திரைமுரசு

தி ஜங்கிள் புங் படத்துக்கு ஒஸ்கார் விருது

சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஒஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது. 89-வது ஒஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல், சிறந்த அனிமேஷன் விருது ஜூடோபியா படத்துக்கு கிடைத்துள்ளது. தி லையன் கிங் படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரம் சுன்னி பவர் ஒஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளார். மேலும் சில விருதுகள் விவரம்:- சிறந்த துணை நடிகர் – ...

Read More »

07 ஆண்டுகளுக்கு திரையில் இணையும் காதல் ஜோடி!

பாலிவுட்டில் பிரபலமான காதல் ஜோடி அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இருவரும் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறந்த காதல் தம்பதிகளாக விளங்கும் அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் ஜோடி, ‘குரு’, ‘ராவண்’, ‘குச் நா கஹோ’ உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது இவர்கள் ஜோடியில் ‘குலாப் ஜாமூன்’ திரைப்படம் உருவாகிவிருக்கிறது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் இயக்கவிருக்கிறார். எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இயக்குனர் தரப்பில் ...

Read More »

மீண்டும் வருகிறார் தெறி பேபி நைனிகா!

தம்பிக்கோட்டை படத்திற்கு பிறகு செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த மீனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனபோதும் திரிஷ்யம் உள்பட சில மலையாளப் படங்களில் நடித்தார். அதோடு திரிஷ்யம் படம் தமிழில் கமல் நடிப்பில் ரீமேக் ஆனபோது அதில் நாயகியாக நடிக்க முயற்சி எடுத்தார் மீனா.ஆனால் கமலின் பலத்த சிபாரிசின்பேரில் அந்த வாய்ப்பு கெளதமிக்கு சென்று விட்டது. அதனால் இப்போதுவரை தமிழில் படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் மீனா. ஆனால், தனது மகள் நைனிகாவை விஜய் நடித்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக அறிமுகம் செய்தார். அப்படத்தில் ...

Read More »

பெண்களுக்காக ஒரு சினிமா

அழகு, அன்பு, அற்புதம், காதல், காமம், வீரம்… இப்படி சினிமாப் பெண்களுக்கு அரிதாரம் பூசப்படுகிறது. இதுவரை சமூகம் பெண்களுக்கு என வரைந்து வைத்திருக்கும் கோடுகளை தாண்டாமல் திரைக்கதை அமைத்து அவர்கள் சகித்துக் கொள்ளும் தியாகிகள் அல்லது கோடுகளை தாண்டும் தவப் புதல்விகளாகவும் எடுத்தியம்பியது. ேகாடுகளை கண்டு கொள்ளாமல் தனது தீரம் உள்ள வரை எல்லையற்று இயங்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். அப்படியொரு பெண் ‘பிரபாவதி’. தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக ஆயுதம் எடுக்கும் அவளது கதையே ‘பிரபா’. பூனைகள் கூடிப் போராடி எலிகளுக்கு விடுதலை ...

Read More »

யானை மீது கம்பீரமாய் பிரபாஸ்

இந்திய அளவில் அதிக தொகையை வசூல் செய்த தென்னிந்திய சினிமா பாகுபலி படம் தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது. தற்போது பாகுபலி படத்தின் முக்கிய பணியான கிராபிக்ஸ் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் எடிட்டிங்,ட ப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பாகுபலி படத்தின் ...

Read More »

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சினேகா

நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் திரைத்துறையினரிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் கண்டங்களையும், எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகை சினேகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘என்னுடைய துறையில் பணியாற்றும் சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலட்சுமி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள் எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் என்பதனை உறுதிபடுத்திக்கொள்கிறேன்.  எந்தவித பயமின்றி நடந்ததை வெளிப்படையாக ...

Read More »

அடக்கி வாசிக்க நினைத்தாலும் பேச வைக்கிறார்கள்

தனது நற்பணி இயக்கத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டதற்கு கமல் ஆக்ரோஷத்துடன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் வரை கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து விமர்சித்ததற்காக கமல் நற்பணி இயக்கத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இனி மக்கள் ...

Read More »

நான் முதலமைச்சராக ரசிகர்கள் விரும்புகிறார்கள் : பவர் ஸ்டார் சீனிவாசன்

பவர் ஸ்டார் சீனிவாசன் தான் முதலமைச்சராவதற்கு ரசிகர்கள் விரும்புவதாக கூறியுள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது ‘சிரிக்க விடலாமா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை காவியன் என்பவர் இயக்கியுள்ளார். நிதின் சத்யா, மகாநதி சங்கர், சந்தான பாரதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, இன்று முதலமைச்சராவதற்கு எவ்வளவு கஷ்டம், எவ்வளவு அடிதடி, எவ்வளவு சண்டையெல்லாம் நடக்கிறது. இப்படியெல்லாம் நடக்கும்போது நானும் ஒரு படத்தில் ...

Read More »

கமல்ஹாசன் கவிதை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தரித்து, நடிகர் கமல்ஹாசன் பெயரால் இணையதளத்தில் உலாவரும் நேர்த்தியான, கருத்தாழம் மிக்க அற்புத வரிகளால் இயற்றப்பட்ட கவிதை பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், அடுத்தடுத்து மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும், எதிர்பாராத திருப்புமுனைகளை சந்தித்துவரும் தமிழக ஆட்சியைப் பற்றியும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார். சில பேட்டிகளிலும் தனது மனதுக்கு சரி என்று ...

Read More »

நல்ல பாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன்! – சோனம் கபூர்

நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். இந்தி நடிகை சோனம்கபூர் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள யுடிஏ நிறுவனத்துடன்  ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் அவருக்கு பொருத்தமான ஹாலிவுட் படவாய்ப்பை தேடிவருகிறார்கள். இது குறித்து சோனம்கபூர் அளித்த பேட்டியில், “ இந்தி பட உலகம் ஆனாலும், ஹாலிவுட் என்றாலும் நல்ல பாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். என்னை தேடிவரும் எல்லா  படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டேன். சீன படம் உள்பட எந்த ...

Read More »