திரைமுரசு

திருமணம் எப்போது? -மனம் திறந்த பிரபாஸ்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார். பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படம் சாஹோ. அருண் விஜய், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸ் அளித்த பேட்டி: பாகுபலி படத்துக்கு பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடித்தது ஏன்? பாகுபலிக்கு பிறகு எளிமையான காதல் கதையில் தான் நடிக்க திட்டமிட்டேன். இந்த கதையை கேட்டதும் ஆச்சர்யம் ஆனேன். எல்லோருக்கும் பிடித்ததால் அது படமாகவும் மாறியது. ...

Read More »

தேசிய விருது பெற்ற படத்தில் பிரசாந்த்!

சமீபத்தில் வெளியான தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற பிரபல இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கிறார். இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் ‘அந்தாதுன்’ திரைப்படம் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற ...

Read More »

அதிரடியில் களமிறங்கிய விஜய் சேதுபதி!

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சங்கத்தமிழன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற நட்சத்திர ...

Read More »

பாடகி ஆனார் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா!

ஐபிஎஸ் அதிகாரி ரூபா பேயலதாதா பீமண்ணா என்ற கன்னட படத்தில் முதன்முறையாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். சசிகலா வழக்கில் சிறையில் நடந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. இவர் திடீரென சினிமாவுக்கு வந்துள்ளார். நடிக்க வரவில்லை. பாடகியாக அறிமுகமாகியுள்ளார். டிவி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடுவதை பார்த்து பேயலதாதா பீமண்ணா கன்னட பட குழுவினர் இவரை பாட அழைத்தனர். அதன்பேரில் இந்த படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் ரூபா பாடினார். இதுகுறித்து ரூபா கூறியதாவது:- ‘இது டூயட் பாடல் கிடையாது. ...

Read More »

விலங்குகளுக்கு நீதி வேண்டும்- அனுஷ்கா சர்மா

நாடு முழுவதும் வன்கொடுமைக்குத் தள்ளப்படும் விலங்குகளுக்கு நீதி வேண்டும் என நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் மும்பையில் லக்கி என்ற நாய் ஒன்றை சில விஷமிகள் அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தால் நடிகை அனுஷ்கா சர்மா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் 60 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அவர் விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுக்கும் விதமாக கடுமையான சட்டங்கள் ...

Read More »

தீவிர பரத நாட்டிய பயிற்சியில் கங்கனா!

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத் தீவிரமாக பரத நாட்டியம் பயிற்சி பெற்று வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் முன்னரே அறிவித்தபடி தலைவி என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்க ...

Read More »

தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை! – கீர்த்தி சுரேஷ்

மகாநடி படத்தில் சிறந்த நடிகையாக தேர்வு செய்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ், தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். டெல்லியில் 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ‘மகாநடி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வேடத்தில் நடத்து இருந்தார். கீர்த்திசுரேசுக்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருடைய சந்தோ‌ஷத்துக்கு இடையே, தேசிய விருது வென்றது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:- “ரொம்ப ...

Read More »

தேசிய விருது பட்டியல் – புறக்கணிக்கப்பட்ட தமிழ் படங்கள்!

66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழ் படங்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்காக மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...

Read More »

66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டதில் சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. இந்தியில் அந்ததுன், மலையாளத்தில் சுடானி பிரம் நைஜீரியா, கன்னடத்தில் நதிசராமி படங்களுக்கு கிடைத்துள்ளது. ...

Read More »

காஜல் அகர்வாலுக்கு கட்டுப்பாடு விதித்த ‌ஷங்கர்!

இந்தியன் 2-வில் எனது கதாபாத்திரம் பற்றி பேட்டிகளில் தெரிவிக்ககூடாது என இயக்குனர் ‌ஷங்கர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்தியில் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. சென்னை வந்த காஜல் அளித்த பேட்டி: சூப்பர் ஹீரோ படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க தான் காத்திருக்கிறேன். நமது நாட்டிலும் அதுபோன்ற படங்கள் விரைவில் தயாராகும் என்ற நம்பிக்கை உள்ளது. பாரிஸ் ...

Read More »