செய்திமுரசு

இராணுவ ஆட்சிக்கு அரண் அமைக்கும் செயலணிகள்!

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணவென அமைக்கப்பட்டுள்ள செயலணி, தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி அனைத்து வலையமைப்புகளையும் உள்வாங்க உருவாக்கப்பட்டுள்ள செயலணி என்பவற்றில் படைத்துறையினரையும், சிங்கள பௌத்தர்களையும் மட்டும் இடம்பெறச் செய்வதன் பின்னணி என்ன? எஞ்சியுள்ள தமிழர் நிலங்களை சூறையாடுவதும், தமிழர் உரிமைக்குரலை நசுக்குவதும்தான் காரணம் என்பதை தமிழர் தலைமைகள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றன? இலங்கை அரசாட்சியில் எங்கும் எதிலும் ராணுவம் என்ற நிலை மேலோங்கி வருகிறது. எதற்கெடுத்தாலும் ராணுவத்தினரையே நியமனம் செய்கின்ற புதிய ஒழுங்குமுறை உருவாக்கப்பட்டுள்ளது. சரியாக நான்கு மாதங்களுக்கு முன்னரும், ...

Read More »

யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பு லோகநாதபிள்ளை தனது 85 ஆவது வயதில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். யாழ் நாரந்தணையில் பிறந்த லோகநாதபிள்ளை தனது கல்வியை கரம்பன் சென் அன்றனிஸ் கல்லூரியில் பயின்று பின்னர் 1957ல் கொழும்பு வீரகேசரி பத்திரிகையில் தனது பணியை தொடங்கினார். பின்னர் கொழும்பு மாநகரசபையில் உத்தியோகத்தராக சேர்ந்தார். கொழும்பில் பணியாற்றிய போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தந்தை செல்வா மற்றும் தமிழ் தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற அகிம்சை போராட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டிருந்தார். 1983ல் ஏற்பட்ட இன கலவரத்தினால் ...

Read More »

இந்திய எல்லையை கண்காணிக்க புதிய தளபதியை நியமித்தது சீனா

 இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்கும் மேற்கு மண்டல் படையின் தரைப்படை பிரிவுக்கு சீனா, லென்டினன்ட் ஜெனரல் சூ கிலிங்கை புதிய தளபதியாக நியமித்து இருக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. நீள எல்லை உள்ளது. சீன ராணுவம் அடிக்கடி எல்லையை தாண்டி இந்திய நிலப்பகுதிக்குள் ஊடுருவுவதால் பிரச்சினை ஏற்படுகிறது. லடாக் எல்லை பகுதியில் சமீபத்தில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் உண்டான பதற்றத்தை தணிக்க இன்று (சனிக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவுடனான எல்லையை பாதுகாக்கும் மேற்கு மண்டல் படையின் ...

Read More »

சிறிலங்காவில் நாளை தேர்தல் ஒத்திகை

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்திகை தேர்தல் நாளை (7) காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை இடம்பெறவுள்ளது. அம்பலாங்கொடை விலேகொட தம்யுக்திகாராம விகாரையின் மண்டபத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்காக 200 வாக்காளர்களை மாத்திரம் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வாக்குச் சாவடியொன்றை நடத்திச் செல்லும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை இணங்காண்பதே இந்த தேர்தல் ஒத்திகையின் நோக்கமாகும். சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமி நீக்கி திரவத்தை உபயோகப்படுத்தல், தேசிய அடையாள ...

Read More »

சிறிலங்கா ஜனாதிபதி, பிரதமர் நாட்டின் சிவில் சட்டங்களை மீறுகின்றனர்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நாட்டின் சிவில் சட்டத்தை மீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், துறைச்சார் தேர்ச்சி பெற்றவர்கள் ஊடாக முன்னெடுக்க வேண்டிய பிரிவுகளுக்கு இராணுவத்தினரை நியமித்து வருவது இராணுவ ஆட்சிக்கு வித்திடுவதாகும் என்றும் கூறினார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்க சட்டவிதிகளை அரசாங்கம் மீறிவருவதுடன் , அமெரிக்க இராஜதந்திரி தொடர்பிலும் அக்கறையின்றி இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அமைச்சின் ...

Read More »

ஜோர்ஜ் புளொய்டின் கொலையும் கலவரங்களும் அமெரிக்காவில் ஆழமாக வேர்விட்ட இனவெறியின் வெளிப்பாடு

மிகவும் மிருகத்தனமான முறையில் 46 வயதான ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து நாடு பூராகவும் பரவியிருக்கும் கட்டுக்கடங்காத கலவரங்களும் ‘உலகின் மிகப் பழமை வாய்ந்த ஜனநாயகம்’ என்று தன்னைக் கூறிக்கொள்கின்றதும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்கா பூராகவும் மனித உரிமைகளின் மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்கின்ற நாடான அமெரிக்காவில் இனவெறி எந்தளவு தூரத்திற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. அமெரிக்க நடிகர் ஜக் ஹீலியும், புலனாய்வுப் பத்திரிகையாளர் டியோன் சியேஸியும் மே 30 நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ...

Read More »

பார்த்திருக்கவே கறுப்பு நிறமாகிய உடல்! கொரோனாவால் மரணித்த வைத்திய நிபுணர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீன வைத்தியர் ஒருவருக்கு உடல் முழுவதும் நிறம் மாறிக் கொண்டே வந்தது. கறுப்பு நிறமாக மாறிய நிலையில், சிகிச்சை பலனின்றி வைத்தியர் இறந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சீனாவில் முன்னணி வைத்தியரான ஹூ வெய்பெங் ட்னி என்ற பெயருடைய வைத்தியர், சிறுநீரக வைத்திய நிபுணராவார். குறித்த பகுதியில் பிரபலமான வைத்தியர் இவர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், இவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, இவருடன் வேலை பார்த்த மற்றொரு வைத்தியரான யி-பன் என்பவருக்கும் தொற்று ...

Read More »

தாயுடன் பேச முருகன், நளினியை மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதிக்க முடியாதா?-

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் முருகன், வெளிநாட்டில் வாழும் அவர் தாயுடன் தொலைபேசி மூலமாக பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா? என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் தந்தை சமீபத்தில் காலமானார். இந்நிலையில், இலங்கையில் வசிக்கும் முருகனின் தாய் மற்றும் லண்டனில் வசிக்கும் தங்கையுடன் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பேச முருகனுக்கும், நளினிக்கும் அனுமதியளிக்க உத்தரவிடக் ...

Read More »

இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்

மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்போது ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும். இந்த நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதில் ...

Read More »

மீனவருடன் 10 வருடமாக நட்புக்கொண்டுள்ள கொக்கு !

வவுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம்தான் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவர்.இவர் இருபது வருடமாக அந்தக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார். அவருடன் கூடவே தோணியில் ஒரு கொக்கும் கடந்த பத்து வருட காலமாக செல்வது அதிசயமான காட்சியாக உள்ளது. நான் இக்குடியிருப்புக் குளத்தில் இருபது வருடங்களாக மீன்பிடித்து வருகின்றேன். கடந்த பத்து வருடமாக இந்தக் கொக்கு என்னுடனேயே தோணியில் வருகின்றது. குளத்துக்குள்ளே நான் மீன்பிடிக்க இறங்குவதில் இருந்து ...

Read More »