திரைமுரசு

இனி குத்தாட்டம் போட மாட்டேன்: கேத்தரின் தெரசா

இனி சினிமாவில் குத்தாட்டம் ஆடும் காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கேத்தரின் தெரசா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் கேத்தரின் தெரசா. சமீபத்தில் ஆர்யாவுக்கு ஜோடி சேர்ந்து ‘கடம்பன்’ படத்தில் நடித்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் 2-வது நாயகியாக நடிக்கவே அதிக வாய்ப்பு வருகிறது. இது தவிர படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி வருகிறார். அடுத்து பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கும் ‘ஜெய ஜானகி நயகா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட ...

Read More »

சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்கு விருது!

அபுதாபியில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது. அபுதாபி சுற்றுலா ஆணையத்தின் ஆதரவில் இந்த ஆண்டின் (2017) தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள் நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் சிறந்த ...

Read More »

பாடகி சுசித்ரா வெளியிட்ட புதிய காணொளி

சினிமாவில் பல படங்களில் பின்னணி பாடியிருப்பவர் சுசித்ரா. அதோடு தனது டுவிட்டரிலும் அவ்வப்போது கருத்துக்களையும் பதிவிட்டு வருவார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசித்ராவின் டுவிட்டரில் சில பிரபல நடிகர் நடிகைகளின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதையடுத்து, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ எனக்கு வேண்டாதவர்கள் தான் எனது டுவிட்டரை ஹேக் செய்து இந்த மாதிரி வீடியோக்களை எனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதையடுத்து, ...

Read More »

அடர்ந்த காட்டுக்குள் ‘சூறாவளி’

மலையாள இயக்குனர் குமார் நந்தா இயக்கத்தில் கேரளாவில் அடர்ந்த காட்டுக்குள் ‘சூறாவளி’ என்ற படம் உருவாகவுள்ளது. மலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள். அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர்தான் இயக்குனர் குமார் நந்தா. மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான ...

Read More »

அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் சம்பளம் உயர்வு

அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் சம்பளம் உயர்ந்து இருக்கிறது. கதாநாயகிகளுக்கு முதல் வாய்ப்பு கிடைப்பதுதான் பெரும் கஷ்டம். அதன்பிறகு மளமளவென படங்கள் குவியும். இந்தி நடிகைகள் அவர்கள் மொழி படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தென்னிந்திய நடிகைகள் தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் கலக்குகிறார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனி சம்பளமும் நிர்ணயித்து உள்ளனர். படங்கள் வெற்றி பெற்றால் சம்பள தொகையை ஏற்றி விடுகிறார்கள். சில நடிகைகள் நகை கடைகள் திறப்பது, வணிக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவர்களாக இருப்பது என்றும் சம்பாதிக்கிறார்கள். ...

Read More »

‘காலா’ படத்துக்காக ரஜினியின் புதிய முயற்சி

பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா’ படத்துக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் ‘2.0’ படத்தை பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், அந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய முறையில் விளம்பரப்படுத்துகின்றனர். இதே போல் பல்வேறு வழிகளில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘2.0’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ...

Read More »

‘சங்கமித்ரா’ இளவரசியாக ஹன்சிகா ?

சுந்தர்.சி இயக்கவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் சுருதிஹாசன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இதில், ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இளவரசியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் அந்த கதாபாத்திரத்திற்காக லண்டனில் வாள் பயிற்சியும் பெற்றார். இந்நிலையில், படத்தில் இருந்து சுருதிஹாசன் விலகியதாக தகவல் வந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் அதனை உறுதி செய்தது. ...

Read More »

‘விக்ரம் வேதா’ கதையை கூறிய விதத்தில் புதுமை: விஜய் சேதுபதி

போலீஸ் – ரவுடி கதை தான். புதிதாக எதுவுமே இல்லை தான். ஆனால், சொன்ன விதம் புதுமையாக இருக்கும் என்று ‘விக்ரம் வேதா’ பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி கூறினார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விக்ரம் வேதா’. ஜூலை 7-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜய் சேதுபதி பேசியதாவது: “நடிப்பில் சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்த இடம் ‘விக்ரம் வேதா’ ...

Read More »

மகள் நடிகை ஆவதில் விருப்பம் இல்லை: ஸ்ரீதேவி

தன்னுடைய மகள் தன்னைப்போல் நடிகை ஆவதில் துளியும் விருப்பமில்லை என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். ஸ்ரீதேவி இந்தியில் நடித்து இருக்கும் படம் ‘மாம்’. தமிழிலும் வெளியாகும் இந்த படத்தை ரவிஉத்யவார் இயக்கி இருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஸ்ரீதேவி… “ ‘மாம்’ படம் தாய்-மகள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான கதை. இந்த கதையை கேட்டதுமே நடிக்க சம்மதித்து விட்டேன். தமிழிலும் இந்த படம் வெளியாகிறது. தமிழ் பட உலகம் எனக்கு ஆதரவு ...

Read More »

ஸ்ருதி ஒன்னும் சங்கமித்ராவில் இருந்து தானா விலகவில்லை!

சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாஸன் ஒன்னும் தானாக வெளியேறவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கும் வரலாற்று சிறப்புமிக்க படம் சங்கமித்ரா. இந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து வெளியேறினார். கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா சார்பில் கலந்து கொண்ட பிறகு படத்தில் இருந்து விலகினார் ஸ்ருதி. கதையை முழுமையாக தெரிவிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேறுவதாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்தார். ஆனால் தயாரிப்பு தரப்பில் தற்போது வேறு விதமாக ...

Read More »