திரைமுரசு

ஒத்தையடி பாதை போட்டேன்… இன்று எட்டு வழிச்சாலையாக மாற்றியிருக்கிறார்

சென்னையில் நடந்த விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மகன் விஜய் பற்றி பேசி இருக்கிறார். விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த விழாவில் விஜய்யின் திரையுலக வளர்ச்சி பற்றி மனம் திறந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். ஒரு படைப்பாளி நினைத்தால் களிமண்ணையும் அழகான பானையாக்க முடியும். உண்மையான உழைப்பு இருந்தால் அழகு ஒரு பொருட்டே இல்லை. என் மகனுக்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதை தான் போட்டுக் கொடுத்தேன் இன்று ...

Read More »

புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கிய சூர்யா

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தி இருக்கிறார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் ...

Read More »

அண்ணாத்த படம் வெளியானது… ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது. பல இடங்களில் ரசிகர்கள் மழை என்றும் பாராமல், உற்சாகமாக வெடி வைத்து கொண்டாடினார்கள். பேனர், தாளம், நடனம் ஆடி படத்தை வரவேற்று இருக்கிறார்கள். ரசிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி ...

Read More »

இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் இப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.   இந்நிலையில், இருளர் ...

Read More »

பெற்றோர்களுக்கு அட்வைஸ் சொன்ன சமந்தா

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமந்தா, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். சமீபத்தில் கணவரை பிரிவதாக அறிவித்த சமந்தா, தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து இருக்கிறார். தான் செல்லும் இடங்களில் இருந்து புகைப்படங்களை செய்து வரும் சமந்தா, சமூக வலைத்தளத்தில் நாக சைதன்யாவோடு இருந்த புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார். அதோடு பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அறிவுரையும் சொல்லியிருக்கிறார். அதில் உங்கள் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் ...

Read More »

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்

நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ...

Read More »

கமல், இளையராஜாவுக்கும் பால்கே விருது வழங்க வேண்டும் – வைரமுத்து வலியுறுத்தல்

கவிஞர் வைரமுத்து, டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ...

Read More »

ஜான்வி கபூர் நடனத்தை பார்த்து பட வாய்ப்பு கொடுத்த பிரபல நடிகர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் நடனத்தை பார்த்து பிரபல நடிகர் ஒருவர் பட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு உரியத் தொகையைப் பெற்றுக் கொள்கிறார்கள். தமிழில் மட்டும்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுப்பது என்பது கௌரவக் குறைச்சலாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரன்வீர்சிங் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கலந்து கொண்டிருக்கிறார். இதில் ஜான்விக்கு வைத்த வினாடி வினா போட்டியில் ...

Read More »

நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் பிரபலமான பால் வாக்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைந்தார். மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மகள் திருமண விழாவில், மணமகளுடன் பிரபல நடிகர் வின் டீஸல் நடந்து வந்த தருணத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் இந்திய ரசிகர்களின் மனம்கவர்ந்தவர்கள் நடிகர்கள் பால் வாக்கர் மற்றும் வின் டீஸல். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால் வாக்கர் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இந்நிலையில், ...

Read More »

சீரடி சாய்பாபா வேடத்தில் நடிக்க 60 நாட்கள் விரதம் இருந்த நடிகர்

‘சீரடி சாய்பாபா மகிமை’ படத்தை இயக்கியுள்ள பிரியா பாலு, ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், டெலிபிலிம்களையும் இயக்கி உள்ளார். சீரடி சாய்பாபாவின் அற்புதங்களை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி திரைப்படமாக எடுக்கின்றனர். பிரியா பாலு இயக்கும் இந்த படத்துக்கு, ‘சீரடி சாய்பாபா மகிமை’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். சாய்பாபாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர், ‘என் நெஞ்சை தொட்டாயே, ’ ‘திகிலோடு விளையாடு’ ஆகிய படங்களில் நடித்தவர். பல குறும்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சாய்பாபா வேடத்துக்காக இவர், 60 நாட்கள் விரதம் இருந்து ...

Read More »