கவிழ்ந்தது. இதில் அந்த ...

Read More »

ஆஸ்திரேலிய மத போதகர் தனது குழந்தைகளுடன் ஒரிசாவில் எரித்துக்கொள்ளப்பட்ட நாள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் மற்றும் தனது இரண்டு குழந்தைகள் மர்ம மனிதர்களால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். இதே திகதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1906 – பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர். * 1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது. * 1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் ...

Read More »

மட்டக்களப்பில் கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு

மட்டக்களப்பு கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரின் மனைவி கொரோனா தொற்றினால் இன்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 7 தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது. இதனையடுத்து குறித்த கும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி ...

Read More »

நிகழ்நிலை நிதி மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் மொபைல் கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளில் பெரும்பாலானவை வலை அல்லது மொபைல் பயன்பாட்டு அடிப்படையிலான எளிதான கடன் திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஈர்க்கின்றன. இத்தகைய கடன் விண்ணப்ப மதிப்பீட்டு செயற்பாட்டின் போது, ​​மோசடி செய்பவர்கள் இரகசியமான தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல் / தரவு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. டெபிட் / கிரெடிட் அட்டைகள் – அட்டை ...

Read More »

நினைவுத் தூபி தகர்ப்பு கற்றுத் தந்த பாடங்கள்!

அதிரடியாக வருகின்ற புல்டோசர் வாகனம் ஓசைபடாமல் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைகின்றது. அடுத்த கனமே அங்கு நுழைவாயிலுக்கு அருகில் முள்ளிவாய்க்காலில் இறந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட தூபியை ஐந்து- ஆறு நிமிடங்களில் இருந்த இடமே தெரியாது தகர்த்தெறிகின்றது அந்த புல்டோசர் இயந்திரம். இந்த தகவல்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களால் வெளியில் சொல்லப்பட விரைந்து வந்த மாணவர்கள், அயலவர்கள், அரசியல்வாதிகளுக்கு பேரதிர்ச்சி. அங்கு இருந்த நினைவுத் தூபியைக் காணவில்லை. களத்தில் இருந்த பொலிசாரிடம்  தகர்ப்புக்கு நியாயம் கேட்டனர் மாணவர்கள். துணை வேந்தர் இது மேலிடத்தில் இருந்து ...

Read More »

ஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்

உண்மையான அணி (இங்கிலாந்து) உங்கள் மண்ணில் விளையாடி உங்களை வீழ்த்த இருக்கிறது. அதனால் ஆஸ்திரேலியா வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டும் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணி வீரர்களும் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் கெவின் ...

Read More »

பிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் விபரங்கள் சிதம்பரநாதன் அருணாச்சலம் (அருண்) பிறப்பிடம்: குச்சம் வல்வெட்டித்துறை வாழ்விடம்: ஊறணி வல்வெட்டித்துறை, லண்டன் பிரித்தானியா ஞானக்குமரன் புத்திரசிகாமணி பிறப்பிடம்: வல்வெட்டித்துறை வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா நிர்மலா சத்தியசீலன் பிறப்பிடம்: வல்வெட்டித்துறை வாழ்விடம்: லண்டன் பிரித்தானியா வெங்கடாசலம் கணேசபாக்கியன் (கிளிப்பிள்ளை அப்பா) பிறப்பிடம்: குச்சம் வல்வெட்டித்துறை வாழ்விடம்: லண்டன் பிரித்தானியா நாதநாயகி சண்முகசுந்தரம் (சந்திரா) பிறப்பிடம்: அமொிக்க மிஷன் ஒழுங்கை வல்வெட்டித்துறை வாழ்விடம்: லண்டன், பிரித்தானியா ...

Read More »