07 ஆண்டுகளுக்கு திரையில் இணையும் காதல் ஜோடி!

பாலிவுட்டில் பிரபலமான காதல் ஜோடி அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இருவரும் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறந்த காதல் தம்பதிகளாக விளங்கும் அபிஷேக்-ஐஸ்வர்யா ராய் ஜோடி, ‘குரு’, ‘ராவண்’, ‘குச் நா கஹோ’ உள்ளிட்ட படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது இவர்கள் ஜோடியில் ‘குலாப் ஜாமூன்’ திரைப்படம் உருவாகிவிருக்கிறது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் இயக்கவிருக்கிறார்.

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இயக்குனர் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 7 ஆண்டிகளுக்கு பின் மீண்டும் இணையும் காதல் ஜோடியை ரசிகர்கள் எதிர்பபார்த்துக் காத்திருக்கின்றனர்.