திரைமுரசு

பரவை முனியம்மா காலமானார்

தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று(ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76. சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா. தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை ...

Read More »

ராஜமவுலி படத்திற்காக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் மதன் கார்க்கி

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக பாடலாசிரியர் மதன் கார்க்கி வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பீதி காரணமாக ...

Read More »

ஒரே வழிதான் இருக்கு – ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் 144 தடைச்சட்டம் போட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.   ஆனால் பலரும் இதை பொருட்படுத்தாமல் வெளியே சென்று வருகிறார்கள். இதற்காக சினிமா நட்சத்திரங்கள் பலரும் அறிவுரை கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் இயக்குனர் லாரன்ஸ் ...

Read More »

கொரோனா பீதியால் ஆடம்பர திருமணத்தை தவிர்த்த நடிகர்

கொரோனா பீதியால், துபாயில் ஆடம்பரமாக நடைபெற இருந்த திருமணத்தை ரத்து செய்து விட்டு, பிரபல நடிகர் ஒருவர் வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் செய்ய உள்ளாராம். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நிதின். இவர் தெலுங்கில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்த படம், அதே பெயரில் ஜெயம் ரவி நடிக்க தமிழில் ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் நிதின் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ராம்கோபால் வர்மா இயக்கிய ‘அக்யுத்’ இந்தி படத்திலும் நடித்துள்ளார். சில படங்களை ...

Read More »

கொரோனா நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு ...

Read More »

சேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்

நடிகர் டாக்டர் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் அவரது உடலை சுமந்து சென்று உள்ளார். தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் சேது ராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.  நடிகரும் சேதுராமனின் ...

Read More »

அம்மாவுடன் ஊறுகாய் போட்ட நடிகர்

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தன்னுடைய அம்மாவுடன் இணைந்து ஊறுகாய் செய்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நாகசவுரியா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் இயக்கிய தியா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் பல படங்களையும் தயாரித்துள்ளார். கொரோனா எதிரொலியால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாக சவுரியா தனது அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் போட்டுள்ளார். மேலும் இந்த காணொளி  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ...

Read More »

பணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்த பிரகாஷ் ராஜ்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பணியாளர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே சம்பளம் கொடுத்திருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல துறைகளும் முடங்கி இருக்கிறது . இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை முன்கூட்டியே சம்பளம் கொடுத்திருக்கிறார்.    இது குறித்து அவர் டுவிட்டரில், எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கி விட்டேன். கட்டுப்பாடு காரணமாக நின்று போயிருக்கும் எனது ...

Read More »

ஊரடங்கு காலத்தை பயனுள்ள விடயங்களில் முதலீடு செய்ய காஜல் முடிவு!

ஊரடங்கு காலத்தில் புதிய விடயங்களை கற்றுக் கொண்டு, தம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ள இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார். கொரோனாவைரஸ் தொற்று பரவலை கட்டபடுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கம் நேற்று இரவு முதல், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை காஜல்அகர்வால், 21 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் இதனை உபயோகமுள்ள நேரமாக மாற்றிக்கொள்ள தீர்மானித்திருக்கிறாராம். இதுகுறித்து ட்வீட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது… 21 நாட்கள் என்பது, பழைய பழக்க வழக்கங்களை மறந்து, புதிய ...

Read More »

லாஸ்லியாவை நெகிழ வைத்த ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி நெகிழ வைத்திருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் லாஸ்லியா. வீட்டில் இருக்கும் போதே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.   தற்போது இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.    இந்நிலையில் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடிய லாஸ்லியாவிற்கு, ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துகளை கூறினார்கள். ...

Read More »