திரைமுரசு

ரோஜா 2-ம் பாகத்தை இயக்க மணிரத்னம் திட்டம்?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ரோஜா படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பிறகும் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து போர்க்கள காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது என்றும் நடிகர்களின் நெருக்கமான காட்சிகளும் உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கு அதிக எண்ணிக்கையில் பெப்சி தொழிலாளர்களும் தேவைப்படுவார்கள். ஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்புகளில் ...

Read More »

முதன்முறையாக தந்தை விக்ரமுடன் கூட்டணி சேரும் துருவ்?

ஆதித்ய வர்மா படம் மூலம் நடிகராக அறிமுகமான துருவ், அடுத்ததாக தந்தை விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் தந்தையும் மகனும் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் என கூறப்பட்டது. இதனிடையே விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க ...

Read More »

காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா?

காக்கா  முட்டை படத்தில் சிறுவர்களாக நடித்திருந்த விக்னேஷ்-ரமேஷ் ஆகிய இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தனுஷ் தயாரிப்பில், கடந்த 2014-ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காக்கா முட்டை’. குப்பத்து பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள், உயர்ந்த வர்க்கத்தினரால் சாப்பிடப்படும் உணவான பீட்சாவை சாப்பிட எடுக்கும் முயற்சிகளை கதையாக கொண்டு இயக்கியிருந்தார் மணிகண்டன். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. இதில் சிறுவர்கள் விக்னேஷ்-ரமேஷ் இருவரும் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன்-தம்பியாக ...

Read More »

இளையராஜாவுக்கு சீனு ராமசாமி எழுதிய வாழ்த்துப்பா

இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்து கூறியுள்ளார். இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்து கூறியுள்ளார். இளையராஜா, சீனு ராமசாமி, Ilayaraja, Seenu Ramasamy இசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்துப்பா ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இசைக்கு ஒரு வாழ்த்துப்பா… ……………………………………….. எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப் ...

Read More »

கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா?

 கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் சம்பாத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரங்கினால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைபட்டு உள்ளது. படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி படமாக்க போகிறாரோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் இணைய தள கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது மணிரத்னம் கூறியதாவது: “டிஜிட்டல் தளம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவம் அலாதியானது. ...

Read More »

சந்திரமுகி 2 குறித்து சிம்ரன் அதிரடி டுவிட்

சந்திரமுகி 2-ம் பாகத்தில் சிம்ரன் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் அதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை சமீபத்திய பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார். மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் பொருத்தமாக ...

Read More »

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் அட்லீயின் அடுத்த படம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ, தனது அடுத்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இயக்குனர் ...

Read More »

தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? – பிந்து மாதவி

தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான பிந்துமாதவி, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த பிந்து மாதவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அடுத்ததாக மாயன், யாருக்கும் அஞ்சேல் போன்ற படங்களில் நடித்துவந்த அவர், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ளார். இந்நிலையில் நடிகை பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைப்பதையும் ...

Read More »

மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மன்னிப்பு கோரியுள்ளார். ஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள். ப்ரெட்ரிக் என்பவர் இயக்கிய இப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் ” AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு ...

Read More »

முதல் பார்வை: பொன்மகள் வந்தாள்!

ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் ...

Read More »