‘சீரடி சாய்பாபா மகிமை’ படத்தை இயக்கியுள்ள பிரியா பாலு, ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், டெலிபிலிம்களையும் இயக்கி உள்ளார்.
சீரடி சாய்பாபாவின் அற்புதங்களை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி திரைப்படமாக எடுக்கின்றனர். பிரியா பாலு இயக்கும் இந்த படத்துக்கு, ‘சீரடி சாய்பாபா மகிமை’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். சாய்பாபாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர், ‘என் நெஞ்சை தொட்டாயே, ’ ‘திகிலோடு விளையாடு’ ஆகிய படங்களில் நடித்தவர்.
பல குறும்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சாய்பாபா வேடத்துக்காக இவர், 60 நாட்கள் விரதம் இருந்து நடிக்கிறார். பல படங்களில் நடித்துள்ள வினாயகராஜ், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை இயக்கி உள்ள பிரியா பாலு, ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், டெலிபிலிம்களையும் இயக்கி உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal