திரைமுரசு

நயன்தாரா படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள்?

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கும் “நெற்றிக்கண்” படத்தில் நடித்து வருகிறார். தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் ...

Read More »

100% காதல் – விமர்சனம்

ஈகோவால் காதலர்களுக்கு இடையே நிகழும் பிரச்சினைகள்தான் ‘100% காதல்’. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். படிப்பில் எப்போதுமே தான் ஃபர்ஸ்ட், பெஸ்ட் என்ற ஈகோ அவருக்குள் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கிராமத்தில் ஒழுங்காகப் படிக்காததால், ஜி.வி.பிரகாஷ் படிக்கும் கல்லூரியில் சேர வருகிறார், அவருடைய முறைப்பெண் ஷாலினி பாண்டே. ‘மாமா… மாமா…’ என ஜி.வி.பிரகாஷையே சுற்றிவரும் ஷாலினி பாண்டேவை, அவர் கண்டு கொள்வதே இல்லை. ஒழுங்காகப் படிப்பு வராததால் ஃபெயிலாகி விடுவேன் என ஷாலினி ...

Read More »

ஈழப் பெண் நடிகையை கியூ பிரிவு காவல் துறையினர் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்!

கடல் குதிரை படத்தின் கதாநாயகியை காவல் துறை  சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், உச்ச நீதிமன்றில்  தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். 1993-ம் ...

Read More »

கலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி!

கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜனிடம் பெற்றுக் கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி. தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. அப்போது 2017-ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. விஜய் ...

Read More »

சமுத்திரகனிக்கு குவியும் வில்லன் வேடங்கள்!

பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனிக்கு, தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வில்லன் வேடங்கள் கிடைத்துள்ளதாம். தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரகனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ராம்சரணும், ஜுனியர் என்.டி.ஆரும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்காக சமுத்திரகனி 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சமுத்திரகனி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் ...

Read More »

கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா

ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘தம்பி’ என்று ...

Read More »

தவம்! -விமர்சனம்

நடிகர் வசி ஆசிப் நடிகை பூஜா ஸ்ரீ இயக்குனர் ஏ.ஆர்.சூரியன், ஆர்.விஜயானந்த் இசை ஸ்ரீகாந்த் தேவா ஓளிப்பதிவு வேல்முருகன் பூஜாஸ்ரீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். நிறுவனத்தின் நிர்வாகி வீட்டு திருமணத்துக்காக அன்னவயல் கிராமத்துக்கு அலுவலக நண்பர்களுடன் செல்கிறார். அங்கு ஏடூஇசட் என்ற நிறுவனம் நடத்தி திருமண ஏற்பாடுகள் செய்து வரும் வசியை சந்திக்கிறார். ஊரில் சமூக விரோத செயல்களை செய்துவரும் விஜயானந்தை பார்த்து கிராமமே பயப்படுகிறது. பூஜாஸ்ரீயோ துணிந்து அவரை போலீசில் சிக்க வைக்கிறார். இதனால் பூஜாஸ்ரீயை கொல்ல வில்லன் கும்பல் துரத்துகிறது. இந்நிலையில் ...

Read More »

கவுதம் கார்த்திக்கை நெகிழவைத்த குழந்தைகள்!

நடிகர் கவுதம் கார்த்திக் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமான கவுதம் கார்த்திக் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். வை ராஜா வை, இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமவுலி, இந்திரஜித், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கவுதம் கார்த்திக் சமீபத்தில் தேனி மாவட்டத்துக்கு சென்று ரசிகர்களை சந்தித்தார். திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். ரசிகர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். ...

Read More »

ஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்!

ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. தற்போது கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். அடுத்து பொன்மகள் வந்தாள் என்ற படமும் ஜோதிகா கைவசம் உள்ளது. ...

Read More »

தள்ளிப்போகும் நயன்தாரா திருமணம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால், அவரது திருமணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா ‘பிகில்’ படத்துக்கு பிறகு ரஜினியுடன் ‘தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையான ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து திருமணத்துக்கு தயாராவதாக கூறப்பட்டது. நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக ...

Read More »