திரைமுரசு

முதன்முறையாக மேடை நாடகத்தில் நடிக்கும் சிபிராஜ்

தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களுள் ஒருவரான சிபிராஜ், முதன்முறையாக மேடை நாடகத்தில் நடிக்க உள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தீரன் சின்னமலை. அவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்க உள்ளனர். இயக்குனர் ஸ்ரீராம் இயக்கும் இந்த நாடகத்தில் தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்க நடிகர் சிபிராஜ் ஒப்பந்தமாகியிருக்கிறார். சினிமா நடிகரான சிபிராஜ், மேடை நாடகத்தில் நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இதுகுறித்து சிபிராஜ் கூறியதாவது: “சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வாழ்க்கை ...

Read More »

இனி கவர்ச்சி இல்லை – சமந்தா திட்டவட்டம்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் சமந்தா, இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என கூறி உள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு: ‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன. இப்போது அந்த நிலைமை மாறி இருக்கிறது. நடிப்பு திறமையை வெளியே கொண்டு வருகிற மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். நடிகையாக எவ்வளவு உயரத்துக்கு ...

Read More »

சோனு சூட் ஆரம்பித்து வைத்த புதிய சேவை…

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், புதிய சேவையை ஆரம்பித்து வைத்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சோனுசூட். இவர் சினிமாவில் வில்லனாக இருந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கொரோனா காலகட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார். தற்போது மேலும் ஒரு புதிய பொது சேவையை சோனுசூட் ...

Read More »

எம்.ஜி.ஆர். பிறந்தநாள்… ‘தலைவி’ படக்குழு வெளியிட்ட புதிய புகைப்படம்

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளான இன்று தலைவி படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 104-வது ...

Read More »

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை அடுத்து மாநாடு, பத்து தல ஆகிய படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதையடுத்து சுதாகொங்கரா இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுதாகொங்கரா இதற்கு முன் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ...

Read More »

அவர் அளவுக்கு பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!

மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், அவர் அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தில் பூங்கொடியாக நடித்து பலரைக் கவர்ந்தார். மாஸ்டர் படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் விஜய் பற்றி கூறியிருப்பதாவது, ‘ஒவ்வொரு நடிகருக்குமே தனிப் பாணி உள்ளது என நினைக்கிறேன். விஜய்யைப் பொறுத்தவரை அவர் எப்படித் தயார் செய்து ...

Read More »

விஜய் சேதுபதி பட சர்ச்சை – சீமானிடம் பேசிய பார்த்திபன்

விஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார். தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 11-ம் தேதி ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நாம் தமிழர் கட்சியினரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. அதில் ‘ராசிமான்’ என்ற ...

Read More »

‘ஆரி’ய டைட்டில் வின்னர் ஆக்குங்க – பிரபல நடிகர் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டுள்ள நடிகர் ஆரிக்கு நிறைய ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்குமாறு பிரபல நடிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4-ம் திகதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த வார இறுதியில் யார் வெற்றியாளர் என்பது தெரியவரும். தற்போதைய சூழலில் நடிகர் ஆரி வெற்றியடைய அதிக வாய்ப்புகள் ...

Read More »

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்

தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பைகார் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காகும். இதில் விஜய் சேதுபதி காமெடி வேடத்தில் நடிக்க உள்ளதாக ...

Read More »

சிட்னி மைதானத்தில் ஆரி ரசிகர்கள் செய்த செயல்….

சிட்னி மைதானத்தில் பிக்பாஸ் ஆரிக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் ரசிகர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரமே மீதமுள்ள நிலையில், ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் ஆரி தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவருக்கான ...

Read More »