திரைமுரசு

சுஷாந்த்தின் தற்கொலை முடிவுக்கு காரணம்

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்கின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் பேசியுள்ளார். பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 34 வயதாகும் சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து வீடியோ ஒன்றை ...

Read More »

திரிஷாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவின் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார். இந்த நிலையில், நடிகை திரிஷா, சமூக ...

Read More »

அது எனக்கு பெரியதாக தோன்றவில்லை!

பெண் குயின் திரைப்படம் வெளியீட்டுக்கு  தயாராகி இருக்கும் நிலையில், அது எனக்கு பெரியதாக தோன்றவில்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் தேதி நேரடியாக ரிலீசாக இருக்கிறது. இப்படம் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்க காரணம்? ...

Read More »

இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்?…

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில், நடிகை அமலாபால் இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது திரை உலகை சேர்ந்தவர்களும் கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த்சிங் மறைவு குறித்து ஏராளமான பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு சிலர் ...

Read More »

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கண்ணன் இன்று காலமானார். பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் (69). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். பாரதிராஜாவின் 40 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று(ஜுன் 13) மதியம் அவரது உயிர் பிரிந்தது.  கண்ணனின் உடல் ...

Read More »

மகளை தொட முடியாமல் தவிக்கும் நடிகை

தனிமைப்படுத்தப்பட்டதால் தன் மகளை தொட முடியாமல் தவிப்பதாக பிரபல நடிகை கூறியிருக்கிறார். ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று விட்டு கேரளா திரும்பிய மலையாள நடிகர் பிருத்விராஜை 14 நாட்கள் தனிமைப்படுத்தினர். தற்போது தனிமைப்படுத்தல் முடிந்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி மனைவி, குழந்தையை சந்தித்தார். இதுபோல் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய நடிகை அஞ்சலி நாயரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இவர் தமிழில் நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது டிஜிபூட்டி என்ற ...

Read More »

எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க – ஹன்சிகா

பிரபல நடிகையாக இருக்கும் ஹன்சிகா, எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார். நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து ‘மகா’ படத்தில் நடித்துள்ளார்.  இந்த  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது ஹன்சிகாவின் 50வது படமாகும். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பகிரப்பட்டது. அதற்கு ‘அடக்கடவுளே ! அவர் யார் ?’ என்று ஹன்சிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More »

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஆபாச பட நடிகையாக மாறியுள்ளார்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீராங்கனை, பணத்திற்கு ஆசைப்பட்டு ஆபாச பட நடிகையாக மாறியுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ரினி கிரேசி. இவருக்கு 25 வயது ஆகிறது. ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். கொரோனா ஊரடங்கினால் கார் பந்தயங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ரினி கிரேசிக்கு வருமானம் இல்லை. இந்த நிலையில் அவருக்கு ஆபாச படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படங்களில் நடித்தால் அதிக பணம் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். முதலில் தயங்கிய ரினி கிரேசி ...

Read More »

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் !-அன்பு கட்டளையிட்ட விஜய்

 கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிற்குமாறு நடிகர் விஜய், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் விஜய்க்கு வருகிற 22ந்தேதி பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள், அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்தல், கொடி தோரணங்கள் கட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இது பற்றிய தகவல் நடிகர் விஜய்க்கு தெரியவந்தது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி ...

Read More »

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை….

அமெரிக்காவில் நிறவெறியால் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிறவெறியால் நடந்த இந்த படுகொலைக்கு எதிராக இந்திய திரைப்பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து நிறவெறிக்கு ...

Read More »